|
||||||||
இலவசங்களும், விளம்பரங்களும் ஏழ்மையை ஒழிக்காது - லோக் சத்தா |
||||||||
இன்று 1006 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர்,மந்திரிகள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட (திரு)விழாவில் அனைத்து மணமக்களுக்கும் 4கிராம் தங்க மாங்கல்யம், வெள்ளி மெட்டியுடன், வேட்டி,சேலை, பாத்திரங்கள், பாய், தலையணை உட்பட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அரசாங்கம் கல்யாணம் நடத்தி வைக்க வேண்டிய அவசியமென்ன...? சரி.. இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்தத் திருமணம் அந்தத் துறை சார்ந்த ஒரு சாதாரண நிகழ்வு என்றில்லாமல், முதலமைச்சர், மந்திரிகள் கலந்துகொண்ட பெருவிழாவாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன..? இலவசங்களை அள்ளித்தரும் அரசு இது என்று பிரகடனப்படுத்துவதற்குத்தானே..? இந்த அரசு ஏழைகளின் பங்காளி என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்வதற்குத்தானே...? புதுக்கோட்டை இடைத்தேர்தல் திருவிழா முடித்துவிட்டு இப்போதுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் சென்னை திரும்பினார்கள். அதற்குள், அடுத்த திருவிழா. இதுவல்லாமல், திருமணம் நடந்த திருவேற்காடு பகுதியைச் சுற்றியிருக்கும் அரசு அதிகாரிகள் அனைவரும், பல வாரங்கள் தங்களுடைய "அடிப்படை வேலைகளை" விட்டுவிட்டு இதற்காக பம்பரமாக சுழன்று வேலை செய்திருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.இந்த 1006 ஜோடிகளும் உண்மையாகவே அரசு உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களா என்பது சந்தேகமே. முதலமைச்சர், மந்திரிகள் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிபோல் நடத்தப்படும் இதில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள்தான் அதிகம் பயனடைந்திருப்பார்கள் என்று கணிக்க இடமிருக்கிறது. மேலும், அரசு பணத்தில், கட்சி வளர்க்கும் நிகழ்வாகத்தான் இதனைக் கருத வேண்டியிருக்கிறது.இந்தத் திருமணத் திருவிழாவிற்கு அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கஜான காலியாக உள்ளது என்று தனது ஆட்சியைத் தொடங்கிய இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டுதான் ஆகிறது. அதற்குள், கஜானா நிறைந்து வழியத் தொடங்கிவிட்டதா..? எதற்கிந்த வீண் விளம்பரம்..? யாருக்குப் பயன் தரப்போகிறது..? 1006 ஜோடிகளுக்கு கிடைக்கும் உதவியைவிட (இலவசப் பொருட்கள்) ஏற்பாடுகளுக்கும், விளம்பரங்களும் பலமடங்கு செலவு செய்யப்பட்டிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. வேலைவாய்ப்பைப் பெருக்கி, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியளித்து மக்களை தற்சார்புடன் வாழவைக்க வேண்டிய அரசு எத்தனை காலம்தான் இலவசம்..இலவசம்..இலவசம் என்ற போதையின் பாதையில் மக்களை வழிநடத்தப்போகிறது..? ஏழ்மையை ஒழிக்க இலவசமே வழி என்ற பொய்ப்பிரச்சாரத்தை எத்தனை காலம்தான் தொடரப்போகிறது அரசு..?கல்வி,மருத்துவம்,தொழில்,விவசாயம்,அடிப்படைக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படைக் கடமைகளில் கவனம் செலுத்தவேண்டிய அரசு இதுபோன்ற அவசியமற்ற, ஆடம்பர விழாக்களில் கவனம் செலுத்துவதையும் - இதற்காக மக்கள் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் விளம்பரங்களில் செலவிடுவதையும் லோக் சத்தா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. --- லோக் சத்தா கட்சி
இலவசங்களும், விளம்பரங்களும் ஏழ்மையை ஒழிக்காது - லோக் சத்தா
இன்று 1006 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர்,மந்திரிகள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட (திரு)விழாவில் அனைத்து மணமக்களுக்கும் 4கிராம் தங்க மாங்கல்யம், வெள்ளி மெட்டியுடன், வேட்டி,சேலை, பாத்திரங்கள், பாய், தலையணை உட்பட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அரசாங்கம் கல்யாணம் நடத்தி வைக்க வேண்டிய அவசியமென்ன...? சரி.. இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்தத் திருமணம் அந்தத் துறை சார்ந்த ஒரு சாதாரண நிகழ்வு என்றில்லாமல், முதலமைச்சர், மந்திரிகள் கலந்துகொண்ட பெருவிழாவாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன..? இலவசங்களை அள்ளித்தரும் அரசு இது என்று பிரகடனப்படுத்துவதற்குத்தானே..? இந்த அரசு ஏழைகளின் பங்காளி என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்வதற்குத்தானே...? புதுக்கோட்டை இடைத்தேர்தல் திருவிழா முடித்துவிட்டு இப்போதுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் சென்னை திரும்பினார்கள். அதற்குள், அடுத்த திருவிழா. இதுவல்லாமல், திருமணம் நடந்த திருவேற்காடு பகுதியைச் சுற்றியிருக்கும் அரசு அதிகாரிகள் அனைவரும், பல வாரங்கள் தங்களுடைய "அடிப்படை வேலைகளை" விட்டுவிட்டு இதற்காக பம்பரமாக சுழன்று வேலை செய்திருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த 1006 ஜோடிகளும் உண்மையாகவே அரசு உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களா என்பது சந்தேகமே. முதலமைச்சர், மந்திரிகள் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிபோல் நடத்தப்படும் இதில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள்தான் அதிகம் பயனடைந்திருப்பார்கள் என்று கணிக்க இடமிருக்கிறது. மேலும், அரசு பணத்தில், கட்சி வளர்க்கும் நிகழ்வாகத்தான் இதனைக் கருத வேண்டியிருக்கிறது.
இந்தத் திருமணத் திருவிழாவிற்கு அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கஜான காலியாக உள்ளது என்று தனது ஆட்சியைத் தொடங்கிய இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டுதான் ஆகிறது. அதற்குள், கஜானா நிறைந்து வழியத் தொடங்கிவிட்டதா..? எதற்கிந்த வீண் விளம்பரம்..? யாருக்குப் பயன் தரப்போகிறது..? 1006 ஜோடிகளுக்கு கிடைக்கும் உதவியைவிட (இலவசப் பொருட்கள்) ஏற்பாடுகளுக்கும், விளம்பரங்களும் பலமடங்கு செலவு செய்யப்பட்டிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
வேலைவாய்ப்பைப் பெருக்கி, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியளித்து மக்களை தற்சார்புடன் வாழவைக்க வேண்டிய அரசு எத்தனை காலம்தான் இலவசம்..இலவசம்..இலவசம் என்ற போதையின் பாதையில் மக்களை வழிநடத்தப்போகிறது..? ஏழ்மையை ஒழிக்க இலவசமே வழி என்ற பொய்ப்பிரச்சாரத்தை எத்தனை காலம்தான் தொடரப்போகிறது அரசு..?
கல்வி,மருத்துவம்,தொழில்,விவசாயம்,அடிப்படைக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படைக் கடமைகளில் கவனம் செலுத்தவேண்டிய அரசு இதுபோன்ற அவசியமற்ற, ஆடம்பர விழாக்களில் கவனம் செலுத்துவதையும் - இதற்காக மக்கள் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் விளம்பரங்களில் செலவிடுவதையும் லோக் சத்தா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
லோக் சத்தா கட்சி
இன்று 1006 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர்,மந்திரிகள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட (திரு)விழாவில் அனைத்து மணமக்களுக்கும் 4கிராம் தங்க மாங்கல்யம், வெள்ளி மெட்டியுடன், வேட்டி,சேலை, பாத்திரங்கள், பாய், தலையணை உட்பட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அரசாங்கம் கல்யாணம் நடத்தி வைக்க வேண்டிய அவசியமென்ன...? சரி.. இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்தத் திருமணம் அந்தத் துறை சார்ந்த ஒரு சாதாரண நிகழ்வு என்றில்லாமல், முதலமைச்சர், மந்திரிகள் கலந்துகொண்ட பெருவிழாவாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன..? இலவசங்களை அள்ளித்தரும் அரசு இது என்று பிரகடனப்படுத்துவதற்குத்தானே..?
இந்த அரசு ஏழைகளின் பங்காளி என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்வதற்குத்தானே...? புதுக்கோட்டை இடைத்தேர்தல் திருவிழா முடித்துவிட்டு இப்போதுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் சென்னை திரும்பினார்கள். அதற்குள், அடுத்த திருவிழா. இதுவல்லாமல், திருமணம் நடந்த திருவேற்காடு பகுதியைச் சுற்றியிருக்கும் அரசு அதிகாரிகள் அனைவரும், பல வாரங்கள் தங்களுடைய "அடிப்படை வேலைகளை" விட்டுவிட்டு இதற்காக பம்பரமாக சுழன்று வேலை செய்திருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த 1006 ஜோடிகளும் உண்மையாகவே அரசு உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களா என்பது சந்தேகமே. முதலமைச்சர், மந்திரிகள் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிபோல் நடத்தப்படும் இதில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள்தான் அதிகம் பயனடைந்திருப்பார்கள் என்று கணிக்க இடமிருக்கிறது. மேலும், அரசு பணத்தில், கட்சி வளர்க்கும் நிகழ்வாகத்தான் இதனைக் கருத வேண்டியிருக்கிறது.
இந்தத் திருமணத் திருவிழாவிற்கு அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கஜான காலியாக உள்ளது என்று தனது ஆட்சியைத் தொடங்கிய இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டுதான் ஆகிறது. அதற்குள், கஜானா நிறைந்து வழியத் தொடங்கிவிட்டதா..? எதற்கிந்த வீண் விளம்பரம்..? யாருக்குப் பயன் தரப்போகிறது..? 1006 ஜோடிகளுக்கு கிடைக்கும் உதவியைவிட (இலவசப் பொருட்கள்) ஏற்பாடுகளுக்கும், விளம்பரங்களும் பலமடங்கு செலவு செய்யப்பட்டிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
வேலைவாய்ப்பைப் பெருக்கி, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியளித்து மக்களை தற்சார்புடன் வாழவைக்க வேண்டிய அரசு எத்தனை காலம்தான் இலவசம்..இலவசம்..இலவசம் என்ற போதையின் பாதையில் மக்களை வழிநடத்தப்போகிறது..? ஏழ்மையை ஒழிக்க இலவசமே வழி என்ற பொய்ப்பிரச்சாரத்தை எத்தனை காலம்தான் தொடரப்போகிறது அரசு..?
கல்வி,மருத்துவம்,தொழில்,விவசாயம்,அடிப்படைக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படைக் கடமைகளில் கவனம் செலுத்தவேண்டிய அரசு இதுபோன்ற அவசியமற்ற, ஆடம்பர விழாக்களில் கவனம் செலுத்துவதையும் - இதற்காக மக்கள் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் விளம்பரங்களில் செலவிடுவதையும் லோக் சத்தா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
லோக் சத்தா கட்சி |
||||||||
by Swathi on 19 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|