LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவுவோரைப் பாதுகாக்கும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புத

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவவோரைப் பாதுகாக்கும் வகையில் புதிய மசோதாவுக்கு  ஜனாதிபதி ஒப்புதல்!அளித்துள்ளார்.

நாடு முழுவதும் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. அதிக விபத்துக்கள் நடைபெறும் முதல் ஐந்து மாநிலங்களில் கர்நாடகா உள்ளது. விபத்தில் சிக்குபவர் களுக்கு உதவும் மனப்பான்மை மக்களிடம் குறைவாக உள்ளது.. உதவி செய்பவர்கள் பல்வேறு சட்டச் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. 
இதனால், கண்முன்னே விபத்து நடந்தாலும் ‘நமக்கு எதுவுக்கு வம்பு’ என்ற நினைப்பில் கடந்து  செல்பவர்களே அதிகம். விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் எதுவும் இதுவரையில்  இல்லை.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2015ல் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. இதனிடையே, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி உள்ளிட்டவற்றை வழங்கி, அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்களை பாதுகாக்கும் சட்டத்தை  கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது. 

‘கர்நாடகா சிறந்த சமாரிடன் மற்றும் மருத்துவ தொழில்முறை சட்டம் 2016’ என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்  அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 “இந்த சட்டத்தின்படி சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி  உள்ளிட்ட உதவிகளை செய்பவர்களை  ஊக்கப்படுத்த நிதியுதவி அளிக்கப்படும். அவர்கள்  நீதிமன்றம், காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு வரத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில்  சேர்த்து விட்டு உடனடியாக வெளியேறலாம்”  என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

by Mani Bharathi   on 01 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.