LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மயிலாப்பூர் மதுக்கடை முற்றுகை போராட்டத்திற்கு லோக் சத்தா கட்சி ஆதரவு !

 

கோரிக்கை: பொது மக்களுக்கு தொல்லை தரும் விதத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் ஆகியவற்றை அகற்றக்கோரியும், காவல்துறையின் யதேச்சாதிகாரப் போக்கை கண்டித்தும்..
 தேதி/நேரம்: 26 ஏப்ரல் 2013, வெள்ளிகிழமை காலை 10 மணி.
 இடம்: டாஸ்மாக் மதுக்கடை முன்பாக. No 916, PNK தோட்டம் (முண்டகண்ணியம்மன் கோவில் MRTS ரயில் நிலையம் பின்புறம்), வித்யா மந்திர் பள்ளி அருகில், மயிலாப்பூர், சென்னை.
 போராட்ட காரணம்: PNK தோட்டம், மயிலாப்பூரில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொது மக்கள் சார்பில் வெகு நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இரவில் குடிகாரர்கள் தெருவோரத்திலேயே  குடித்துவிட்டு பாட்டில்களை உடைப்பது, அங்கேயே வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அந்த பகுதி மக்கள் அமைதியான வாழ்கை நடத்த முடியாமல் இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு நேரத்தில் அந்த பகுதியே கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருட்டியபின் அந்த பொது இடமே பார் போல காட்சியளிக்கிறது. சமூக விரோதிகள் கூடவும் வசதியாக அமைகிறது.
 சில நாட்களுக்கு முன் டாஸ்மாக்கிற்கு வந்த லாரி தெருவை மறைத்து நின்றதை நகர்த்த சொன்ன பொது மக்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கே வந்த காவலர்கள் பொதுமக்களை தாக்கி டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். காவல்துறையின் இந்த போக்கு டாஸ்மாக் ஊழியர்களுககு மேலும் உறுதி அளித்து அவர்கள் செய்வது சரி என்ற எண்ணத்தை அளிக்கிறது.
 பொது மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள, பொது மக்களை அச்சுறுத்துவோர்களின் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள ஆகிய நியாயமான காரணங்களுக்காக போராட்டம் நடத்துகிறார்கள். 
 லோக் சத்தா கட்சி போராட்டம் செய்யும் பொது மக்களுக்கு ஆதரவு அளிக்கிறது. டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்யும் என தெரிவித்துக்கொள்கிறது.

கோரிக்கை: பொது மக்களுக்கு தொல்லை தரும் விதத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் ஆகியவற்றை அகற்றக்கோரியும், காவல்துறையின் யதேச்சாதிகாரப் போக்கை கண்டித்தும்..

 

 தேதி/நேரம்: 26 ஏப்ரல் 2013, வெள்ளிகிழமை காலை 10 மணி.

 

 இடம்: டாஸ்மாக் மதுக்கடை முன்பாக. No 916, PNK தோட்டம் (முண்டகண்ணியம்மன் கோவில் MRTS ரயில் நிலையம் பின்புறம்), வித்யா மந்திர் பள்ளி அருகில், மயிலாப்பூர், சென்னை.

 

 போராட்ட காரணம்: PNK தோட்டம், மயிலாப்பூரில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொது மக்கள் சார்பில் வெகு நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இரவில் குடிகாரர்கள் தெருவோரத்திலேயே  குடித்துவிட்டு பாட்டில்களை உடைப்பது, அங்கேயே வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அந்த பகுதி மக்கள் அமைதியான வாழ்கை நடத்த முடியாமல் இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு நேரத்தில் அந்த பகுதியே கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருட்டியபின் அந்த பொது இடமே பார் போல காட்சியளிக்கிறது. சமூக விரோதிகள் கூடவும் வசதியாக அமைகிறது.

 

 சில நாட்களுக்கு முன் டாஸ்மாக்கிற்கு வந்த லாரி தெருவை மறைத்து நின்றதை நகர்த்த சொன்ன பொது மக்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கே வந்த காவலர்கள் பொதுமக்களை தாக்கி டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். காவல்துறையின் இந்த போக்கு டாஸ்மாக் ஊழியர்களுககு மேலும் உறுதி அளித்து அவர்கள் செய்வது சரி என்ற எண்ணத்தை அளிக்கிறது.

 

 பொது மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள, பொது மக்களை அச்சுறுத்துவோர்களின் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள ஆகிய நியாயமான காரணங்களுக்காக போராட்டம் நடத்துகிறார்கள். 

 

 லோக் சத்தா கட்சி போராட்டம் செய்யும் பொது மக்களுக்கு ஆதரவு அளிக்கிறது. டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்யும் என தெரிவித்துக்கொள்கிறது.

 

by Swathi   on 25 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.