LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

லல்லுபிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை !! ரூ. 25 லட்சம் அபராதம் !!!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட, பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்குவதாக ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி நீதிபதி பவேஸ்குமார் தீர்ப்பளித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறையும், லாலுவுக்கு ரூ. 25 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். 

 

பீகார் மாநிலத்தில் 950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு கடந்த 17 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கில், அம்மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என கடந்த 30 ஆம் தேதி ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்தது. மேலும், இந்த வழக்கில் லாலு பிரசாத், ஜெகன்நாத் மிஸ்ரா மற்றும் ஜெகதீஷ் சர்மா எம்.பி. உள்பட 45 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஆனால், லாலு உள்ளிட்டோருக்கான தண்டனை விபரத்தை இன்று (03.10.13) அறிவிப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது.  

 

அதன்படி, இவர்களுக்கான தண்டனை இன்று காணொளி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக அறிவிக்கப்பட்டது. லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் முன்னாள் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரி பி.என். ஷர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 1.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

லல்லுபிரசாத் யாதவிற்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி அவரது எம்.பி பதவி பறிபோவது உறுதியாகியுள்ளது. 

by Swathi   on 03 Oct 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.