LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு விவரங்கள் அறிய எல்இடி டிவிகள்: அதிகாரிகள் தகவல்!

தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு விவரங்களை அறிய எல்இடி டிவி கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோர்ட்டுகளில்  தங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நாளில் சம்பந்தப்பட்டவர்கள் மணிக்கணக்கில் கோர்ட்டு வளாகத்தில் காத்திருக்க வேண்டும். இது ஒருபுறம் என்றால் கோர்ட்டில் இருந்து விசாரணைக்கு அழைக்கும்போது,  வளாகத்தில் இருந்தும் அழைக்கப்பட்டது தெரியாமல் வழக்கில் ஆஜராகாமல் வழக்கு தொடர்புடையவர்கள் சென்று விடுவதும் உண்டு.

இதனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அன்றைய தினம் வரவில்லை என்று நினைத்து, அடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டு்களில் அன்றைய தினம் எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. 

விசாரணை நடந்து வரும் வழக்கின் விவரம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு வளாகத்திற்கு வெளியே சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல லட்சம் செலவில் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல் கோர்ட்டிற்கு உள்ளேயும், வழக்கறிஞர்கள், நீதித்துறையை சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டு உள்ளன. இப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

அதேபோல் வேலூர் மாவட்டத்தில் அனைத்து  கோர்ட்டுகளிலும் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

by Mani Bharathi   on 29 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.