மாரி பட சூட்டிங்கின் இறுதிநாளில், படக்குழுவினருக்கு, நடிகர் தனுஷ், விருந்து வழங்கி அசத்தியுள்ளார்.
காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன், தற்போது தனுஷை வைத்து மாரி என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாரி படத்தின் கடைசி நாள் சூட்டிங், நேற்று ( மார்ச் 15ம் தேதி) நடைபெற்றது. படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில், படக்குழுவினருக்கு, நடிகர் தனுஷ் விருந்தளித்தார்.
நடிகர் அஜித் தான் முதன்முதலில், படக்குழுவினருக்கு, தனது கையால் பிரியாணி பரிமாறி வந்துகொண்டிருந்தார். பின், இந்த பழக்கத்தை, சமீபத்தில், நடிகர் விஜய்யும் கடைப்பிடிக்க துவங்கினார். இந்நிலையில், தனுஷூம், படத்தின் சூட்டிங் இறுதிநாளில், விருந்து கொடுத்தி அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
|