|
|||||
பிரசித்தி பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி மரணம்! |
|||||
பிரசித்தி பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி மரணம் அடைந்தார். தஞ்சை மாவட்டம் புஞ்சை என்னும் சிற்றூரில் பிறந்து கலைப்பணிகளால் புகழ் பெற்றவர் கூத்துப்பட்டறை நிறுவனர், ந.முத்துசாமி. சிறுகதை எழுத்தாளராக இருந்த இவர் 1968 முதல் நாடக வளர்ச்சிக்கு எனத் தன் வாழ்வை ஒப்படைத்தார். ‘கூத்துப்பட்டறை‘ என்னும் கலைவளர் அமைப்பு 1977ஆம் ஆண்டு இவரால் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம், ஐ.நா.வின் கல்வி அறிவியல்-பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ), ஃபோர்டு அறக்கட்டளை, பிரான்சின் கலைப்பண்பாட்டு அமைப்பான அல்லயன்ஸ் பிரான்சே, கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. தெருக்கூத்து முதலான கலை வளர்ச்சியிலும் கலைஞர்களை உருவாக்குவதிலும் முதன்மை இடம் பெறும் இவ்வமைப்பில் பயிற்சி பெற்றோர் பலர் திரைத்துறையிலும் ஒளிவிடுகின்றனர். நாசர், தலைவாசல் விஜய், சண்முகராஜன், கலைராணி, விஜய சேதுபதி, விமல், விதார்த், தேவி, மீனாட்சி, பசுபதி, போன்றோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். நீர்மை என்னும் சிறுகதைத் தொகுப்பு, காலம் காலமாக, அப்பாவும் பிள்ளையும், நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், படுகளம், உந்திச்சுழி, கட்டியக்காரன்நற்றுணையப்பன் ஆகிய நாடகங்கள், ந.முத்துசாமி நாடகங்கள் (21 நாடகங்கள்,ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட பெருந்தொகுப்பு), அன்று பூட்டியவண்டி (தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்) ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். சங்கீத நாடக அகாடமியின் விருது (2000), ந.முத்துசாமி கட்டுரைகள் நூலிற்கான சிறந்த நூல் விருது (2005), இந்திய அரசின் தாமரைத்திரு விருது (பத்மஸ்ரீ 2012) ஆகிய விருதுகளைப் பெற்று உள்ளார். இரங்கல்கள்! |
|||||
by Mani Bharathi on 24 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|