|
||||||||||||||||||
துள்ளி விளையாடிய வெள்ளை முயல். |
||||||||||||||||||
வெள்ளை முயலுக்கு தன்னோட கண்களை நம்ப முடிய வில்லை..
பச்சைப்பட்டு விரிச்சமாதிரி புல்லு வளர்ந்திருக்கிறது. ஒரு மாசத்துக்கான தீனியானது. இந்த முதுமலைக்காட்டில் இப்படியொரு இடம் இருக்கிறது யாருக்கும் தெரிய வில்லை போலிருக்கே...
வெள்ளை முயலுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது, அது அந்தப் புல் மெத்தயில் கும்மாளம் போடத் தொடங்கியது. உருண்டது, புரண்டது. எம்பி எம்பிக் குதித்தது. கொஞ்சம் புல்லைக் கடிச்சு தின்றது. மறுபடியும் கும்மாளம் போடத் தொடங்கியது.
ஒரு முறை அப்படிக் குதித்தப்போது ஒரு புல்லோட நுனி அதோடு கால்லில் குத்தியது. அதுவும் நல்லா குத்தயிருந்தது. நல்ல வலி ..காலி வேற இரத்தம் வந்திருந்தது
என் காலில் இரத்தம் வறுவதற்கு இந்தப் புல்லுதான் காரணம் இதை சும்மா விடக்கூடாது. என்ற்று நேரா தீ இடம் போனது.
"தீயே தீயே நான் விளையாடும் போது என் காலில் குத்தின புல்லை எரிச்சிடு... " என்று கேட்டது.
"நீ என்ன செய்தாய் என்று முதலில் சொல்" என்றது தீ. வெள்ள முயலல் நடந்ததெல்லாம் சொல்லியது.
"எம்பி எம்பிக் குதித்து புல்லு மேலே விழுந்தால் புல்லு குத்தாமல் என்ன செய்யும். தப்பு பண்ணினவன் நீதான். அதனல் நான் புல்லை எரிக்கமாட்டேன்" என்றது தீ.
வெள்ள முயலுக்குத் தீ மேல் கோபம் கோபமா வந்தது. உன்னை என்ன செய்யுறேன் பார் தண்ணீரிடம் போனது.
"தண்ணீ தண்ணீ நான் விளையாடும் போது என் காலில் குத்தின புல்லை எரிக்காத தீயை அணைத்து விடு" என்றது முயல்.
"என்ன நடந்தது விவரமாக சொல் என்றது தண்ணீ.. முயல் நடந்ததை சொல்லியது.
"அப்ப நீதான் தப்புப்பண்ணினவன். புல்லு மேலே எம்பிக் குதிச்சதனாலே புல்லு காலில் குத்தியது. பாவம் புல்ல ஏன் எரிக்கணும். அப்படி எரிக்காததுக்கு தீயை நான் ஏன் அணைக்கணும் "என்றது தண்ணீ.
முயலுக்குத் தண்ணீர் மேலேயும் கோபம் வந்தது. அது நேரா யாருகிட்ட போயிருக்கும்ணு நினைக்கிறீங்க.. மண்வெட்டி கிட்டே போனது.
"மண்வெட்டி மண்வெட்டி. நா விளையாடும் போது என் காலில் குத்தின புல்,ஏரிக்காத தீயை அணைக்காத தண்ணீரை வெட்டிவிடு" என்று கேட்டது.
மண்வெட்டியும் என்ன நடந்தது என்று கேட்டது.
புல்லில் விளையாடினதும், காலில் புல்லு குத்தினதும், புல்ல எரிக்கச் சொல்லித் தீ கிட்ட போனதும். தீ மாட்டேண்ணு சொன்னதும். தீ அணைக்கச் சொல்லி தண்ணீர்கிட்ட போனது வரைக்கும் முயல் சொல்லியது.
அதயெல்லாம் கேட்ட மண்வெட்¥டி தீயும் ,தண்ணியும் சொன்னதுதான் சரி. அதை தான் நானும் சொல்லப் போறேன். நான் தண்ணீரை வெட்டிவிட மாட்டேண்ணு மண்வெட்டி சொல்லியது. முயலுக்குக் கோபமோ கோபம். இரு உன்னை ஒரு வழி பண்றேண்ணு சொல்லி நேரா கொல்லர் கிட்டே போனது.
"கொல்லரே கொல்லரே... நான் விளையாடும் போது என் காலில் புல்ல எரிக்காத தீயை அணைக்காத தண்ணீரை ,வெட்டிவிடாதா மண்வெட்டியோட வாயை மழுங்கடிச்சிருங்க" என்றது முயல்
முயலும் நடந்ததையெல்லாம் சொல்லியது.
அதையெல்லாம் கேட்ட கொல்லரும் "ஆமா அவங்க சொல்றதுதான் சரி. நான் மண்வெட்டியோட வாயை மழுங்கடிக்க மாட்டேன்ணாரு.
வெள்ள முயலுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இப்ப அது யாருக்கிட்ட போயிருக்கும்னு யோசிங்க. அப்படி போனா அவருகிட்ட எப்படி சொல்லியிருக்குணும் நீங்களும் சொல்லிப் பாருங்க. சரியா? |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|