LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

குழந்தையும் தெய்வமும் - சேயோன் யாழ்வேந்தன்

 

குழந்தைகள் இருக்கும்போது

 

கடவுள் இல்லையென்று சொல்வதற்கு

 

கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது!

 

குழந்தையின் ‘சூ மந்திரக்காளி’க்கு

 

மயங்கி விழுந்து

 

மீண்டும் ஒரு மந்திரத்தில்

 

உயிர்த்தெழுவான்

 

நாத்திகத் தந்தையும்!

 

எல்லாக் கடவுள்களுக்கும்

 

இஷ்ட தெய்வம்

 

ஒன்று தான் -

 

குழந்தை!

 

கடவுள்களின் வாகனங்களில்

 

குழந்தைகள் துணை’

 

என்றுதான் எழுதியிருக்குமாம்.

 

நீங்கள் கடவுளைக் காணநேர்ந்தால்

 

கவனித்துப் பாருங்கள்!

 

கடவுள்களின் இப்போதைய

 

திருவிளையாடல்களில் ஒன்று

 

குழந்தைகளின் பென்சில் ரப்பரை

 

பிடுங்கி வைத்துக்கொள்வதுதான்!

 

 

அழுதுகொண்டு வரும்

 

கடவுள்களை நீங்கள்

 

அடிப்பதைப் பார்த்துத்தான்

 

நமக்கேன் வம்பு என்று

 

கடவுள் வரவே மாட்டேனென்கிறார்!

 

 

குழந்தையைக் காணாமல்

 

நீஙகள் பதைபதைத்துத் தேடும்போது

 

தூக்கிவைத்திருந்த குழந்தையை

 

இறக்கி விட்டு விட்டு

 

சட்டென அங்கே ஒரு

 

சிட்டுக்குருவியாகவோ பூனைக்குட்டியாகவோ

 

கடவுள் உருமாறிக்கொள்கிறார்!

 

- சேயோன் யாழ்வேந்தன்

by Swathi   on 28 Sep 2016  0 Comments
Tags: குழந்தை   தெய்வம்   குழந்தையும் தெய்வமும்   சேயோன் யாழ்வேந்தன்   Kulanthai   Deivam     
 தொடர்புடையவை-Related Articles
இது குழந்தை தொழில் இல்லையா..? - கவிப்புயல் இனியவன் இது குழந்தை தொழில் இல்லையா..? - கவிப்புயல் இனியவன்
குழந்தையும் தெய்வமும் - சேயோன் யாழ்வேந்தன் குழந்தையும் தெய்வமும் - சேயோன் யாழ்வேந்தன்
தற்கொலைக்குப் பறக்கும் கொசுக்கள் - சேயோன் யாழ்வேந்தன் தற்கொலைக்குப் பறக்கும் கொசுக்கள் - சேயோன் யாழ்வேந்தன்
அதிசயக்குழந்தை - இறக்கம் : கவிப்புயல் இனியவன் அதிசயக்குழந்தை - இறக்கம் : கவிப்புயல் இனியவன்
அதிசயக்குழந்தை : ஆசை - கவிப்புயல் இனியவன் அதிசயக்குழந்தை : ஆசை - கவிப்புயல் இனியவன்
தெய்வங்களின் கைகளில்   - சேயோன் யாழ்வேந்தன் தெய்வங்களின் கைகளில் - சேயோன் யாழ்வேந்தன்
அதிசயக்குழந்தை - பெயர் அதிசயக்குழந்தை - பெயர்
இறுதி விண்ணப்பம் - சேயோன் யாழ்வேந்தன் இறுதி விண்ணப்பம் - சேயோன் யாழ்வேந்தன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.