|
|||||
கூடங்குளம் 2 வது அணு உலை மின் உற்பத்தி தொடங்கியது! |
|||||
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைந்துள்ளன. இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணுமின் நிலையத்தில் 3,4 வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி 2 வது அணு உலையில் உள்ள வால்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 350 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஆயிரம் மெகாவாட்டாக எட்டப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த செப்., 20ம் தேதி 2 வது அணு உலையில் திடீரென வால்வு பழுது ஏற்பட்டது. இதையடுத்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு உலை பழுதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 26ம் தேதி மீண்டும் 220 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. ஏற்கனவே பராமரிப்பு பணிகள் காரணமாக முதலாவது அணு உலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்உற்பத்தி அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டு உள்ளது. |
|||||
by Mani Bharathi on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|