LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

மதயானைக் கூட்டம் - திரை விமர்சனம் !!

 

நடிகர் : கதிர்
நடிகை : ஓவியா
இயக்கம் : விக்ரம் சுகுமாரன்
இசை : என்.ஆர்.ரகுநாதன்

நடிகர் : கதிர்

 

நடிகை : ஓவியா

 

இயக்கம் : விக்ரம் சுகுமாரன்

 

இசை : என்.ஆர்.ரகுநாதன்

 

 

ஊருக்குள் பெரிய தலைக்கட்டாக இருப்பவர் ஜெயக்கொடித்தேவர். அவர் முதல் மனைவி செவனம்மா இருக்க இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துகிறார்.  அவர் திடீரென இறந்துவிட, இரண்டாவது மனைவியையும் மகன் பார்த்தியையும், மகளையும் அவரது கடைசிக் காரியங்களில் அனுமதிக்க மறுக்கிறார்கள் மூத்த மனைவி செவனம்மாவின் அண்ணன் வீரத்தேவரும் அவரது வாரிசுகளும்.

 

ஆனால் தன் தம்பி பார்த்தி மீது பாசமாக இருக்கும் ஜெயக்கொடித்தேவரின் மூத்ததாரத்தின் மகன் பூலோகம் அவனை அழைத்து வந்து சாப்பாடு போடுகிறான். அங்கே மாமன் மச்சான்களுக்குள் ஏற்படும் தகராறில் வீரத்தேவர் மகன் எதிர்பாராத விதமாக கொலையாகிறான். இந்த சூழ்நிலையில் பார்த்தி தப்பித்து ஓட அவனை தேடிப்பிடித்து கொல்ல கிளம்புகிறார்கள் வீரத்தேவர் குருப்ஸ். இறுதியில் பார்த்தி கொலை செய்யப்பட்டாரா, வீரத்தேவர் என்ன ஆனார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

 

இறந்த வீட்டில் பாடும் கலைஞர்களின் வாயிலாக ஒவ்வொரு கேரக்டரும் அறிமுகம் செய்யப்படும் முதல் காட்சியே வித்யாசம் காட்டியிருக்கிறார் இயக்குனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரிடம் காணப்படும் இறுதி காரிய செய்முறையை விளக்கமாக படம் எடுத்ததற்கு இயக்குனருக்கு ஒரு சபாஸ் சொல்லவேண்டும்.

 

படத்தில் பார்த்தியாக வரும் கதிர் கொடுத்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறார். காதலைவிட ஆக்‌ஷனில் துடிப்பு தெரிகிறது. இறுதியில் விஜியின் கையை தட்டிவிடும் காட்சியில் பரிதாபத்தை அள்ளுகிறார்.

 

நர்ஸிங் மாணவியாக வரும் ஓவியாவுக்கு வெறும் காதலிக்கும் கேரக்டர் என்றலும். கேரளா சேச்சியாகவே வந்து அசத்தியிருக்கிறார்.

 

அகண்ட கண்கள், அழுத்தமான நடிப்பின் மூலம் இப்படத்தின் மையப்புள்ளியாக வலம் வந்திருக்கும் விஜியின் அலட்டல் இல்லா பெர்பாமன்ஸ் சிறப்பு. அவரது அண்ணனாக வேல ராமமூர்த்திதான் நடிப்பில் அனைவரையும் விஞ்சி நிற்கிறார். முகத்தின் ஒவ்வொரு அணுவிலும் பழிவாங்கலுக்கான உணர்ச்சி ததும்பி நிற்கிறது.

 

பார்த்தியின் அண்ணனாக வருபவரின் சலம்பல்கள் ரசிக்க வைத்தாலும் அதுவே பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போடுபோது திகில் ஏற்படுகிறது.  

 

இருள் கவ்வும் லொக்கேஷன்களில் ஒளிப்பதிவாளர் ராகுல் தருமனின் செய்முறை அபாரம். போதுமான படபடப்பை நம்முள் ஏற்றி இருக்கிறது ரகு நந்தனின் பின்னணி இசை. ‘எங்க போற’ சோகப்பாடலில் தஞ்சை செல்வியின் கிராமீய குரலும், ஏகாதசியின் வார்த்தை வரிகளும் மனதை நெகிழ்த்துகின்றன.

 

 நடந்த உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாமால், கொலை தான் எல்லாவற்றிற்கும் தீர்வு என நினைக்கும் முட்டாள் முரடர்களை பற்றிய படம்தான் இந்த மதயானைக் கூட்டம். 

by Swathi   on 27 Dec 2013  0 Comments
Tags: மதயானைக் கூட்டம்   மதயானைக் கூட்டம் விமர்சனம்   மதயானைக் கூட்டம் சினிமா   மதயானைக் கூட்டம் திரை விமர்சனம்   மதயானைக் கூட்டம் படம்   மதயானைக் கூட்டம் கதை   Madha Yaanai Koottam  
 தொடர்புடையவை-Related Articles
மதயானைக் கூட்டம் - திரை விமர்சனம் !! மதயானைக் கூட்டம் - திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.