LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

குடை....

சிறு வயதில்

மழை பெய்தால்தான்

எனக்கு

அதிக சந்தோசம் ....


சுவரோரம்

சாய்ந்து கொண்டு ...


கை

நீட்டி ....


கால்

நனைத்து ...


சிலசமையம்

தொப்பலாய்

நனைந்து ....


சட்டை கழற்றி

தலை துவட்டி ...


“ சுட்டித்

தலையனென்று “

என் அம்மாவிடம்

அடி வாங்கி ...


அது

ஒருவகை

சந்தோசம்...


மழை பெய்யாதபோது

என் வீட்டு

விட்டத்தில்

மடித்து வைத்த

குடை பார்த்தால் ....


எனக்கு

மழை ஞாபகம் வரும் ...


சிறு குழந்தை போல

சிறு சந்தோசம் வரும் ....


நான்

நனைந்த நாட்களும் ....


எனை

நனைத்த நிகழ்வுகளும் ....


என்

மனதிற்குள்

ஊர்வலம் நடத்தும் ...


மீண்டும்

அப்படி

நனைய மாட்டோமா

ஒரு ஆவல் வரும் ...


அது

ஒரு வகை

சந்தோசம் ...


இப்போதெல்லாம்

மழையில்லை .....


உன்

கடித – மழையில்லை ....


ஆனால்

“ மடித்து வைத்த

குடையாய் “

உன் பழைய கடிதம்

பார்த்தால் ...


எனை நீ

அங்கீகரித்த நாட்களும் ...


பெருமிதமாய்

என்னை நானே

ஏறிட்ட நேரங்களும் ...


என்னை

சினுக்கொடுத்த

உன் நேசத்தின்

வாசமும் ...


என்னை

நனைத்த

அந்த நிகழ்வுகளும் ...


என்

மனதிற்குள்

ஊர்வலம் நடத்தும் ...


மீண்டும்

அப்படி

நனைய மாட்டோமா

ஒரு ஆவல் வரும் ...


அது

ஒரு வகை

சந்தோசம் ...


எனக்கு

மழை பெய்தால்தான்

அதிக சந்தோசம் ...


இப்போதெல்லாம்

மழையில்லை ...


“ மடித்து வைத்த

குடையாய்” .....


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.