குவைத்தில் தமிழர்கள் இருவருக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரும், சித்தாம்பூரைச் சேர்ந்த தாஸ் என்பவரும் குவைத்தில் சில ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளனர். இவர்களை கடந்த 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் சுரேஷுக்கும், தாஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அந்நாட்டுப் போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுரேஷ், தாஸ் இருவரையும் ஜூன் 18-ஆம் தேதி தூக்கிலிடுவதாக குவைத் நாடு அறிவித்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது. இதனை அடுத்து இருவரின் குடும்பத்தினரும் நேற்று ஊடகங்கள் வாயிலாக மத்திய அரசுக்கு அவர்களை காப்பாற்றி தரக்கோரி கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
|