மத்திய பிரதேச மாநில அரசு நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் பகவத் கீதையை ஒரு பாடமாக அறிமுகப்படு்த்தியுள்ளது. இதற்கு அம்மாநிலத்தின் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திபிரதேச மாநிலத்தில், நடப்பு கல்வி ஆண்டில், பகவத் கீதையை ஒரு பாடமாக அம்மாநில கல்வித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி,உருது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பு ஆங்கிலம் மற்றும் இந்தி படிக்கும் பள்ளிகளில் 3ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும் சிறப்பு இந்தி கற்று கொடுக்கும் பள்ளிகளில் 10-12-ம்வகுப்பு படிக்கும் மாணவர்களும் , சிறப்பு ஆங்கிலம் கற்று கொடுக்கும் பள்ளிகளில் 11-12 ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் ஒரு பாடமாக பகவத்கீதை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள, அம்மாநில காங்கிரஸ் கட்சி, தேர்தலை கவனத்தில் கொண்டு, மக்களை திசை திருப்பும் நோக்கில், மாநில அரசு செயல்படுவதாக, குற்றம் சாட்டியுள்ளனர்.
|