தேவையானவை :
கொத்தவரங்காய்- கால் கிலோ துவரம் பருப்பு- அரை கப் கடலைப் பருப்பு- கால் கப் காய்ந்த மிளகாய்- 4 மஞ்சத்தூள்- அரை டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டேபிள் ஸ்பூன் உப்பு- தேவைக்கேற்ப கடுகு- சிறிது உளுந்து - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை- ஒரு கொத்து எண்ணெய்- ஒரு குழிகரண்டி
செய்முறை :
1.பருப்புகளை ஊறவைத்து காய்ந்த மிளகாய், மஞ்சத்தூள், உப்புத்தூள் சேர்த்து கரகரப்பாக கெட்டியாக அரைக்கவும். 2.பிறகு அவற்றை இட்லி பாத்திரத்தில் அல்லது குக்கரில் வேக வைத்து நன்கு உதிர்த்து வைக்கவும். 3.கொத்தவரங்காயை சிறியதாக நறுக்கி உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். 4.கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு கறிவேப்பிலை உளுந்தை போட்டு வெடிக்கவிடவும். 5.பிறகு பெருங்காயமும் காய்ந்தமிளகாயை கிள்ளி போட்டு வறுக்கவும். 6.பிறகு அதில் வேகவைத்த காயையும் உதிர்த்த பருப்பையும் கொட்டி நன்கு கிளறி இறக்கி விடவும் .
|