LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

லியோ டால்ஸ்டாய்

எல்லோரும் உலகத்தை மாற்ற வேண்டும்

என்று எண்ணுகிறார்களே தவிர ஒருவரும்

தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும்

என்று எண்ணுவதில்லை .


உலகின் மிகச் சிறந்த நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) ஆவார் . இவர் ஒரு ரஷ்ய எழுத்தாளர் . புதின எழுத்தாளர்களில் மிகச் சிறந்த ஒருவராகக் கருதப்படுகிறார் . மிகத் தெளிவான சிந்தனையாளராக விளங்கினார் . இவர் 1828 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று யாஸ்னயா என்னுமிடத்தில் ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார் . ஆரம்பத்தில் சிறு கதைகளை மட்டுமே எழுதிவந்தார் . பிற்காலத்தில் நாடகங்களையும் , கட்டுரைகளையும் எழுதினார் . இவரின் சிறந்த நாவல்களாக போரும் அமைதியும் ( War and Peace ) மற்றும் அன்னா கரேனினா கருதப்படுகின்றன . இது மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது . இவை 19 ஆம் நூற்றாண்டின் ரஷிய வாழ்க்கையை சித்தரிக்கிறது . இவை எல்லாக் காலத்திலும் போற்றப்படக்கூடிய நாவல்களாக விளங்குகின்றன .

லியோ டால்ஸ்டாய் ஓர் அமைதி விரும்பி , சமூக சீர்திருத்தவாதி . ஒருவர் ஒருவரை மன்னிப்போம் , அப்போதுதான் அமைதியாக வாழமுடியும் என்றார் . இவர் கல்விச் சீர்திருத்தவாதியாகவும் இருந்தார் . தான் கற்றறிந்த , கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை தன் வாழ்நாளில் பின்பற்ற முயன்றார் . டால்ஸ்டாய் நிமோனியாக் காய்ச்சலால் 1910 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று அஸ்தபோவ் என்னும் சின்னஞ்சிறிய ரயில் நிலையத்தில் இறந்தார் . இறுதிச் சடங்கில் மக்கள் வெள்ளமாகத் திரண்டனர் . இறுதி ஊர்வலத்தைப் பார்த்தவர்கள் ஒரு பெருமகன் இறந்துள்ளார் என்று போற்றியுள்ளனர் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.