LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- சமூகப் பங்களிப்பு

மதுவிற்கு எதிரான தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்ற ஆனந்தன்

மதுவிற்கு எதிரான போராட்டத்திற்காக 19 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஆனந்தன் அவர்கள் நேற்று(மே 10) பெயிலில் விடுதலையானார். அவரைச் சந்தித்தோம். சிறை செல்வது இது 5வது முறை என்பதால் சிறை வாழ்க்கை பழகிவிட்டது என்றார். இரு கைகளிலும் ஏதோ ஸ்டாம்பு(முத்திரை) குத்தியது போல் தெரிந்தது. என்னவென்று கேட்டோம், “...விடுதலை செய்யப்படுபவர்கள் கையில் இது குத்தப்படுவது வழக்கம். விடுதலையானவர்கள் ஊர் சென்று சேர்வதற்கு கையில் காசில்லாமல் இருக்கலாம். அவர்கள், இந்த முத்திரையைப் பேருந்தில் காட்டினால் பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை. இந்தமுறை, இரு கைகளில் உள்ள முத்திரையைக் காட்டித்தான் புழல் சிறையிலிருந்து பிராட்வே வந்து சேர்ந்தேன்(பேருந்தில்)” என்றார்.


அடுத்தகட்டப் போராட்டம் மக்களைத் திரட்டி, இன்னும் வலுவாக நடத்தப்படும் என்று தெரிவித்தார். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில், ஜீன் 22(ஞாயிறு) அன்று தமிழகமெங்கும் இருக்கும் மதுஒழிப்பு ஆர்வலர்களை ஒருங்கிணைத்து திருச்சியில் கூட்டம் ஒன்று நடத்த இருக்கிறோம் ; அதில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். அவசியம் வருவதாகத் தெரிவித்தார்.


ஆனந்தன் அவர்கள் தமிழக அரசு ஊழியராக இருந்தவர். சமூகப் பணிகளுக்காக, அரசுப் பணியைத் துறந்து, சிறையில் சீரழிந்து – பேருந்தில் அத்தனை பயணிகளுக்கு நடுவில் கையிலுள்ள சிறை முத்திரையைக் காண்பித்து பயணித்து - இரவில் முன்பதிவில்லா பயணத்தில், 20நாள் தாடி மட்டும் உடன்செல்ல, தனியாக மதுரை திரும்பும் - இவரின் தியாகத்தை விவரிக்க வார்த்தையில்லை, வணங்குவோம்.


ஓரிரு நாள் சிறைசெல்லும் அரசியல்வாதிகளுக்கு, உண்ணாவிரதம் நடத்தும் தலைவர்களுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம், உணர்வுபூர்வமாக 19 நாள் சிறையில் இருந்து திரும்பிய ஆனந்தன் அவர்களுக்குக் கிடைக்கவில்லையே என்பது மட்டும்தான் நம் ஆதங்கம். 

by Swathi   on 11 May 2014  0 Comments
Tags: Mathu Olippu   Mathu Vilakku   Mathu Olippu Tamilnadu   Mathu Vilakku Tamilnadu   Liquor Prohibition   TASMAC   மது ஒழிப்பு  
 தொடர்புடையவை-Related Articles
சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார் சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார்
அதிகரித்து வரும் மது கடைகள் !! சீரழிந்து வரும் இளைய சமுதாயம் !! மதுக்கடைகளை மூட சட்டம் சொல்வது என்ன ? அதிகரித்து வரும் மது கடைகள் !! சீரழிந்து வரும் இளைய சமுதாயம் !! மதுக்கடைகளை மூட சட்டம் சொல்வது என்ன ?
மதுவிற்கு எதிரான தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்ற ஆனந்தன் மதுவிற்கு எதிரான தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்ற ஆனந்தன்
என் படத்தில் இனி டாஸ்மாக் காட்சிகள் இருக்காது - உதயநிதி ஸ்டாலின் !! என் படத்தில் இனி டாஸ்மாக் காட்சிகள் இருக்காது - உதயநிதி ஸ்டாலின் !!
தமிழக டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை !! தமிழக டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை !!
இன்றைய சினிமாவின் நிலை படுமோசமாக இருக்கிறது : ராதிகா சரத்குமார் !! இன்றைய சினிமாவின் நிலை படுமோசமாக இருக்கிறது : ராதிகா சரத்குமார் !!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 154 கோடி ரூபாய்க்கு மது விற்பனை !! தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 154 கோடி ரூபாய்க்கு மது விற்பனை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.