LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 43 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

 

கச்சை, கச்சு என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். "கச்சை வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டான்' என்று பேசுகிறோம். இடை (இடுப்பு) ஆடைதான் கச்சை. "நீலக்கச்சை பூவார் ஆடை' என்பது சங்க வரி. கச்சு பெண்கள் மார்பில் கட்டுவது. இக்காலத்து "பிரா' போன்றது. பழைய புராண வரலாற்றுப் படங்களில் இப்படியொரு ஆடையைக் காணலாகும். "கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று பாடினார் பாரதியார். "நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று கச்சைக்கு நச்சை (நஞ்சு - விடம்) எதுகையாக்கிப் பாடினார் மகாகவி.
மீண்டும் ஒருமை பன்மை மயக்கம்
"வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன' என்று செய்தியாளர் தொலைக்காட்சியொன்றில் படித்தார். எண்ணிக்கை, நடைபெறவுள்ளது என்று ஒருமை முடிவுதான் சரியானது. பல தொகுதிகள் என்பதால் உள்ளன என்று பன்மையில் முடித்தாரா? அப்படிக் கருதினால் தவறு.
மற்றொரு செய்தி அறிக்கையில்,"அவற்றுக்கு இறுதி முடிவு ஏற்படமாட்டா' என்று செய்தியாளர் படித்தார். முடிவு என்னும் சொல்லுக்கு ஏற்ப, மாட்டாது என்றே முடித்திட வேண்டும். அவற்றுக்கு எனும் பன்மை கருதி மாட்டா என்று பன்மை முடிவு கொடுத்தார் என்று கருதுகிறோம்; இதுவும் பிழையே.
வினை முற்று (முடிக்கும் சொல்) பொருளுக்கு ஏற்ப அமைத்தல் வேண்டும்.
"திருத்தேர் இன்று நிலைக்கு வாராது (வராது)' - இஃது ஒருமை.
"பூனைகள் இங்கு வாரா (வர மாட்டா)' } பன்மை
"ஒவ்வொரு கருத்தும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகும்' (ஒருமை)
"கருத்துகள் எல்லாம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியன' (பன்மை)
"வழுக்கு மரம் முதலிய வீர விளையாட்டுகள் பயிற்சி முகாமில் நடைபெற்றது'
இங்கு விளையாட்டுகள் நடைபெற்றன என்று பன்மையில் முடித்தல் வேண்டும்.
"தமிழகத்தின் பல பாகங்களில் வெப்பநிலை கூடியே காணப்பட்டன'
வெப்பநிலை கூடியே காணப்பட்டது என்பதே சரி. பல பாகங்களில் என்பதை மனதில் நினைத்து இப்படி முடித்தார் போலும்.
இந்தக் குழப்பம் எல்லாம் சற்றே நினைத்துப் பார்க்க அகன்று போகும். சரியாக இருக்க வேண்டும் என்னும் அக்கறையை மனத்தில் கொள்ள வேண்டும். இது நம் பரிந்துரை. "ஆமாம் ஐயா, எல்லாம் என்று தொடங்கி போகும் என முடித்துள்ளீர்கள். சரியா?' சரியே. அது போகும் } அவை போகும் } ஒரே சொல்தான்.
சொற்றொடர் (வாக்கிய) வகைகள்
வாக்கிய அமைப்பில் கருத்தைப் பொறுத்து ஒருவகையாகவும், அமைப்பைப் பொறுத்து ஒருவகையாகவும் இரண்டு கூறுகளைக் காண்போம். முதலில் கருத்து வாக்கியம் என்பதுள் அடங்கும் பிரிவுகள் பற்றி அறிவோம்.
1. ஒரு செய்தியை உணர்த்துவது செய்தி வாக்கியம்.
(எ-டு) உழைத்தால் வாழ்வில் உயரலாம்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால் ஆட்சி நிலைக்காது. ஈண்டு செய்தி - நியூஸ் - அன்று; ஒரு கருத்து எனக் கொள்க.
2. எதுபற்றியேனும் யாரிடமேனும் வினவுகின்ற வகையில் அமைவது வினா வாக்கியம்.
(எ-டு) மாநாட்டுக்கு நீ போய் வந்தாயா?
நாளை கல்லூரிக்கு அவர் வருவாரா?
நமது விருப்பத்தை - விழைவை - வெளிப்படுத்தும் தன்மை கொண்டது விழைவு வாக்கியம்.
(எ-டு) வாழிய பாரதத் திருநாடு
வாழிய செந்தமிழ்- (வாழ்த்து)
நாளை எமதில்லம் வருக - (வேண்டுகோள்)
உனது சான்றிதழ்களைக் கொண்டு வா - (கட்டளை)
கயவன் அழிக - (ஆற்றாமை } சபித்தல்)
4. நமது உணர்ச்சியைப் புலப்படுத்தும் வண்ணம் அமைவது உணர்ச்சி வாக்கியம்.
(எ-டு) நீயே போன பின் நான் மட்டும் இருந்தென்ன!
முத்தமிழ்த்துறையில் முறைபோகிய வித்தக வருக!
! இப்படி ஒரு குறியிட்டால், இதனை ஆச்சரியக்குறி என்பார்கள். ஆச்சர்யம் (வியப்பு). வியப்பு மட்டுமன்று; எத்தகைய உணர்ச்சியை வெளிப்படுத்தினாலும் ! இக்குறி இடப்படுதலின் இதை உணர்ச்சிக்குறி எனல் தக்கது.

 

கச்சை, கச்சு என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். "கச்சை வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டான்' என்று பேசுகிறோம். இடை (இடுப்பு) ஆடைதான் கச்சை. "நீலக்கச்சை பூவார் ஆடை' என்பது சங்க வரி. கச்சு பெண்கள் மார்பில் கட்டுவது. இக்காலத்து "பிரா' போன்றது. பழைய புராண வரலாற்றுப் படங்களில் இப்படியொரு ஆடையைக் காணலாகும். "கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று பாடினார் பாரதியார். "நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று கச்சைக்கு நச்சை (நஞ்சு - விடம்) எதுகையாக்கிப் பாடினார் மகாகவி.

 

மீண்டும் ஒருமை பன்மை மயக்கம்

 

"வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன' என்று செய்தியாளர் தொலைக்காட்சியொன்றில் படித்தார். எண்ணிக்கை, நடைபெறவுள்ளது என்று ஒருமை முடிவுதான் சரியானது. பல தொகுதிகள் என்பதால் உள்ளன என்று பன்மையில் முடித்தாரா? அப்படிக் கருதினால் தவறு.

 

மற்றொரு செய்தி அறிக்கையில்,"அவற்றுக்கு இறுதி முடிவு ஏற்படமாட்டா' என்று செய்தியாளர் படித்தார். முடிவு என்னும் சொல்லுக்கு ஏற்ப, மாட்டாது என்றே முடித்திட வேண்டும். அவற்றுக்கு எனும் பன்மை கருதி மாட்டா என்று பன்மை முடிவு கொடுத்தார் என்று கருதுகிறோம்; இதுவும் பிழையே.

 

வினை முற்று (முடிக்கும் சொல்) பொருளுக்கு ஏற்ப அமைத்தல் வேண்டும்.

 

"திருத்தேர் இன்று நிலைக்கு வாராது (வராது)' - இஃது ஒருமை.

 

"பூனைகள் இங்கு வாரா (வர மாட்டா)' } பன்மை

 

"ஒவ்வொரு கருத்தும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகும்' (ஒருமை)

 

"கருத்துகள் எல்லாம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியன' (பன்மை)

 

"வழுக்கு மரம் முதலிய வீர விளையாட்டுகள் பயிற்சி முகாமில் நடைபெற்றது'

 

இங்கு விளையாட்டுகள் நடைபெற்றன என்று பன்மையில் முடித்தல் வேண்டும்.

 

"தமிழகத்தின் பல பாகங்களில் வெப்பநிலை கூடியே காணப்பட்டன'

 

வெப்பநிலை கூடியே காணப்பட்டது என்பதே சரி. பல பாகங்களில் என்பதை மனதில் நினைத்து இப்படி முடித்தார் போலும்.

 

இந்தக் குழப்பம் எல்லாம் சற்றே நினைத்துப் பார்க்க அகன்று போகும். சரியாக இருக்க வேண்டும் என்னும் அக்கறையை மனத்தில் கொள்ள வேண்டும். இது நம் பரிந்துரை. "ஆமாம் ஐயா, எல்லாம் என்று தொடங்கி போகும் என முடித்துள்ளீர்கள். சரியா?' சரியே. அது போகும் } அவை போகும் } ஒரே சொல்தான்.

 

சொற்றொடர் (வாக்கிய) வகைகள்

 

வாக்கிய அமைப்பில் கருத்தைப் பொறுத்து ஒருவகையாகவும், அமைப்பைப் பொறுத்து ஒருவகையாகவும் இரண்டு கூறுகளைக் காண்போம். முதலில் கருத்து வாக்கியம் என்பதுள் அடங்கும் பிரிவுகள் பற்றி அறிவோம்.

 

1. ஒரு செய்தியை உணர்த்துவது செய்தி வாக்கியம்.

 

(எ-டு) உழைத்தால் வாழ்வில் உயரலாம்.

 

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால் ஆட்சி நிலைக்காது. ஈண்டு செய்தி - நியூஸ் - அன்று; ஒரு கருத்து எனக் கொள்க.

 

2. எதுபற்றியேனும் யாரிடமேனும் வினவுகின்ற வகையில் அமைவது வினா வாக்கியம்.

 

(எ-டு) மாநாட்டுக்கு நீ போய் வந்தாயா?

 

நாளை கல்லூரிக்கு அவர் வருவாரா?

 

நமது விருப்பத்தை - விழைவை - வெளிப்படுத்தும் தன்மை கொண்டது விழைவு வாக்கியம்.

 

(எ-டு) வாழிய பாரதத் திருநாடு

 

வாழிய செந்தமிழ்- (வாழ்த்து)

 

நாளை எமதில்லம் வருக - (வேண்டுகோள்)

 

உனது சான்றிதழ்களைக் கொண்டு வா - (கட்டளை)

 

கயவன் அழிக - (ஆற்றாமை } சபித்தல்)

 

4. நமது உணர்ச்சியைப் புலப்படுத்தும் வண்ணம் அமைவது உணர்ச்சி வாக்கியம்.

 

(எ-டு) நீயே போன பின் நான் மட்டும் இருந்தென்ன!

 

முத்தமிழ்த்துறையில் முறைபோகிய வித்தக வருக!

 

! இப்படி ஒரு குறியிட்டால், இதனை ஆச்சரியக்குறி என்பார்கள். ஆச்சர்யம் (வியப்பு). வியப்பு மட்டுமன்று; எத்தகைய உணர்ச்சியை வெளிப்படுத்தினாலும் ! இக்குறி இடப்படுதலின் இதை உணர்ச்சிக்குறி எனல் தக்கது.

 

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.