LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 47 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

 

நிறுத்தக் குறிகள்: வாக்கிய அமைப்புகள் பற்றி முன்னர் எழுதியிருந்தோம். அதைத் தொடர்ந்து நிறுத்தக் குறிகள் பற்றி அறிவதும் அவசியம் ஆகும்.
பலவற்றை அடுக்கிச் சொல்லிப் பின்னர் முற்றுப்புள்ளி வைக்கிறோம். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு கால்புள்ளி (,) இடுதல் முறை. (எ-டு) மா, பலா, வாழை முக்கனிகள். மூன்றில் இரண்டின் பின் கால்புள்ளி இடல் வேண்டும். மூன்றாம் சொல் அடுத்த சொல்லொடு இணைக்க முடியும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன ஐந்திணைகள் ஆகும். இதனையே முல்லையும் குறிஞ்சியும் மருதமும் நெய்தலும் பாலையும் என்று இணைத்து எழுதும்போது கால் புள்ளி இடல் வேண்டாம். பெரிய வாக்கியங்களில் ஒரு செய்தியைச் சற்றே நிறுத்துமிடத்தும் கால் புள்ளி இடல் வேண்டும். (எ-டு) இப்போது, தாய்மைக் கனிவைப் புலப்படுத்தி நடிப்பதில், காலத்திற்கேற்ற கண்ணம்பாவாகத் திகழ்கிறார்.
நெடிய வாக்கியத்தில் ஒரு கருத்து முற்றுப் பெறும் நிலையில் மேலும் தொடரும்போது அரைப்புள்ளி (;) இடல் வேண்டும். (எ-டு) சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விடுதலைப் போராட்ட வீர மறவர் மட்டுமல்லர்; சிறந்த தமிழறிஞரும் தமிழ்ப் போராளியுமாவார்.
(எ-டு) கயவன் என்னும் சொல்லுக்கு நிகராகப் பெண்பாற் சொல்லைக் கம்பன் நமக்குக் காட்டுகிறான்; அது கயத்தி என்பதாகும்.
ஒரு கருத்து பற்றி - பொருள் பற்றிப் பின்னர் விளக்கம் வரும்போது அல்லது ஒருவரது பேச்சை நேர்கூற்றாக எழுதும்போது - அதன் முன்னர் வரும் வாக்கிய முடிவில் முக்கால் புள்ளி (:) இடல் வேண்டும்.
(எ-டு) கல்வியே அழியாத செல்வம் என்னும் கருத்தை விளக்கும் செய்திகளை இனிக் காண்போம்:
(எ-டு) இராமனை முதற் சந்திப்பில் கண்ட அனுமன் அரிய சொல்லாற்றலுடன் அழகாகப் பின்வருமாறு பேசினான்: "" ..........''.
ஒரு வாக்கியத்தின் முடிவில் முற்றுப் புள்ளி (.)இடல் வேண்டும் என்பது நாமறிவோம். (எ-டு) தமிழ் மொழி இலக்கியச் சிறப்பும் இலக்கணக் கட்டுக்கோப்பும் தொன்மையும் வன்மையும் உடைய மொழி.
வினவுதல் கருத்துடைய வாக்கிய முடிவில் வினாக்குறி (?) இடல் வேண்டும். (எ-டு) ஓராண்டின் பெரும்பொழுதுகள் எவை? ஒருநாளின் சிறுபொழுதுகள் எவை? உன் பெயர் என்ன?
ஏதாவதோர் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வாக்கிய முடிவில் உணர்ச்சிக் குறி (!) இடல் வேண்டும்.
(எ-டு) அந்தோ! ஈழத்தமிழர் பற்றி எண்ணும்போதே உள்ளம் கொதிக்கிறதே!
அடடா! இந்தக் காட்சியின் அழகு என்னே!
வாழிய பாரத மணித் திருநாடு!
(வியப்பு (ஆச்சர்யம்) என்பதும் ஓர் உணர்ச்சி. உணர்ச்சிக் குறியை ஆச்சர்யக் குறி என்று தவறாகச் சொல்லி வருகிறோம்).
முன்னோர் மொழியை ஒரு சில சொல் அல்லது ஓரடியில் எழுதும்போது, ஒற்றை மேற்கோள் குறி " ' இட வேண்டும்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்'
சிறிய நேர்க்கூற்றுகளையும் இப்படிச் சுட்டிக் காட்டலாம்.
"நீ வராதே போய்விடு' என்றான் அவன்.
பிறர் கூற்றை அல்லது பாட்டு வரிகளை எடுத்து எழுதும்போது இரட்டை மேற்கோள் குறி "" '' இடல் வேண்டும்.
(எ-டு) ""ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
உலகு இன்பக் கேணி'' - என்றார் பாரதியார்.
""நெஞ்சில் உரம், நேர்மைத் திறம், மனத்தில் உறுதி, தளராத உழைப்பு, சிந்தனைக் கூர்மை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்'' என்று அறிவுரை புகன்றார் அவர்.
ஒருவர் கூற்றாக அமைந்த பெரிய வாக்கியத்தில், இன்னொருவர் கூற்று இடையில் வந்தால், இரட்டை மேற்கோள் குறிகள் அமைந்த பகுதியின் நடுவே ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
(எ-டு)
""நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றே ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அப்பா சொல்லிவிட்டார், "உன்னை இனிமேல் கல்லூரிக்கு அனுப்ப முடியாது' என்று. அதனால் படிப்பை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று''

 

நிறுத்தக் குறிகள்: வாக்கிய அமைப்புகள் பற்றி முன்னர் எழுதியிருந்தோம். அதைத் தொடர்ந்து நிறுத்தக் குறிகள் பற்றி அறிவதும் அவசியம் ஆகும்.

 

பலவற்றை அடுக்கிச் சொல்லிப் பின்னர் முற்றுப்புள்ளி வைக்கிறோம். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு கால்புள்ளி (,) இடுதல் முறை. (எ-டு) மா, பலா, வாழை முக்கனிகள். மூன்றில் இரண்டின் பின் கால்புள்ளி இடல் வேண்டும். மூன்றாம் சொல் அடுத்த சொல்லொடு இணைக்க முடியும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன ஐந்திணைகள் ஆகும். இதனையே முல்லையும் குறிஞ்சியும் மருதமும் நெய்தலும் பாலையும் என்று இணைத்து எழுதும்போது கால் புள்ளி இடல் வேண்டாம். பெரிய வாக்கியங்களில் ஒரு செய்தியைச் சற்றே நிறுத்துமிடத்தும் கால் புள்ளி இடல் வேண்டும். (எ-டு) இப்போது, தாய்மைக் கனிவைப் புலப்படுத்தி நடிப்பதில், காலத்திற்கேற்ற கண்ணம்பாவாகத் திகழ்கிறார்.

 

நெடிய வாக்கியத்தில் ஒரு கருத்து முற்றுப் பெறும் நிலையில் மேலும் தொடரும்போது அரைப்புள்ளி (;) இடல் வேண்டும். (எ-டு) சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விடுதலைப் போராட்ட வீர மறவர் மட்டுமல்லர்; சிறந்த தமிழறிஞரும் தமிழ்ப் போராளியுமாவார்.

 

(எ-டு) கயவன் என்னும் சொல்லுக்கு நிகராகப் பெண்பாற் சொல்லைக் கம்பன் நமக்குக் காட்டுகிறான்; அது கயத்தி என்பதாகும்.

 

ஒரு கருத்து பற்றி - பொருள் பற்றிப் பின்னர் விளக்கம் வரும்போது அல்லது ஒருவரது பேச்சை நேர்கூற்றாக எழுதும்போது - அதன் முன்னர் வரும் வாக்கிய முடிவில் முக்கால் புள்ளி (:) இடல் வேண்டும்.

 

(எ-டு) கல்வியே அழியாத செல்வம் என்னும் கருத்தை விளக்கும் செய்திகளை இனிக் காண்போம்:

 

(எ-டு) இராமனை முதற் சந்திப்பில் கண்ட அனுமன் அரிய சொல்லாற்றலுடன் அழகாகப் பின்வருமாறு பேசினான்: "" ..........''.

 

ஒரு வாக்கியத்தின் முடிவில் முற்றுப் புள்ளி (.)இடல் வேண்டும் என்பது நாமறிவோம். (எ-டு) தமிழ் மொழி இலக்கியச் சிறப்பும் இலக்கணக் கட்டுக்கோப்பும் தொன்மையும் வன்மையும் உடைய மொழி.

 

வினவுதல் கருத்துடைய வாக்கிய முடிவில் வினாக்குறி (?) இடல் வேண்டும். (எ-டு) ஓராண்டின் பெரும்பொழுதுகள் எவை? ஒருநாளின் சிறுபொழுதுகள் எவை? உன் பெயர் என்ன?

 

ஏதாவதோர் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வாக்கிய முடிவில் உணர்ச்சிக் குறி (!) இடல் வேண்டும்.

 

(எ-டு) அந்தோ! ஈழத்தமிழர் பற்றி எண்ணும்போதே உள்ளம் கொதிக்கிறதே!

 

அடடா! இந்தக் காட்சியின் அழகு என்னே!

 

வாழிய பாரத மணித் திருநாடு!

 

(வியப்பு (ஆச்சர்யம்) என்பதும் ஓர் உணர்ச்சி. உணர்ச்சிக் குறியை ஆச்சர்யக் குறி என்று தவறாகச் சொல்லி வருகிறோம்).

 

முன்னோர் மொழியை ஒரு சில சொல் அல்லது ஓரடியில் எழுதும்போது, ஒற்றை மேற்கோள் குறி " ' இட வேண்டும்.

 

"யாதும் ஊரே யாவரும் கேளிர்'

 

சிறிய நேர்க்கூற்றுகளையும் இப்படிச் சுட்டிக் காட்டலாம்.

 

"நீ வராதே போய்விடு' என்றான் அவன்.

 

பிறர் கூற்றை அல்லது பாட்டு வரிகளை எடுத்து எழுதும்போது இரட்டை மேற்கோள் குறி "" '' இடல் வேண்டும்.

 

(எ-டு) ""ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

 

உலகு இன்பக் கேணி'' - என்றார் பாரதியார்.

 

""நெஞ்சில் உரம், நேர்மைத் திறம், மனத்தில் உறுதி, தளராத உழைப்பு, சிந்தனைக் கூர்மை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்'' என்று அறிவுரை புகன்றார் அவர்.

 

ஒருவர் கூற்றாக அமைந்த பெரிய வாக்கியத்தில், இன்னொருவர் கூற்று இடையில் வந்தால், இரட்டை மேற்கோள் குறிகள் அமைந்த பகுதியின் நடுவே ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.

 

(எ-டு)

 

""நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றே ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அப்பா சொல்லிவிட்டார், "உன்னை இனிமேல் கல்லூரிக்கு அனுப்ப முடியாது' என்று. அதனால் படிப்பை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று''

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.