LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

உருவம் கண்டு யாரையும் எடை போடாதே

ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று குகைக்குள் தூங்கிக் கொண்டு இருந்தது.


அங்கு வந்த சுண்டெலி சிங்கத்தின் மீது ஏறி குதித்து விளையாடியது.


இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் சுண்டெலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்” என்று கர்ஜித்தது.


ஆனால் சுண்டெலியோ! சிங்கத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்”. எனக் கெஞ்சிக் கேட்டது. 


சிங்கத்திடம் “இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்” என்றது. சிங்கமோ, “இவ்வளவு சிறிய உடம்பை வைத்துகொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?” என்று சுண்டெலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் சுண்டெலியைக் கொல்லாமல் போக விட்டது.


சில நாட்கள் சென்றது. ஒரு நாள் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேட்டைக்காரர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிகொண்டது.


வலையில் மாட்டிக் கொண்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது.


அந்தச் சிறிய சுண்டெலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது.


சிங்கம் இந்தச் சின்ன சுண்டெலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு சுண்டெலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.


என்ன குட்டீஸ் இந்த கதையின் மூலம், உருவத்தை வைத்து யாரையும் எடை போடக் கூடாது என தெரிந்து கொண்டீர்களா !!

by Swathi   on 19 Mar 2014  0 Comments
Tags: சிங்கமும்   எலியும்   Lion and the Rat              
 தொடர்புடையவை-Related Articles
உருவம் கண்டு யாரையும் எடை போடாதே உருவம் கண்டு யாரையும் எடை போடாதே
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.