LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம்

 

மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப் 
புலனைந்தின் வழியடைத் தமுதே 
ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி 
உள்ளவா காணவந்தருளாய் 
தேறலின் தெளிவே சிவபெருமானே 
திருப்பெருந்துறையுறை சிவனே 
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த 
இன்பமே என்னுடை அன்பே. 388 
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை 
ஆனந்த மாய்க் கசிந்துருக 
என்பாம் அல்லா இன்னருள் தந்தாய் 
யானிதற் கிலனொர்கைம்மாறு 
முன்புமாய்ப் பின்னும் முழுதுமாய்ப் 
பரந்த முத்தனே முடிவிலா முதலே 
தென்பெருந்துறையாய் சிவபெருமானே 
சீருடைச் சிவபுரத்தரைசே. 389 
அரைசனே அன்பர்க் கடியனே னுடைய 
அப்பனே ஆவியோ டாக்கை 
புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் 
பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே 
திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே 
திருப்பெருந்துறையுறை சிவனே 
உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே 
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390 
உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் 
உணர்வுக்குந் தெரிவரும் பொருளே 
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே 
எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே 
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே 
திருப்பெருந்துறையுறை சிவனே 
குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக் 
குறுகினேற் கினியென்ன குறையே. 391 
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே 
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே 
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தேன் 
மனத்திடை மின்னிய மன்னே 
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும் 
திருப்பெருந்துறையுறை சிவனே 
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் 
இனியுன்னை யென்னிரக் கேனே. 392 
இரந்திரந் துருக என்மனத் துள்ளே 
ஏகின்ற சோதியே இமையோர் 
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் 
திருப்பெருந்துறையுறை சிவனே 
நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால் 
ஆயவை அல்லையாய் ஆங்கே 
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் 
கண்ணுறங் கண்டுகொண்டின்றே. 393 
இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக் 
தெழுகின்ற ஞாயிறே போன்று 
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் 
நீயலால் பிறிது மற்றின்மை 
சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம் 
திருப்பெருந்துறையுறை சிவனே 
ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை 
யாருன்னை அறியகிற்பாரே. 394 
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் 
பரந்ததோர் படரொளிப் பரப்பே 
நீருறு தீயே நினைவதேல் அரிய 
நின்மலா நின்னருள் வெள்ளச் 
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே 
திருப்பெருந்துறையுறை சிவனே 
ஆருற வெனக்கிய காரய லுள்ளார் 
ஆனந்தம் ஆக்குமென் சோதி. 395 
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் 
ஒருவனே சொல்லுதற் கரிய 
ஆதியே நடுவே அந்தமே பந்தம் 
அறுக்கும் ஆனந்தமா கடலே 
தீதிலா நன்மைத் திருவருட்குன்றே 
திருப்பெருந்துறையுறை சிவனே 
யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய் 
வந்துநின் இணையடி தந்தே. 396 
தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச் 
சங்கரா ஆர்கொலோ சதுரர் 
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் 
யாதுநீ பெற்றதொன் றென்பால் 
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் 
திருப்பெருந்துறையுறை சிவனே 
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் 
யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. 397 

 

மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப் 

புலனைந்தின் வழியடைத் தமுதே 

ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி 

உள்ளவா காணவந்தருளாய் 

தேறலின் தெளிவே சிவபெருமானே 

திருப்பெருந்துறையுறை சிவனே 

ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த 

இன்பமே என்னுடை அன்பே. 388 

 

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை 

ஆனந்த மாய்க் கசிந்துருக 

என்பாம் அல்லா இன்னருள் தந்தாய் 

யானிதற் கிலனொர்கைம்மாறு 

முன்புமாய்ப் பின்னும் முழுதுமாய்ப் 

பரந்த முத்தனே முடிவிலா முதலே 

தென்பெருந்துறையாய் சிவபெருமானே 

சீருடைச் சிவபுரத்தரைசே. 389 

 

அரைசனே அன்பர்க் கடியனே னுடைய 

அப்பனே ஆவியோ டாக்கை 

புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் 

பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே 

திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே 

திருப்பெருந்துறையுறை சிவனே 

உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே 

யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390 

 

உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் 

உணர்வுக்குந் தெரிவரும் பொருளே 

இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே 

எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே 

திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே 

திருப்பெருந்துறையுறை சிவனே 

குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக் 

குறுகினேற் கினியென்ன குறையே. 391 

 

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே 

ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே 

மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தேன் 

மனத்திடை மின்னிய மன்னே 

சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும் 

திருப்பெருந்துறையுறை சிவனே 

இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் 

இனியுன்னை யென்னிரக் கேனே. 392 

 

இரந்திரந் துருக என்மனத் துள்ளே 

ஏகின்ற சோதியே இமையோர் 

சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் 

திருப்பெருந்துறையுறை சிவனே 

நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால் 

ஆயவை அல்லையாய் ஆங்கே 

கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் 

கண்ணுறங் கண்டுகொண்டின்றே. 393 

 

இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக் 

தெழுகின்ற ஞாயிறே போன்று 

நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் 

நீயலால் பிறிது மற்றின்மை 

சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம் 

திருப்பெருந்துறையுறை சிவனே 

ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை 

யாருன்னை அறியகிற்பாரே. 394 

 

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் 

பரந்ததோர் படரொளிப் பரப்பே 

நீருறு தீயே நினைவதேல் அரிய 

நின்மலா நின்னருள் வெள்ளச் 

சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே 

திருப்பெருந்துறையுறை சிவனே 

ஆருற வெனக்கிய காரய லுள்ளார் 

ஆனந்தம் ஆக்குமென் சோதி. 395 

 

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் 

ஒருவனே சொல்லுதற் கரிய 

ஆதியே நடுவே அந்தமே பந்தம் 

அறுக்கும் ஆனந்தமா கடலே 

தீதிலா நன்மைத் திருவருட்குன்றே 

திருப்பெருந்துறையுறை சிவனே 

யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய் 

வந்துநின் இணையடி தந்தே. 396 

 

தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச் 

சங்கரா ஆர்கொலோ சதுரர் 

அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் 

யாதுநீ பெற்றதொன் றென்பால் 

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் 

திருப்பெருந்துறையுறை சிவனே 

எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் 

யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. 397 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.