|
|||||
அதிகம் படித்தால் மன இறுக்கம் வரும் ! ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல் ! |
|||||
அதிகமாக படித்தவர்கள் மனதளவிலும், உடலளவிலும் அதிகம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வை பெல்ஜியத்தைச் சேர்ந்த கென்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், அதிக கல்வித் தகுதி உடைய, 21 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 17ஆயிரம் பணியாளர்களிடம் நடத்தி ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.
ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது, போட்டி நிறைந்த உலகில், தங்களை முன்நிறுத்திக் கொள்ள, பலரும் அதிகமாகப் படிக்கத் துவங்கி உள்ளனர். அதிகம் படிப்பதால் அதிக அறிவைப் பெறமுடியும் எனினும் அதுவே அவர்களின் மனஇறுக்கத்திற்குக் காரணமாகிவிடுகிறது. உலகின் பல நாடுகளிலும் இன்றைய இளைஞர்கள் அதிகம் படித்தவர்களாய் இருக்கிறார்கள். எனினும்,அவர்களின் திறமைக்கேற்ற நல்ல வேலை கிடைப்பது இல்லை. தங்கள் பணியில் முழு திறமையையும் வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதால், ஒரு விதமன மன இறுக்கத்திற்கு அவர்கள் ஆளாகின்றனர்.வாழ்க்கையில் தாங்கள் ஏற்ற அனைத்தையும் வெளிப்படுத்த முடியவில்லையே என்ற உணர்வு அவர்களை உறுத்துகிறது. இதனால், மன இறுக்கத்தின் காரணமாக அவர்களின் உடல் நிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என அவர்கள் தெரவித்துள்ளனர். இந்த ஆய்வில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. |
|||||
by Swathi on 22 Aug 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|