LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பிரசித்தி பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி மரணம்!

பிரசித்தி பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி மரணம் அடைந்தார்.

தஞ்சை மாவட்டம் புஞ்சை என்னும் சிற்றூரில் பிறந்து கலைப்பணிகளால்  புகழ் பெற்றவர் கூத்துப்பட்டறை நிறுவனர், ந.முத்துசாமி.  சிறுகதை எழுத்தாளராக இருந்த இவர் 1968 முதல் நாடக வளர்ச்சிக்கு எனத் தன் வாழ்வை  ஒப்படைத்தார்.

‘கூத்துப்பட்டறை‘ என்னும் கலைவளர்  அமைப்பு 1977ஆம் ஆண்டு இவரால் தொடங்கப்பட்டது.  இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம், ஐ.நா.வின் கல்வி அறிவியல்-பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ),  ஃபோர்டு அறக்கட்டளை, பிரான்சின் கலைப்பண்பாட்டு அமைப்பான அல்லயன்ஸ் பிரான்சே, கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது.

தெருக்கூத்து முதலான கலை வளர்ச்சியிலும் கலைஞர்களை உருவாக்குவதிலும்  முதன்மை இடம் பெறும் இவ்வமைப்பில் பயிற்சி பெற்றோர் பலர் திரைத்துறையிலும் ஒளிவிடுகின்றனர்.

நாசர், தலைவாசல் விஜய், சண்முகராஜன், கலைராணி, விஜய சேதுபதி, விமல், விதார்த், தேவி, மீனாட்சி, பசுபதி,  போன்றோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

நீர்மை என்னும் சிறுகதைத் தொகுப்பு, காலம் காலமாக, அப்பாவும் பிள்ளையும், நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், படுகளம், உந்திச்சுழி, கட்டியக்காரன்நற்றுணையப்பன் ஆகிய நாடகங்கள், ந.முத்துசாமி நாடகங்கள் (21 நாடகங்கள்,ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட பெருந்தொகுப்பு),  அன்று பூட்டியவண்டி (தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்) ஆகியவற்றை இவர்  எழுதியுள்ளார்.

சங்கீத நாடக அகாடமியின் விருது (2000),  ந.முத்துசாமி கட்டுரைகள் நூலிற்கான சிறந்த நூல் விருது (2005), இந்திய அரசின் தாமரைத்திரு விருது (பத்மஸ்ரீ 2012) ஆகிய விருதுகளைப் பெற்று உள்ளார். இரங்கல்கள்!

by Mani Bharathi   on 24 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.