LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

லெனின்

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே .

தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது

நிறைய இருக்கிறது .


உலகத் தலைவர்களில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் லெனின் (Lenin ) ஆவார் . இவர் 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று ரஷ்யாவின் வால்கா நதிக்கரை ஓரம் உள்ள சிம்பிர்ஸக் என்னும் நகரத்தில் பிறந்தார் . இவரின் பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் . லெனின் என்பது ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர் . பின்னர் விளாடிமிர் லெனின் எனத் தனது பெயரை மாற்றிக் கொண்டார் . கார்ல் மார்க்ஸின் மூலதனம் என்னும் புத்தகத்தைப் படித்த பிறகு தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என முடிவு செய்தார் .

ரஷ்யப் புரட்சிக்கு தலைமை தாங்கி கம்யூனிஸ்ட் ஆட்சியை 1917 ஆம் ஆண்டில் கொண்டுவந்தார் . கார்ல் மார்க்ஸின் சித்தாந்தத்தை வரலாற்றில் முதன்முதலில் செயல்படுத்தினார் . சோவியத் ரஷ்யாவின் முதல் அதிபராக லெனின் பதவி வகித்தார் . ஆட்சி அமைத்த மறுநாளே நிலபிரபுக்களின் விளைநிலங்களைக் கைப்பற்றி விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார் . ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசம் பரவியது . லெனின் நிறைய படித்தார் . புரட்சிகரமான கருத்துகளை புத்தகமாக எழுதினார் . அவை 55 தொகுதிகளாக வெளிவந்தன . இவர் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று காலமானார் . அவரது பதப்படுத்தப்பட்ட உடல் மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.