LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 982 - குடியியல்

Next Kural >

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று. (அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின்,எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்: குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று. இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களாலான நலமே; பிற நலம் எந்நலத்து உள்ளதும் அன்று - மற்ற உறுப்பு நலம் ஒரு நலத்தோடுங் கூட்டன்று. குடிப்பிறப்பு, கல்வி முதலியனவாக நூலோரால் வகுக்கப்பெறும் எந்நலத்தோடும் சேர்த்தெண்ணப் படாமையால், உறுப்பு நலத்தை 'எந்நலத் துள்ளதூஉ மன்று' என்றார். 'உள்ள தூஉம்' இன்னிசை யளபெடை; ஏகாரம் பிரிநிலை.
கலைஞர் உரை:
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.
சாலமன் பாப்பையா உரை:
சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
Translation
The good of inward excellence they claim, The perfect men; all other good is only good in name.
Explanation
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.
Transliteration
Kunanalam Saandror Nalane Piranalam Ennalaththu Ulladhooum Andru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >