LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

லோக் சத்தாவின் ‘நீதித்துறை ஆணையம்’ அமைக்கும் கனவு நனவானது : டாக்டர் ஜே.பி

'நீதித்துறை நியமனங்கள் ஆணையம்' அமைக்க வழிவகுக்கும் 'அரசியலமைப்பு சட்ட (120 திருத்தம்) மசோதா 2013, மாநிலங்களவை நிறைவேற்றியதை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது.

 

'நீதித்துறை நியமனங்கள்' மற்றும் 'இந்திய நீதித்துறை பணிகள்' அமைப்பது குறித்து ஆலோசனை வழங்க லோக் சத்தா கட்சி நேர்மையான, நம்பிக்கைக்குரிய மூன்று மேதகைய நீதிபதிகளை ஒருங்கினைத்ததை இங்கே நினைவுகூருவது குறிப்பிடத்தக்கது. முன்னாள் தலைமை நீதிபதிகள் M.N வெங்கடசலைய்யா, J.S வர்மா, நீதிபதி V.R கிருஷ்ண ஐயர் மற்றும் டாக்டர் ஜே.பி அடங்கிய குழு, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனிக்க 'தேசிய நீதித்துறை ஆணையம்' அமைப்பது மற்றும் மாநில அளவில் நீதிபதிகளை நிர்ணயிக்க தேசிய அளவிலான, போட்டித் தேர்வு அடிப்படையில் 'இந்திய நீதித்துறை பணி' முறையை அமைப்பது குறித்த அறிக்கையை வழங்கியது.

 

லோக் சத்தா கட்சி இவ்வறிக்கையை அணைத்து முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களோடு பகிர்ந்து, அரசு மற்றும் எதிர்கட்சி தலைவர்களிடம் இதன் சிறப்பம்சங்களை எடுத்துறைத்தது.

 

மாநிலங்களவையால் ஏற்றுகொள்ளபட்ட மசோதா, மேதகைய மூன்று நீதிபதிகளின் பரிந்துரைகளை தழுவிய வடிவமே என்று லோக் சத்தாவின் தேசிய தலைவர் டாக்டர். ஜெயபிரகாஷ் நாராயன் சுட்டிக் காட்டினர்.

 

'இந்த சட்ட மசோதாவானது உயர் நீதிபதிகள் நியமனத்தில் செயலாட்சித் துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை ஒருங்கிணைக்கும்' என்று செய்தி அறிக்கையில் டாக்டர் ஜே.பி கூறினார். நீதித்துறை நியமங்கள் மற்றும் பொறுப்புடைமை சட்டங்களை ஒன்றினைப்பதால், உயர்நீதித்துறையின் தரம் மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டும் உறுதிப்படும். 'இந்திய நீதித்துறை பணிகள்' துறை அமைப்பதும் மெய்யானால், அந்த அமைப்பு நீதித்துறைக்கு பேரளவிலான நன்கு தகுதிவாய்ந்த நீதிபதிகளை உருவாக்கிக் கொடுக்கும்.

 

உச்ச நீதிமன்றம் 'கூட்டமைப்பு' முறையை அறிமுகப்படுத்தி ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரத்தை பறித்துக்கொண்டதை டாக்டர் ஜே.பி நினைவுகூர்ந்தார்.

 

"இந்த அதிகார கைப்பற்றுதல் அரசியலமைப்புக்கு தெளிவாக முரண்பட்டது. அரசும் அதன் அங்கங்களுக்கும் இடையே உள்ள சமநிலை சரிபார்ப்பு கொள்கைக்கு விரோதமானது. தன்னிச்சையாக நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம், அவர்களிடமே இருப்பதென்பது வேறு எந்த குடியாட்சியிலும் காணப்பெறாத ஒன்று. உச்சநீதிமன்றத்தின் கூட்டமைப்பு முறையால் நீதிபதிகளை நியமிப்பது, நடைமுறையில் மனநிறைவை அளிப்பதாக இல்லை. நீதித்துறையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை கீழறுப்பதாக உள்ளது" என்று டாக்டர் ஜே.பி கூறினார்.

 

மக்களின் தன்னுரிமையை காப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவதிலும் முக்கியமாக இந்தியா போன்ற மிகுந்த பலதரப்பட்ட, வேறுபட்ட சமூகத்தின் முரண்பாடான கருத்துகளை ஒருமிப்பதிலும் சமரசபடுத்துவதிலும், இந்திய நீதித்துறையின் பங்கை டாக்டர் ஜே.பி எடுத்துக்கூறினார்.

 

பரிந்துரைக்கபடுள்ள 'நீதித்துறை நியமனங்கள் ஆணையம்' உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள், சட்ட அமைச்சர், சட்ட செயலாளர் மற்றும் இரண்டு மேதகைய சட்ட வல்லுனர்கள் உள்ளடக்கிய குழுவாகும். பிரதமர், எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழு சட்ட வல்லுனர்களை தேர்ந்தெடுக்கும்.

 

'இந்திய நீதித்துறை பணி' துறையையும் அமைக்கும் சட்ட மசோதாவை ஆதரிக்ககுமாறு அணைத்து கட்சிகளுக்கும், சட்ட வல்லுனர்களுக்கும், வழக்குரைஞர்கழக உறுப்பினர்களுக்கும் டாக்டர் ஜே.பி வேண்டுகோள் வைத்தார்.

Lok Satta realizes its dream of a Judicial Commission: Dr. JP

The Lok Satta Party welcomes the Rajya Sabha passing the Constitution (120th Amendment) Bill, 2013 providing for creation a Judicial Appointments Commission (JAC).

 

 It may be recalled that the Lok Satta had brought together three eminent judges of unimpeachable integrity and credibility to come up with proposals for judicial appointments and an Indian Judicial Service. The three judges – Chief Justice M. N. Venkatachalaiah, Chief Justice J. S. Verma and Justice V. R. Krishna Iyer – produced a report recommending formation of a National Judicial Commission for appointment of judges in higher courts and an Indian Judicial Service for competitive, nation-wide recruitment of judges at the district judge level.

 

 The Lok Satta Party shared the report with all major political parties and parliamentarians and briefed Government and Opposition leaders on its salient features.

 

 The Bill adopted by the Rajya Sabha on September 5 is a modified version of the proposals made by the three eminent judges, pointed out Lok Satta Party national President Dr. Jayaprakash Narayan.

 

 In a media statement, Dr. JP said that the Bill associates the executive, legislature and judiciary in the appointment of higher judges. Combined with the Judicial Standards and Accountability law, the Bill ensures both quality and accountability in the higher judiciary.  If the Indian Judicial Service also becomes a reality, it will provide a large pool of highly qualified judges in the subordinate judiciary for appointment to higher courts.

 

 Dr. JP recalled that the Supreme Court usurped the power to appoint judges of higher courts for nearly two decades by introducing the collegiums system.

 

 Dr. JP said: “This usurpation is plainly unconstitutional, and violates the principle of checks and balance in relation to organs of the State. In no other democracy judges are the sole appointing authority of judges. Even in practice, appointment of judges by the Supreme Court collegium has been found to be unsatisfactory and undermining the quality and credibility of the judiciary“.

 

 Dr. JP pointed out that the Indian judiciary plays a seminal rule in safeguarding citizens’ liberty, promoting rule of law and above all in reconciling and harmonizing conflicting points of view in a highly diverse and polarized society like India. Therefore, the courts’ credibility and quality of individual judges are critical.

 

 The proposed Judicial Appointments Commission will comprise the Chief Justice of the Supreme Court, two Supreme Court judges, Law Minister and Law Secretary and two eminent jurists. The jurists will be chosen by a committee comprising the Prime Minister, leader of the Opposition and Chief Justice of India.

 

 Dr. JP appealed to all political parties, jurists and members of the bar to support the proposal for constitution of the Indian Judicial Service also.

by Swathi   on 10 Sep 2013  0 Comments
Tags: Lok Satta   Judicial Commission   லோக் சத்தா   நீதித்துறை ஆணையம்           
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்: தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்:
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம்
நீதித்துறை நியமனங்கள் ஆணையம் - பாராளுமன்ற நிலைக்குழு லோக் சத்தா தலைவர்கள் சந்திப்பு நீதித்துறை நியமனங்கள் ஆணையம் - பாராளுமன்ற நிலைக்குழு லோக் சத்தா தலைவர்கள் சந்திப்பு
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
லாலு மீது குற்றம் நிரூபணம் - லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது லாலு மீது குற்றம் நிரூபணம் - லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது
லோக் சத்தாவின் ‘நீதித்துறை ஆணையம்’ அமைக்கும் கனவு நனவானது : டாக்டர் ஜே.பி லோக் சத்தாவின் ‘நீதித்துறை ஆணையம்’ அமைக்கும் கனவு நனவானது : டாக்டர் ஜே.பி
சித்தாந்த மாற்றம் தேவை - இந்தியாவின் சாத்தியங்கள் மெய்ப்பட: டாக்டர். ஜே.பி சித்தாந்த மாற்றம் தேவை - இந்தியாவின் சாத்தியங்கள் மெய்ப்பட: டாக்டர். ஜே.பி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.