இரண்டு நாட்களாக நடந்த காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றிற்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பாட்லிங் மையங்களுக்கும் இடையேயான தொலைவைக் குறைக்கக் கூடாது, தெளிவான வழித்தட வரைபடங்களை வழங்க வேண்டும், பழைய வாடகையை உடனடியாக அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த புதன்கிழமை முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.பேச்சு வார்த்தைக்கு வருமாறு எண்ணை நிறுவனங்கள் விடுத்த அழைப்பை ஏற்று காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.இக்கூட்டத்தில் எண்ணை நிறுவனங்கள் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை அடுத்து லாரி உரிமையாளர்கள் போராட்டத்ததை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.இதனால் நேற்று இரவு முதல் வழக்கம் போல் காஸ் டேங்கர் லாரிகள் இயங்கின.
|