|
|||||
லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்கள் !! |
|||||
லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி, பிற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ள நிலையில், அந்த மசோதா சட்டமானால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்...
1. ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் ஊழல் செய்தால், அவர்கள் மீது விசாரணை நடத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றியும் லோக்பால் முடிவு செய்யும்.
2. ஊழலை அம்லபடுத்துபவர்களுக்கு போதிய பாதிகாப்பு வழங்கவும் லோக்பால் மசோதா வழி செய்கிறது.
3. ஒருவர் ஊழல் செய்ததன் மூலம் அரசுக்கு ஏதும் இழப்பு ஏற்பட்டால், அவருக்கு தண்டனை விதிக்கும் போது அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்டவரிடமிருந்தே வசூல் செய்ய லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் இருக்கும்.
4. அரசு பணி தொடர்பாக மக்களின் கோரிக்கை குறிப்பிட்ட நேரத்தில் செய்து கொடுக்கப்படாவிட்டால், அதற்கு காரணமான அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் லோக்பாலில் இடமுண்டு.
5. அனைத்து மட்டத்தில் நடக்கும் ஊழல்களையும் விசாரிக்க, நடவடிக்கை எடுக்க லோக்பாலுக்கு அதிகாரம் இருக்கும். |
|||||
by Swathi on 17 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|