|
|||||
அரசியல் கட்சிகள் தகவல் அறியும் சட்டத்தில் - லோக் சத்தா கட்சி வரவேற்கிறது |
|||||
அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் சட்டத்தில் கொண்டுவரும் மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பைலோக் சத்தா கட்சி கொள்கை அடிப்படையில் வரவேற்கிறது.
அரசியல் கட்சிகளை பொதுநலத்துக்கு அல்லாமல் தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்துவோர்க்கு இத்தீர்ப்புகசப்பை தரும்.
இத்தீர்ப்பு கட்சிகளை வெளிப்படையாக இயங்க வைப்பதோடு, அவர்களின் வரவு செலவு கணக்குகளை மக்கள்முன் பகிர வழிவகுக்கும்.
தங்களிடம் ஒட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகள் எப்படி செயல்படுகின்றன என்று அறிய மக்களுக்கு உரிமைஇருக்கிறது.
அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என லோக் சத்தா கட்சி வெகுநாட்களாகவே கோரிக்கை வைத்துவருகிறது. நிதி திரட்டல் மற்றும் செலவீனம் ஆகிவற்றில்வெளிப்படைத்தன்மை, கட்சி உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது, வேட்பாளர் தேர்வில்வழிமுறைகளை ஆகியவற்றை கட்சிகள் கடைபிடிக்கவேண்டும்.
கட்சியின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து இணையதளத்தில் வெளியிடுவதை நாட்டிலேயேமுதல்முறையாக செய்தது லோக் சத்தா கட்சி என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய தகவல் ஆணையத்தின் இந்த பரிந்துரை தேர்தல் சீர்திருத்தத்தில் சிறிய ஆனால் முக்கியமான படி.எனினும் தேர்தலில் கருப்பு பணம், ஒட்டு விற்பனை ஆகியவற்றை தடுக்க தற்போதுள்ள தேர்தல் முறையைமாற்றி இந்திய சூழ்நிலைகேற்ப விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த வேண்டும் என லோக் சத்தாகோரிக்கை வைக்கிறது.
அணைத்து கட்சிகளும் இந்த உத்தரவை மதித்து தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டுமாய் லோக் சத்தா கட்சிகேட்டுக் கொள்கிறது.
அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் சட்டத்தில் கொண்டுவரும் மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பைலோக் சத்தா கட்சி கொள்கை அடிப்படையில் வரவேற்கிறது.
|
|||||
Lok Satta Party welcomes bringing Political parties under RTI | |||||
Lok Satta Party welcomes in principle the verdict of the Central Information Commission (CIC) bringing political parties under the purview of the Right to Information (RTI) Act.
|
|||||
by Swathi on 05 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|