LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 32 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

 

வடசொல்   : தமிழ்ச் சொல்
கிரமம்               ஒழுங்கு
கிராமம்              சிற்றூர்
சக்தி                    ஆற்றல்
சகோதரன்         உடன்பிறந்தான்
சந்நிதி                 திருமுன்(பு)
சபதம்                    சூளுரை
சந்தோஷம்         மகிழ்ச்சி
ஜலதோஷம்        நீர்க்கோவை
சாபம்                       கெடுமொழி
சிநேகம்                   நட்பு
சுத்தம்                     தூய்மை
சுபாவம்                 இயல்பு
சேவை                  தொண்டு
தாகம்                       வேட்கை
நிபுணர்                    வல்லுநர்
பகிரங்கம்               வெளிப்படை
பரிகாசம்                   நகையாடல்
பந்தபாசம்               பிறவித்தளை
பிரசாரம்                   பரப்புரை
மந்திரம்                     மறைமொழி
மிருகம்                     விலங்கு
முகூர்த்தம்               நல்வேளை
யுத்தம்                        போர்
ரகசியம்                       மறைபொருள்
வயது                          அகவை
வாகனம்                      ஊர்தி
வாதம்                         சொற்போர்
விகிதம்                         விழுக்காடு
விக்கிரகம்                     திருமேனி அல்லது செப்புச் சிலை
வேதம்                            மறை
வேகம்                           விரைவு
ஜாதகம்                         பிறப்புக் கணக்கு
ஜெபம்                            தொழுகை
ஜென்மம்                       பிறவி
ஜோதிடன்                     கணியன்
ஸ்தாபனம்                   நிறுவனம்
úக்ஷத்ரம்                       திருத்தலம்
யாகம்                           வேள்வி
போகம்                        நுகர்வு
மோகம்                       விருப்பு
வழக்கில் வழுக்கியவை:
மக்கள் தம் பேச்சு வழக்கில் வழுக்கி (தவறாக) எழுதப்படும், சொல்லப்படும் சொற்களையும் சரியாக எப்படி எழுதவேண்டும், சொல்ல வேண்டும் என்பதையும் கண்டோம்.
"முழிக்கிற முழியைப் பாரு, திருட்டுப் பயல்' என்று பேசுகிறார்கள். "ஏன்டா முளி முளின்னு முளிக்கிறே, ஒண்ணும் விளங்கலியா?' என்று வினவுகிறார்கள். இந்த முழியும், முளியும் சரியானவையா? அல்ல. விழிக்கிற விழியைப் பாரு, விழி விழி என்று விழிக்கிறாய் என்று இருக்க வேண்டியவை இப்படி வழக்கில் வழுக்கி உள்ளன.
"ஒரே நாத்தமடிக்குது. சகிக்க முடியலே' இந்த நாத்தம் என்பது நாற்றம் என்பதன் வழுக்கல். அவ்வாறே பீத்தல் என்றால் பீற்றல் (பீற்றுதல்)- பெருமை பேசுதல் என்பதன் வழுக்கல். இப்படி நம் வழக்கிலுள்ள வழுவுடைய சொற்களையும் அவற்றில் திருத்தமுடைய சொற்களையும் அடக்கி ஒரு சிறு பட்டியலில் தருகிறோம்.
வழு திருத்தம்
அடமழை அடைமழை
அடமானம் அடைமானம்
உடமை உடைமை
உத்திரவு உத்தரவு (ஆணை)
ஊரணி ஊருணி
எகனை முகனை எதுகை மோனை
ஏமாந்தான் ஏமாறினான்
ஒருவள் ஒருத்தி
ஒருத்தன் ஒருவன்
கத்திரிக்கோல் கத்தரிக்கோல்
காத்தாலே காலை
கார்க்கும் (கடவுள்) காக்கும் (கடவுள்)
கிராணம் கிரகணம்
குத்துதல் (நெல்)குற்றுதல்
கேழ்க்கிறார் கேட்கிறார்
கோடாலி கோடரி
சம்மந்தம் சம்பந்தம் (தொடர்பு)
சுந்திரமூர்த்தி சுந்தரமூர்த்தி

 

வடசொல்   : தமிழ்ச் சொல்

 

கிரமம்               ஒழுங்கு

 

கிராமம்              சிற்றூர்

 

சக்தி                    ஆற்றல்

 

சகோதரன்         உடன்பிறந்தான்

 

சந்நிதி                 திருமுன்(பு)

 

சபதம்                    சூளுரை

 

சந்தோஷம்         மகிழ்ச்சி

 

ஜலதோஷம்        நீர்க்கோவை

 

சாபம்                       கெடுமொழி

 

சிநேகம்                   நட்பு

 

சுத்தம்                     தூய்மை

 

சுபாவம்                 இயல்பு

 

சேவை                  தொண்டு

 

தாகம்                       வேட்கை

 

நிபுணர்                    வல்லுநர்

 

பகிரங்கம்               வெளிப்படை

 

பரிகாசம்                   நகையாடல்

 

பந்தபாசம்               பிறவித்தளை

 

பிரசாரம்                   பரப்புரை

 

மந்திரம்                     மறைமொழி

 

மிருகம்                     விலங்கு

 

முகூர்த்தம்               நல்வேளை

 

யுத்தம்                        போர்

 

ரகசியம்                       மறைபொருள்

 

வயது                          அகவை

 

வாகனம்                      ஊர்தி

 

வாதம்                         சொற்போர்

 

விகிதம்                         விழுக்காடு

 

விக்கிரகம்                     திருமேனி அல்லது செப்புச் சிலை

 

வேதம்                            மறை

 

வேகம்                           விரைவு

 

ஜாதகம்                         பிறப்புக் கணக்கு

 

ஜெபம்                            தொழுகை

 

ஜென்மம்                       பிறவி

 

ஜோதிடன்                     கணியன்

 

ஸ்தாபனம்                   நிறுவனம்

 

úக்ஷத்ரம்                       திருத்தலம்

 

யாகம்                           வேள்வி

 

போகம்                        நுகர்வு

 

மோகம்                       விருப்பு

 

வழக்கில் வழுக்கியவை:

 

மக்கள் தம் பேச்சு வழக்கில் வழுக்கி (தவறாக) எழுதப்படும், சொல்லப்படும் சொற்களையும் சரியாக எப்படி எழுதவேண்டும், சொல்ல வேண்டும் என்பதையும் கண்டோம்.

 

"முழிக்கிற முழியைப் பாரு, திருட்டுப் பயல்' என்று பேசுகிறார்கள். "ஏன்டா முளி முளின்னு முளிக்கிறே, ஒண்ணும் விளங்கலியா?' என்று வினவுகிறார்கள். இந்த முழியும், முளியும் சரியானவையா? அல்ல. விழிக்கிற விழியைப் பாரு, விழி விழி என்று விழிக்கிறாய் என்று இருக்க வேண்டியவை இப்படி வழக்கில் வழுக்கி உள்ளன.

 

"ஒரே நாத்தமடிக்குது. சகிக்க முடியலே' இந்த நாத்தம் என்பது நாற்றம் என்பதன் வழுக்கல். அவ்வாறே பீத்தல் என்றால் பீற்றல் (பீற்றுதல்)- பெருமை பேசுதல் என்பதன் வழுக்கல். இப்படி நம் வழக்கிலுள்ள வழுவுடைய சொற்களையும் அவற்றில் திருத்தமுடைய சொற்களையும் அடக்கி ஒரு சிறு பட்டியலில் தருகிறோம்.

 

வழு திருத்தம்

 

அடமழை அடைமழை

 

அடமானம் அடைமானம்

 

உடமை உடைமை

 

உத்திரவு உத்தரவு (ஆணை)

 

ஊரணி ஊருணி

 

எகனை முகனை எதுகை மோனை

 

ஏமாந்தான் ஏமாறினான்

 

ஒருவள் ஒருத்தி

 

ஒருத்தன் ஒருவன்

 

கத்திரிக்கோல் கத்தரிக்கோல்

 

காத்தாலே காலை

 

கார்க்கும் (கடவுள்) காக்கும் (கடவுள்)

 

கிராணம் கிரகணம்

 

குத்துதல் (நெல்)குற்றுதல்

 

கேழ்க்கிறார் கேட்கிறார்

 

கோடாலி கோடரி

 

சம்மந்தம் சம்பந்தம் (தொடர்பு)

 

சுந்திரமூர்த்தி சுந்தரமூர்த்தி

 

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.