LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்

அன்று குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்,அவனோட நண்பர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

அப்பா யானை இரண்டு வாழைத்தார்களை பறித்து கொடுத்தது. குட்டி யானை கணேசனுக்கு ஒரே சந்தோசம், அவனுடைய நண்பர்களுக்கு வாழைப்பழம் என்றால் உயிர். அதனால் இரண்டு வாழைத்தார்களையும் தன் குட்டித்தும்பிக்கைகளில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு சென்றது.

வழியில் நரியார் வழி மறித்து "குண்டு கணேசா" என்ன கொண்டு போகிறாய்? என்று கேட்டது. குட்டி யானை கணேசனும், என்னோட நண்பர்களுக்கு பழம் கொண்டு போகிறேன் என்று சொன்னது. அப்படியா ரொம்ப சந்தோசம் எனக்கும் இரண்டு சீப் பழம் கொடு என்றது. ஹூகூம் அதெல்லாம் முடியாது, என்னோட நண்பர்களுக்கு மட்டும்தான் கொடுப்பேன் என்று சொன்னது. நான் உன்னை விட மூணு கிளாஸ் அதிகமா படிக்கிறேன், எனக்கே கொடுக்க மாட்டீங்கறயா? என்று மிரட்டியது., குட்டி கணேசன் பயந்து கொண்டு சரி சரி இந்தா இரண்டு சீப் பழம் மட்டும்தான் என்று சொல்லி நரியாரிடம் கொடுத்துவிட்டு  வேகமாக நடந்த்து.

கொஞ்ச தூரம் சென்றதும் வழியில் குரங்கு குசலா வந்துகொண்டிருந்தாள். அவள் குட்டி கணேசன் வகுப்பில்தான் படிக்கிறாள். என்ன தும்பி கணேசா வாழைப்பழத்தை எடுத்துட்டு எங்கே போகிறாய்? நான் என் நண்பர்களை பார்க்க போறேன் என்று பதில் சொன்னது குட்டி யானை கணேசன். அப்படீயா ரொம்ப மகிழ்ச்சி, அதுக்கு வாழைப்பழம் எதுக்கு எடுத்துட்டு போறே?அதுவா எனக்கு பிறந்த நாள் அதுக்குத்தான் என்று குட்டியானை கணேசன் சொன்னான். ரொம்ப மகிழ்ச்சி, நான் உன்னுடைய வகுப்பில்தானே படிக்கிறேன். எனக்கும் இரண்டு சீப் பழம் கொடுத்துட்டு போ,என்று கேட்டது.முதலில் மறுத்த குட்டி யானை கணேசன் சரி இந்தா என்று பரிதாபப்பட்டு இரண்டு சீப் பழங்களை கொடுத்தது.

டுத்ததாக கரடியார் எதிரில் வந்து குட்டி யானை கணேசனிடம் வாழ்த்துச்சொல்லி

இரண்டு சீப் பழங்களை கொடுக்கச்சொன்னது.குட்டி யானை கணேசனும் வேறு வழியில்லாமல் இரண்டு சீப் பழங்களை கொடுத்தது.

அதற்குப்பின்னால் வரிசையாக மான், ஓநாய், முயல், காட்டுப்பன்றி என்று வாழ்த்துச்சொல்லி,”எனக்கு இரண்டு சீப் பழம் கொடு” என்று வாங்கி சென்றன. இப்படி எல்லாருக்கும் கொடுத்து, கொடுத்து, கொண்டு போன இரண்டு வாழைத்தார் பழங்களும் தீர்ந்து போய்விட்டன. குட்டி கணேசனுக்கு அழுகை தாங்க முடியவில்லை. “கோவென” அழுதுகொண்டே தன் நண்பர்களை பார்க்காமல் மறுபடியும் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டது.

அப்பா யானையும், அம்மா யானையும், மகன் குட்டி யானை கணேசன் அழுதுகொண்டே ஓடி வருவதை பார்த்து பதட்டத்துடன் என்ன கணேசா எதற்கு அழுதுகொண்டே ஓடி வருகிறாய்? என்று கேட்டன. அதற்கு குட்டி யானை கணேசன் தான் கொண்டு போன பழங்களை, எல்லோரும் வாங்கிக்கொண்டதையும், கடைசியில் ஒரு பழம் கூட இல்லாமல் தீர்ந்துவிட்டதால், நண்பர்களை பார்க்காமல் ஓடி வந்து விட்டதை அழுது கொண்டே சொன்னது.

இவ்வளவுதானா! இதற்கா அழுவுவது, எல்லோருக்கும் கொடுத்து உதவுவது நல்லதுதானே, அதுவும் உன் பிறந்த நாளைக்கு இப்படி எல்லோருக்கும் கொடுத்து உதவினால் புண்ணியம் தான் கிடைக்கும். கவலைப்படாதே, உனக்கு வேணும் என்கிற அளவுக்கு பழங்கள் தருகிறேன் என்னுடன் வா, என்று அப்பா யானை குட்டியானை கணேசனை அழைத்தது. அப்பொழுது வெளியில் ஒரே சத்தம் என்னவென்று  அப்பா, அம்மா, குட்டி யானை கணேசன், ஆகியோர் எட்டிப்பார்த்தனர். வெளியே நரி,கரடி, மான், குரங்கு, மற்றும் குட்டியானை கணேசனிடம் பழம் வாங்கியவர்களும், கூடவே குட்டி யானை கணேசனின் நண்பர்கள் ஆகியோர் கைகளில் பரிசுப்பொருள்களுடன் நின்று கொண்டு "ஹேப்பி பர்த்டே கணேசா" என்று சொல்லி கொண்டு வந்த பரிசுப்பொருட்களை அதன் கையில் கொடுத்தன.

இதைப்பார்த்த குட்டியானை கணேசனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை, பெருமையாக தன்னுடைய அப்பாவை பார்க்க "பார்த்தாயா கணேசா நாம் ஒருவருக்கு கொடுத்தால் அது பல மடங்கு நமக்கே வரும்" பழம் கொடுத்தற்கு அழுதாயே, உனக்கு இப்பொழுது எத்தனை பரிசுப்பொருட்கள் வந்துள்ளது பார்த்தாயா, நம் வீட்டில் உள்ள எல்லா பழங்களையும் கொண்டு போய் அவர்களுக்கு கொடு என்று அன்புடன் சொல்ல, குட்டியானை கணேசன் அனைவரையும் இருக்கச்சொல்லி ஓடி ஓடி பழங்களை கொடுத்து மகிழ்ந்தது.

 (அனைவருக்கும் கொடுத்து உதவினால் உங்களுக்கு இரு மடங்காய் திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் குழந்தைகளே)

kutti yanai ganeshanuku pirantha nall
by Dhamotharan.S   on 04 Feb 2016  0 Comments
Tags: Yanai Kathaigal   குட்டி யானை   Elephant Stories              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.