LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 61 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

 

இரண்டு சொற்களில் ஏற்படும் விகாரங்கள் பற்றி மட்டும் காண்போம்.
 
மூன்று + நூறு= முந்நூறு (முன்னூறு - பிழை) மூன்று எனும் நிலைமொழியில் இறுதி "று' வும் இடையில் "ன்'னும் கெட்டு, "மூ' எனும் நெடில் "மு' எனக் குறுகி, திரிந்து, மு+நூறு - முந்நூறு (ந் - தோன்றல் விதி) என்றாயிற்று. இச்சொல்லில் கெடல், திரிதல், தோன்றல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஐந்து + நூறு - ஐந்நூறு என எழுதிட வேண்டும். இறுதி (து) கெட்டு "ந்' - உம் கெட்டு, நூறு சேரும்போது மீண்டும் "ந்' தோன்றி ஐந்நூறு ஆகிற்று. ஐநூறு எனில் பிழை.
 
"உலக அறிவுச் சார்ந்த கேள்விகளுக்குச் சரியான விடை தருபவர்க்குப் பரிசு உண்டு' இது தொலைக்காட்சியில் எழுதப்பட்டு வந்த வாக்கியம். அறிவுச் சார்ந்த - என்பதில் "ச்' வல்லொற்று வரக் கூடாது. அறிவு சார்ந்த என்று இயல்பாக இருத்தல் வேண்டும். அறிவுசார்ந்த எனில் அறிவைச் சார்ந்த எனப் பொருள்.
 
இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்திருக்கும்போது ஒற்று மிகாது. அவ்வுருபு வெளிப்பட்டிருப்பின் (வேற்றுமை விரி) ஒற்றுமிகும்.
 
"திங்கள் முதள் வெள்ளி வரை நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்' இது பெண்மணி ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி அறிவித்த வாக்கியம். சொற்றொடரில் பிழை இல்லை. உச்சரிப்பில் (ஒலிப்பில்) பிழை. முதல் என்னும் சொல்லை முதள் என்று லகரத்தை ளகரமாக உச்சரித்தார். திங்கள், வெள்ளி ளகரம் இருப்பதால், இந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருக்கலாம். நா நெகிழ் பயிற்சிகள் சிலவற்றால் இக்குறையைப் போக்க முடியும். முயற்சி வேண்டும்.
 
தூக்குத் தண்டனையா? தூக்கு தண்டனையா?
 
அண்ணாத்துரை என்னும் பெயருக்குச் சொன்ன விளக்கம்தான் இதற்கும். அஃதென்ன? "த ' வை (tha)என்று அழுத்தி வல்லொலியில் சொன்னால் "த்' வரும். "த' வை (dha) என மெல்லோசையில் "த்' வராது. தண்டனை (tha) என்பது தமிழ்க்குரிய ஒலி.
 
dha - த என்பது வடசொல் உச்சரிப்பு. ஆயின் தண்டனை தமிழ்ச் சொல்லா? வட சொல்லா? சாம, பேத, தான, தண்டம் - இவை வடசொற்கள். தண்டாயுதபாணி (தண்டு எனும் கருவியைக் கையிற் கொண்ட முருகன்) வடமொழிப் பெயர். தண்டம் - ஒறுத்தலையும் (தண்டித்தல்) தண்டு (ஆயுதத்தையும்) குறிக்கின்றன.
 
தமிழிலும் இந்தத் தண்டு இருக்கிறது. தாமரைத் தண்டு, வாழைத் தண்டு, முதுகுத் தண்டு, தண்டுவடம் என்பன எல்லாம் தமிழ் சொற்களே. tha என்றே ஒலிப்பவை இவை.
 
"பணத்தை வசூல் செய்தார்கள்' என்று பேசுகிறோம். வசூல் என்பதைச் சில பகுதிகளில் பணம் தண்டுதல் என்று சொல்லுகிறார்கள். நெல்லையில் பணம் பிரித்தல் (பறித்தல்) என்றும் சொல்லுவார்கள். வசூல் தமிழன்று.
 
தண்டு என்பதற்குச் சேனை (படை) என்ற பொருளும் உண்டு. கலிங்கத்துப் பரணியில் காண்க. ஒரு செலவு வீணான செலவு என்றால் தண்டச் செலவு என்கிறோம். உருப்படாத ஒருவனை "தண்டம், தண்டம்' என்று திட்டுகிறோம்.
 
தண்டனை ஒறுத்தல் என்னும் பொருளுடைய வடசொல்லாயினும் தமிழ் ஓலியில் (tha) தண்டனை என்று ஒலித்தால், தூக்குத் தண்டனை பொருத்தமானது. கீரைத் தண்டு, வாழைத் தண்டு எல்லாம் தமிழ்ச் சொற்களே. இங்கே (tha) தண்டினை (dha) தண்டு ஆக்க வேண்டாம்.
 
பாடாத தேனீ, வாடாத மலர், கேளாத காது - இவையெல்லாம் எவை? எதற்காக இந்த எடுத்துக் காட்டுகள்?
 
பாடாத் தேனீ, வாடா மலர், கேளாக் காது - இவற்றையும் பாருங்கள்.
 
இரண்டு வகை எடுத்துக் காட்டுகளிலும் எதிர்மறைப் பொருளில் (பாடாத, கேளாத) வந்துள்ளன. முற்றுப் பெறாத எச்சமாக நின்று தேனீ, மலர் , காது என்னும் சொற்களால் முற்றுப் பெற்றுள்ளன.
 
முன்னர் உள்ளவை எதிர்மறைப் பெயரெச்சம். அடுத்து உள்ளவை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். எப்படி? விளக்கம் என்ன? பார்ப்போமே.
 
ஒரு முற்றுப் பெறாத வினைச் சொல் (எச்சவினை) ஒரு பெயர்ச் சொல் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம்.
 
(எ-டு) ஓடிய குதிரை, வந்த பையன்
 
இத்தகைய பெயரெச்சம் எதிர்மறை வினை பெற்று வரின் எதிர்மறைப் பெயரெச்சம். (எ-டு) உலவாத தென்றல், கேளாத காது.
 
இதில் உலவாத என்னும் வினைச் சொல்லைச் சற்றே மாற்றி உலவா என்று சொல்லுதலும் உண்டு. ஈற்று (கடைசி) எழுத்து இல்லாமையால் இது ஈறு கெட்ட வினை. எப்படி முடிக்கலாம்? உலவாத் தென்றல், கேளாக்காது. இவை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்.
 
முதலில் பெயரெச்சம் - புரிந்து கொள்ளுங்கள். அடுத்து எதிர்மறைப் பெயரெச்சம். பின்னர் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். விளங்கிற்றா? இல்லையெனில் விட்டுவிடுங்கள். மீண்டும் அடுத்த நாள் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். புரியும்.
 

இரண்டு சொற்களில் ஏற்படும் விகாரங்கள் பற்றி மட்டும் காண்போம்.
 
மூன்று + நூறு= முந்நூறு (முன்னூறு - பிழை) மூன்று எனும் நிலைமொழியில் இறுதி "று' வும் இடையில் "ன்'னும் கெட்டு, "மூ' எனும் நெடில் "மு' எனக் குறுகி, திரிந்து, மு+நூறு - முந்நூறு (ந் - தோன்றல் விதி) என்றாயிற்று. இச்சொல்லில் கெடல், திரிதல், தோன்றல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஐந்து + நூறு - ஐந்நூறு என எழுதிட வேண்டும். இறுதி (து) கெட்டு "ந்' - உம் கெட்டு, நூறு சேரும்போது மீண்டும் "ந்' தோன்றி ஐந்நூறு ஆகிற்று. ஐநூறு எனில் பிழை.
 
"உலக அறிவுச் சார்ந்த கேள்விகளுக்குச் சரியான விடை தருபவர்க்குப் பரிசு உண்டு' இது தொலைக்காட்சியில் எழுதப்பட்டு வந்த வாக்கியம். அறிவுச் சார்ந்த - என்பதில் "ச்' வல்லொற்று வரக் கூடாது. அறிவு சார்ந்த என்று இயல்பாக இருத்தல் வேண்டும். அறிவுசார்ந்த எனில் அறிவைச் சார்ந்த எனப் பொருள்.
 
இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்திருக்கும்போது ஒற்று மிகாது. அவ்வுருபு வெளிப்பட்டிருப்பின் (வேற்றுமை விரி) ஒற்றுமிகும்.
 
"திங்கள் முதள் வெள்ளி வரை நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்' இது பெண்மணி ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி அறிவித்த வாக்கியம். சொற்றொடரில் பிழை இல்லை. உச்சரிப்பில் (ஒலிப்பில்) பிழை. முதல் என்னும் சொல்லை முதள் என்று லகரத்தை ளகரமாக உச்சரித்தார். திங்கள், வெள்ளி ளகரம் இருப்பதால், இந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருக்கலாம். நா நெகிழ் பயிற்சிகள் சிலவற்றால் இக்குறையைப் போக்க முடியும். முயற்சி வேண்டும்.
 
தூக்குத் தண்டனையா? தூக்கு தண்டனையா?
 
அண்ணாத்துரை என்னும் பெயருக்குச் சொன்ன விளக்கம்தான் இதற்கும். அஃதென்ன? "த ' வை (tha)என்று அழுத்தி வல்லொலியில் சொன்னால் "த்' வரும். "த' வை (dha) என மெல்லோசையில் "த்' வராது. தண்டனை (tha) என்பது தமிழ்க்குரிய ஒலி.
 
dha - த என்பது வடசொல் உச்சரிப்பு. ஆயின் தண்டனை தமிழ்ச் சொல்லா? வட சொல்லா? சாம, பேத, தான, தண்டம் - இவை வடசொற்கள். தண்டாயுதபாணி (தண்டு எனும் கருவியைக் கையிற் கொண்ட முருகன்) வடமொழிப் பெயர். தண்டம் - ஒறுத்தலையும் (தண்டித்தல்) தண்டு (ஆயுதத்தையும்) குறிக்கின்றன.
 
தமிழிலும் இந்தத் தண்டு இருக்கிறது. தாமரைத் தண்டு, வாழைத் தண்டு, முதுகுத் தண்டு, தண்டுவடம் என்பன எல்லாம் தமிழ் சொற்களே. tha என்றே ஒலிப்பவை இவை.
 
"பணத்தை வசூல் செய்தார்கள்' என்று பேசுகிறோம். வசூல் என்பதைச் சில பகுதிகளில் பணம் தண்டுதல் என்று சொல்லுகிறார்கள். நெல்லையில் பணம் பிரித்தல் (பறித்தல்) என்றும் சொல்லுவார்கள். வசூல் தமிழன்று.
 
தண்டு என்பதற்குச் சேனை (படை) என்ற பொருளும் உண்டு. கலிங்கத்துப் பரணியில் காண்க. ஒரு செலவு வீணான செலவு என்றால் தண்டச் செலவு என்கிறோம். உருப்படாத ஒருவனை "தண்டம், தண்டம்' என்று திட்டுகிறோம்.
 
தண்டனை ஒறுத்தல் என்னும் பொருளுடைய வடசொல்லாயினும் தமிழ் ஓலியில் (tha) தண்டனை என்று ஒலித்தால், தூக்குத் தண்டனை பொருத்தமானது. கீரைத் தண்டு, வாழைத் தண்டு எல்லாம் தமிழ்ச் சொற்களே. இங்கே (tha) தண்டினை (dha) தண்டு ஆக்க வேண்டாம்.
 
பாடாத தேனீ, வாடாத மலர், கேளாத காது - இவையெல்லாம் எவை? எதற்காக இந்த எடுத்துக் காட்டுகள்?
 
பாடாத் தேனீ, வாடா மலர், கேளாக் காது - இவற்றையும் பாருங்கள்.
 
இரண்டு வகை எடுத்துக் காட்டுகளிலும் எதிர்மறைப் பொருளில் (பாடாத, கேளாத) வந்துள்ளன. முற்றுப் பெறாத எச்சமாக நின்று தேனீ, மலர் , காது என்னும் சொற்களால் முற்றுப் பெற்றுள்ளன.
 
முன்னர் உள்ளவை எதிர்மறைப் பெயரெச்சம். அடுத்து உள்ளவை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். எப்படி? விளக்கம் என்ன? பார்ப்போமே.
 
ஒரு முற்றுப் பெறாத வினைச் சொல் (எச்சவினை) ஒரு பெயர்ச் சொல் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம்.
 
(எ-டு) ஓடிய குதிரை, வந்த பையன்
 
இத்தகைய பெயரெச்சம் எதிர்மறை வினை பெற்று வரின் எதிர்மறைப் பெயரெச்சம். (எ-டு) உலவாத தென்றல், கேளாத காது.
 
இதில் உலவாத என்னும் வினைச் சொல்லைச் சற்றே மாற்றி உலவா என்று சொல்லுதலும் உண்டு. ஈற்று (கடைசி) எழுத்து இல்லாமையால் இது ஈறு கெட்ட வினை. எப்படி முடிக்கலாம்? உலவாத் தென்றல், கேளாக்காது. இவை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்.
 
முதலில் பெயரெச்சம் - புரிந்து கொள்ளுங்கள். அடுத்து எதிர்மறைப் பெயரெச்சம். பின்னர் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். விளங்கிற்றா? இல்லையெனில் விட்டுவிடுங்கள். மீண்டும் அடுத்த நாள் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். புரியும்.

 
by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.