LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம்

 

குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் 
காவாய் உடையாய் கொடுவினையேன் 
உழைத்தா லுறுதியுண்டோ தான் 
உமையாள் கணவா எனை ஆள்வாய் 
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ 
பிறைசேர் சடையாய் முறையோவென் 
றழைத்தால் அருளா தொழிவதே 
அம்மானே உன்னடியேற்கே. 496 
அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன் 
கொடியே ரிடையான் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச் 
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா 
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. 497 
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை 
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே 
குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால் 
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. 498 
மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ் 
வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய் 
ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து 
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. 499 
கூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ 
தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ 
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் 
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 500 
வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ 
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் 
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் 
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. 501 
அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங் 
குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ 
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே 
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. 502 
நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய் 
மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி 
ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங் 
காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 503 
கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர 
எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால் 
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் 
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. 504 
அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே 
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய் 
புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே 
குழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. 505 

 

குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் 

காவாய் உடையாய் கொடுவினையேன் 

உழைத்தா லுறுதியுண்டோ தான் 

உமையாள் கணவா எனை ஆள்வாய் 

பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ 

பிறைசேர் சடையாய் முறையோவென் 

றழைத்தால் அருளா தொழிவதே 

அம்மானே உன்னடியேற்கே. 496 

 

அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன் 

கொடியே ரிடையான் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச் 

செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா 

உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. 497 

 

ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை 

இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே 

குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால் 

என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. 498 

 

மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ் 

வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய் 

ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து 

கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. 499 

 

கூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ 

தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ 

வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் 

தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 500 

 

வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ 

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் 

வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் 

வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. 501 

 

அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங் 

குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ 

இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே 

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. 502 

 

நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய் 

மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி 

ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங் 

காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 503 

 

கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர 

எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால் 

மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் 

அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. 504 

 

அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே 

திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய் 

புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே 

குழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. 505 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.