LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 26 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

 

புலிப்பாய்ச்சல் - புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள்தரும். போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை. தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.
பெயரை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை. ஒரு வாக்கியத்தில் உள்ள எழுவாய் (பெயர்) வேறுபடாத நிலையில் முதல் வேற்றுமை. (எடுத்துக் காட்டு) முருகன் வந்தான்.
இரண்டாம் வேற்றுமை - முருகனை வணங்கினான் (ஐ)
மூன்றாம் வேற்றுமை - முருகனால் முடியும் (ஆல்)
நான்காம் வேற்றுமை - முருகனுக்குக் கொடு (கு)
ஐந்தாம் வேற்றுமை - முருகனின் வேறு (இன்) (பிரித்தல் பொருள்)
ஆறாம் வேற்றுமை - முருகனது வேல் (அது) உடைமைப் பொருள்
ஏழாம் வேற்றுமை - முருகனிடம் சென்றான் (இடம்)
எட்டாம் வேற்றுமை - முருகா வா - விளித்தல்
இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. அவை மறைதலே வேற்றுமைத் தொகை. எந்த வேற்றுமை உருபு மறைந்துள்ளதோ, அதனைச் சொல்லிக் (நான்காம் வேற்றுமைத் தொகை என்பதுபோல்) குறிப்பிடல் வேண்டும்.
வினைத் தொகையில் காலம் மறைந்து வரும்.
உவமைத் தொகையில் உவம உருபுகள் மறைந்து வரும். போல, போன்ற, ஒத்த, நிகர்த்த, புரைய, ஒப்ப, அனைய- ஏதாகினும் ஓர் உருபு மறைந்து வரலாம்.
பண்புத் தொகையில் "மை' எனும் விகுதியும் "ஆகிய' எனும் உருபும் மறைந்திருக்கும். உம் எனும் இடைச்சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை.
இந்த ஐந்து தொகைகளின் வழியாக இவற்றுள் அடங்காத மற்றொரு சொல் மறைந்திருப்பது அன்மொழித் தொகை எனப்படும். அல் + மொழி + தொகை (அல்லாத சொல் மறைதல்) எ-டு: தேன்மொழி வந்தாள் - தேன் போன்ற சொல் பேசும் பெண் வந்தாள்- உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தேன்மொழி எனும் பெயருடைய பெண் வந்தாள்) பெண் எனும் சொல் ஈண்டு அன்மொழி. பைந்தொடி கேளாய் - பசிய (பச்சைநிற) வளையல் அணிந்த பெண்ணே கேள் (பெண் அன்மொழி)
இப்போதைக்கு இதுபோதும், இலக்கணச் சுமையை ஏற்றுதல் நம் நோக்கமன்று.
துவக்கமா? தொடக்கமா?
ஊராட்சி துவக்கப்பள்ளி, விழாவைத் துவக்கி வைத்தார் என்று பார்க்கிறோம், கேட்கிறோம். தொடக்கப்பள்ளி, தொடங்கி வைத்தார் என்றும் காண்கிறோம். எது சரி?
தொடு - தொட - தொடக்கு - தொடங்கு என்று பார்த்தால், ஒன்றைத் தொடங்கும்போது கைகளால் தொட்டு அல்லது சொற்களால் தொட்டுத்தானே ஆக வேண்டும். ஆதலின் தொடக்கம், தொடங்கினார் என்பன சரியான சொற்கள். (தொடு - (பள்ளம்) தோண்டு; தொட்டு-(பள்ளம்) தோண்டி எனும் பொருள் உண்டு.)
துவ - துவக்கு என்று பார்த்தால் துவ என்பதன் பொருள் ஒன்றுமில்லை. துவள் எனும் பகுதி உண்டு. இது துவளுதல் - துவண்டு போதல் ஆகும். ஆதலின் துவக்கினார் என்பதும், துவக்கப்பள்ளி என்பதும் பிழையெனத் தோன்றவில்லையா?
அறிக்கை - அறிவிக்கை
இவ்விரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் கொண்டவை. அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுக்கிறார்கள். ஓர் ஆய்வுக் குழு தமது பரிந்துரை அல்லது தீர்ப்பை அறிக்கையாக வெளியிடுகிறது. ஆதலின் ஆங்கிலத்தின் ரிப்போர்ட் என்பதை அறிக்கை எனலாம்.
அரசு அவ்வப்போது சில செய்திகளை மக்களுக்கு அறிவிக்கிறது. நிறுவனங்கள் மக்களுக்கு அறிவிக்கும் செய்திகள் உண்டு. வங்கிகள் நகைகளுக்கு ஏலமிடுதல்பற்றி அறிவிப்புச் செய்கிறது.
இந்த வகையானவை அறிவிக்கை எனலாம். ஆங்கிலத்தில் நோட்டீஸ் என்பதுதான் அறிவிக்கை.
தப்பு - தவறு - பிழை
சரியா? தப்பா? என்று பேசுகிறோம். சரியா? தவறா? என்று வினவுகிறோம். தப்புத் தவறு செய்ததில்லை என்று சொல்கிறார்கள். தப்பித் தவறியும் கெட்ட வார்த்தை பேசமாட்டேன் என்பார் சிலர். தப்பும் தவறும் உடன் பிறந்தவை. ஒரே பொருள் கொண்டவை. ஆனால் "தப்பு'வில் தப்பித்தல் எனும் பொருள் அடங்கிக் கிடக்கிறது.
உங்கள் கருத்து தவறு என்று சொல்கிறோம். தவறான செய்தி என்கிறோம். தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று எழுதுகிறோம். ஆகத் தப்பு என்பதனினும் தவறு அழுத்தம் உடையதாக அறிகிறோம். அறியாமல் செய்வது தப்பு என்றும், அறிந்தே செய்வது தவறு என்றும் சொல்வாருளர்.

 

புலிப்பாய்ச்சல் - புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள்தரும். போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை. தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.

 

பெயரை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை. ஒரு வாக்கியத்தில் உள்ள எழுவாய் (பெயர்) வேறுபடாத நிலையில் முதல் வேற்றுமை. (எடுத்துக் காட்டு) முருகன் வந்தான்.

 

இரண்டாம் வேற்றுமை - முருகனை வணங்கினான் (ஐ)

 

மூன்றாம் வேற்றுமை - முருகனால் முடியும் (ஆல்)

 

நான்காம் வேற்றுமை - முருகனுக்குக் கொடு (கு)

 

ஐந்தாம் வேற்றுமை - முருகனின் வேறு (இன்) (பிரித்தல் பொருள்)

 

ஆறாம் வேற்றுமை - முருகனது வேல் (அது) உடைமைப் பொருள்

 

ஏழாம் வேற்றுமை - முருகனிடம் சென்றான் (இடம்)

 

எட்டாம் வேற்றுமை - முருகா வா - விளித்தல்

 

இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. அவை மறைதலே வேற்றுமைத் தொகை. எந்த வேற்றுமை உருபு மறைந்துள்ளதோ, அதனைச் சொல்லிக் (நான்காம் வேற்றுமைத் தொகை என்பதுபோல்) குறிப்பிடல் வேண்டும்.

 

வினைத் தொகையில் காலம் மறைந்து வரும்.

 

உவமைத் தொகையில் உவம உருபுகள் மறைந்து வரும். போல, போன்ற, ஒத்த, நிகர்த்த, புரைய, ஒப்ப, அனைய- ஏதாகினும் ஓர் உருபு மறைந்து வரலாம்.

 

பண்புத் தொகையில் "மை' எனும் விகுதியும் "ஆகிய' எனும் உருபும் மறைந்திருக்கும். உம் எனும் இடைச்சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை.

 

இந்த ஐந்து தொகைகளின் வழியாக இவற்றுள் அடங்காத மற்றொரு சொல் மறைந்திருப்பது அன்மொழித் தொகை எனப்படும். அல் + மொழி + தொகை (அல்லாத சொல் மறைதல்) எ-டு: தேன்மொழி வந்தாள் - தேன் போன்ற சொல் பேசும் பெண் வந்தாள்- உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தேன்மொழி எனும் பெயருடைய பெண் வந்தாள்) பெண் எனும் சொல் ஈண்டு அன்மொழி. பைந்தொடி கேளாய் - பசிய (பச்சைநிற) வளையல் அணிந்த பெண்ணே கேள் (பெண் அன்மொழி)

 

இப்போதைக்கு இதுபோதும், இலக்கணச் சுமையை ஏற்றுதல் நம் நோக்கமன்று.

 

துவக்கமா? தொடக்கமா?

 

ஊராட்சி துவக்கப்பள்ளி, விழாவைத் துவக்கி வைத்தார் என்று பார்க்கிறோம், கேட்கிறோம். தொடக்கப்பள்ளி, தொடங்கி வைத்தார் என்றும் காண்கிறோம். எது சரி?

 

தொடு - தொட - தொடக்கு - தொடங்கு என்று பார்த்தால், ஒன்றைத் தொடங்கும்போது கைகளால் தொட்டு அல்லது சொற்களால் தொட்டுத்தானே ஆக வேண்டும். ஆதலின் தொடக்கம், தொடங்கினார் என்பன சரியான சொற்கள். (தொடு - (பள்ளம்) தோண்டு; தொட்டு-(பள்ளம்) தோண்டி எனும் பொருள் உண்டு.)

 

துவ - துவக்கு என்று பார்த்தால் துவ என்பதன் பொருள் ஒன்றுமில்லை. துவள் எனும் பகுதி உண்டு. இது துவளுதல் - துவண்டு போதல் ஆகும். ஆதலின் துவக்கினார் என்பதும், துவக்கப்பள்ளி என்பதும் பிழையெனத் தோன்றவில்லையா?

 

அறிக்கை - அறிவிக்கை

 

இவ்விரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் கொண்டவை. அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுக்கிறார்கள். ஓர் ஆய்வுக் குழு தமது பரிந்துரை அல்லது தீர்ப்பை அறிக்கையாக வெளியிடுகிறது. ஆதலின் ஆங்கிலத்தின் ரிப்போர்ட் என்பதை அறிக்கை எனலாம்.

 

அரசு அவ்வப்போது சில செய்திகளை மக்களுக்கு அறிவிக்கிறது. நிறுவனங்கள் மக்களுக்கு அறிவிக்கும் செய்திகள் உண்டு. வங்கிகள் நகைகளுக்கு ஏலமிடுதல்பற்றி அறிவிப்புச் செய்கிறது.

 

இந்த வகையானவை அறிவிக்கை எனலாம். ஆங்கிலத்தில் நோட்டீஸ் என்பதுதான் அறிவிக்கை.

 

தப்பு - தவறு - பிழை

 

சரியா? தப்பா? என்று பேசுகிறோம். சரியா? தவறா? என்று வினவுகிறோம். தப்புத் தவறு செய்ததில்லை என்று சொல்கிறார்கள். தப்பித் தவறியும் கெட்ட வார்த்தை பேசமாட்டேன் என்பார் சிலர். தப்பும் தவறும் உடன் பிறந்தவை. ஒரே பொருள் கொண்டவை. ஆனால் "தப்பு'வில் தப்பித்தல் எனும் பொருள் அடங்கிக் கிடக்கிறது.

 

உங்கள் கருத்து தவறு என்று சொல்கிறோம். தவறான செய்தி என்கிறோம். தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று எழுதுகிறோம். ஆகத் தப்பு என்பதனினும் தவறு அழுத்தம் உடையதாக அறிகிறோம். அறியாமல் செய்வது தப்பு என்றும், அறிந்தே செய்வது தவறு என்றும் சொல்வாருளர்.

 

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.