LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

குழந்தைகளைக் கவர்ந்த குணசீலர்

தெருவில் நடந்து கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து ஒருவர் தம்பி தலைமுடி நெறைய வளர்ந்திருக்கே முடி வெட்டிக்கிறியா ? என்றார் . பையனும் சந்தோஷமாக சரி என்றான் . ஒரு சலூனுக்கு அழைத்துப்போனார் . முதலில் அவர் தனக்கு முடி வெட்டிக் கொண்டார் . நான் கடைத்தெரு வரை போய் வருகிறேன் . அதற்குள் பையனுக்கு வெட்டுங்கள் என்று சலூன்காரரிடம் சொல்லி விட்டு நடையைக் கட்டினார் . அந்த பையன் அவருடைய மகன் என்று நினைத்து சலூன்காரரும் முடி வெட்டி முடித்தார் . நெடுநேரமாகியும் போனவர் திரும்பவில்லை . உன் அப்பா ஏன் இன்னும் வரவில்லை என்று சலூன்கார் கேட்க , “ அவர் என் அப்பா இல்லை . தெருவில்போகும்போது முடி வெட்டிக்கிறியா என்றார் . நானும் சரின்னு வந்தேன் . அவர் யாருன்னே எனக்கு தெரியாது .” என்று பையன் பதில் சொல்ல அப்போது தான் பையனை அழைத்து வந்தவரின் ஏமாற்று வேலை புரிந்தது . தங்களின் சுயநலத்துக்காக குழந்தைகளை இப்படிப் பயன்படுத்துபவர்கள் உண்டு .

குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இலவசக் கல்வித் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் . அது தவிர தனிப்பட்ட முறையிலும் அவர் குழந்தைகளிடம் அன்பு காட்டியவர் . நவசக்தி அம்பி என்பவர் எழுதியிருக்கும் அந்த நிகழ்ச்சி நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது . பெருந்தலைவர் ஒருநாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார் . அப்போது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே நுழைகிறார்கள் . பரட்டைத் தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் நிலைமையைப் பறைசாற்றுகின்றன . பணியாளர் ஒருவர் அவர்களை அடித்து விரட்டுகிறார் . கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கித் தயங்கி நிற்கின்றன . மீண்டும் வீட்டுக்குள்ளே வர முயற்சிக்கின்றன . தம்மைப் பார்க்க வந்த பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய பெருந்தலைவரின் கூரிய கண்களில் அந்தக் குழந்தைகள் பட்டுவிட்டன . அவ்வளவுதான் அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க “ என்ன யாரைப் பார்க்க வந்தீங்க .?” என்று கேட்டபடி அவரே குழந்தைகளிடம் வந்து விட்டார் . சிறுமி தயங்கித் தயங்கிப் பேசினாள் . உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டுந்தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரிட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களைப் பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அதுதான் வந்தோம் . அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தபடி “ அம்மா தான் அனுப்பிச்சாங்களா ?” “ இல்லை . நாங்களாகத்தான் வந்தோம் , அம்மா அப்பளம் போட்டு வீடு வீடா விக்கிறாங்க . அதுல தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க ” என்று சிறுமி சொன்னதும் அதற்குமேல் கேட்டுக்கொண்டிருக்க தலைவரால் முடியவில்லை . அன்பு உள்ளம் உருகியது . வீட்டுப்படிகளில் ஏறி மாடிக்குச் சென்ற அவர் கையில் ஒரு கவருடன் வந்தார் . சிறுமியிடம் கொடுத்து “ இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் கட்டிடுங்க . அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் ” என்று ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார் . மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தன . வைரவன் குழந்தைகளை அழைத்து வந்தார் . வாங்க … வாங்க … என்று வாய் நிறைய வரவேற்றார் பெருந்தலைவர் .

பரிட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச்சொன்னாங்க என்று ரசீதை தலைவரிடம் சிறுமி நீட்டினாள் . பெருந்தலைவர் கண் கலங்கி விட்டார் . ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை வணங்கின . அவர் குழநதைகளை அன்போடு தட்டிக்கொடுத்து வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் .

நேர்மையுள்ளவர்கள் யாரும் ஏழையில்லை . நேர்மை தவறியவர்கள் யாரும் செல்வந்தரில்லை .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.