LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பத்துப்பாட்டு

மதுரைக்காஞ்சி

 

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது. 
நூல்
இயற்கை வளம்
ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய 
மலை நாறிய வியன் ஞாலத்து 
வல மாதிரத்தான் வளி கொட்ப 5
விய னாண்மீ னெறி யொழுகப் 
பகற் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத் 10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த  
செயற்கைச் செழிப்பு நிலை
நோ யிகந்து நோக்கு விளங்க
மே தக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு 15
கண்டு தண்டாக் கட்கின் பத்து
உண்டு தண்டா மிகுவளத் தான்
உயர் பூரிம விழுத் தெருவிற்
பொய் யறியா வாய்மொழி யாற்
புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு 20
நல் லூழி அடிப் படரப்
பல் வெள்ளம் மீக் கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக  
அகத்தியரின் வழிவந்த சான்றோன்
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் இணை 25
யொலியிமிழ் துணங்கைச் சீர்ப் 
பிணை யூபம் எழுந் தாட
அஞ்சு வந்த போர்க்களத் தான்
ஆண் டலை அணங் கடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி 30
சினத் தீயிற் பெயர்பு பொங்கத்
தெற லருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப் பாக
ஆ டுற்ற ஊன் சோறு 35
நெறி யறிந்த கடிவா லுவன்
அடி யொதுங்கிப் பிற் பெயராப்
படை யோர்க்கு முரு கயர
அமர் கடக்கும் வியன் றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின 40
தொல்முது கடவுட் பின்னர் மேய 
வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந  
வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல் 
நால் வகைப் படைகளின் வலிமை
விழுச் சூழிய விளங்கோ டைய
கடுஞ் சினத்த கமழ்கடா அத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய 45
வரை மருளும் உயர் தோன்றல 
வினை நவின்ற பேர் யானை
சினஞ் சிறந்து களனு ழக்கவும்
மா வெடுத்த மலிகுரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும 50
வாம் பரிய கடுந்திண் டேர்
காற் றென்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்  
நெடியோனின் போர்த் திறமை
இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் 55
பொரு தவரைச் செரு வென்றும் 
இலங் கருவிய வரை நீந்திச் 
சுரம் போழ்ந்த இக லாற்றல்
உயர்ந் தோங்கிய விழுச் சிறப்பின்
நிலந் தந்த பே ருதவிப் 60
பொலந்தார் மார்பி னெடியோன் உம்பல்  
மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை
மரந் தின்னூஉ வரை யுதிர்க்கும்
நரை யுருமின் ஏற னையை
அருங் குழுமிளைக் குண்டுக் கிடங்கின்
உயர்ந் தோங்கிய நிரைப் புதவின் 65
நெடு மதில் நிரை ஞாயில்
அம் புமிழ் அயி லருப்பந்
தண் டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென் குமரி வட பெருங்கல் 70
குண குட கடலா வெல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்ற மொடு வெறுத் தொழுகிய
கொற்ற வர்தங் கோனா குவை  
கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி
வானி யைந்த இரு முந்நீர்ப் 75
பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை யெடுத்து
இன் னிசைய முரச முழங்கப 80
பொன் மலிந்த விழுப் பண்டம்
நா டார நன் கிழிதரும்
ஆடி யற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங் கிருக்கைத் 85
தெண் கடற் குண் டகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!  
குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பு மிசை யேற்றத 90
தோடு வழங்கும் அக லாம்பியிற்
கய னகைய வய னிறைக்கு
மென் றொடை வன் கிழாஅர்
அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி 
இரும்புள் ஒப்பும் இசையே என்றும் 95
மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானற் 
பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப  
பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல்
ஒருசார், விழவுநின்ற விய லாங்கண்
முழவுத் தோள் முரட் பொருநர்க்கு
உரு கெழு பெருஞ் சிறப்பின் 100
இரு பெயர்ப் பேரா யமொடு
இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும்
பொலந் தாமரைப் பூச் சூட்டியும்
நலஞ் சான்ற கலஞ் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே! 105
முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு
கல் காயுங் கடுவேனி லொடு
இரு வானம் பெயலொ ளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை அரிநர் கம்பலை 110
புள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவுக் கலித்த 
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் 115
நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு
ஒலி யோவாக் கலி யாணர் 
முது வெள்ளிலை  
முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப, தலையாலங்கானத்தில் பகைவர்களை வென்றமை
மீக் கூறும்
வியன் மேவல் விழுச் செல்வத்து 120
இரு வகையான் இசை சான்ற
சிறு குடிப் பெருந் தொழுவர் 
குடி கெழீஇய நானிலவ ரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பக்
கா லென்னக் கடிது ராஅய் 125
நாடு கெட எரி பரப்பி
ஆலங் கானத் தஞ்சுவர விறுத்து
அரசு பட அமரு ழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறலுயர் புகழ் வேந்த 130
கொற்கைக்குத் தலைவன்
நட்டவர் குடி யுயர்க் குவை
செற்றவர் அரசு பெயர்க் குவை
பேரு லகத்து மேஎந் தோன்றிச்
சீரு டைய விழுச் சிறப்பின் 
விளைந்து முதிர்ந்த விழு முத்தின் 135
இலங்கு வளை இருஞ் சேரிக்
கட் கொண்டிக் குடிப் பாக்கத்து
நற் கொற்கை யோர்நசைப் பொருந  
செழியன் பரதவரை வென்றமை
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று
அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற் 140
கோழூ உன்குறைக் கொழு வல்சிப்
புலவு விற் பொலி கூவை
ஒன்று மொழி ஒலி யிருப்பில்
தென் பரதவர் போ ரேறே  
பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு 145
உரிய வெல்லாம் ஓம்பாது வீசி
நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து 
பனிவார் சிமையக் கானம் போகி
அகநாடு புக்கவர் விருப்பம் வெளவி
யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து 150
மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்  
பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை
உறு செறுநர் புலம் புக்கவர்
கடி காவி னிலை தொலைச்சி 
இழி பறியாப் பெருந்தண் பணை 
குரூஉக் கொடிய எரி மேய 155
நா டெனும் பேர் காடாக
ஆ சேந்த வழி மாசேப்ப
ஊரி ருந்த வழி பாழாக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப 160
அவை யிருந்த பெரும் பொதியிற்
கவை யடிக் கடு நோக்கத்துப்
பேய் மகளிர் பெயர் பாட
அணங்கு வழங்கு மகலாங் கண்
நிலத் தாற்றுங் குழூஉப் புதவின் 165
அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்
கொழும் பதிய குடி தேம்பச்
செழுங் கேளிர் நிழல் சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரலக 170
கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயல் 
பன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள 
வாழா மையின் வழிதவக் கெட்டுப் 175
பாழா யினநின் பகைவர் தேஎம்  
பகைவரை அடக்கி, அவரை அறநெறியில் நிறுத்துதல்
எழாஅத் தோள் இமிழ்மு ழக்கின்
மாஅத் தாள் உயர் மருப்பிற்
கடுஞ் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் றானையொட 180
முரு குறழப் பகைத்தலைச் சென்று
அகல் விசும்பின் ஆர்ப் பிமிழப்
பெய லுறழக் கணை சிதறிப்
பல புரவி நீ றுகைப்ப 
வளை நரல வயி ரார்ப்பப் 185
பீ டழியக் கடந் தட்டவர்
நா டழியக் எயில் வெளவிச்
சுற்ற மொடு தூ வறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி 190
அரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது 
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின் 
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம் 
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் 195
தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம்  
செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தத் தொடங்குதல்
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே 
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் 200
பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய 
வாணன் வைத்த விழுநிதி பெறினும் 
பழிநமக் கெழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே 205
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் அவலம்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை  
உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்
தவாப் பெருக்கத் தறா யாணர 210
அழித் தானாக் கொழுந் திற்றி
இழித் தானாப் பல சொன்றி
உண் டானாக் கூர் நறவில்
தின் றானா இன வைக
னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப் 215
பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்ப களிறுபல தரீஇக்
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ 220
மறங் கலங்கத் தலைச் சென்று 
வாளுழந் ததன் தாள் வாழ்த்தி
நா ளீண்டிய நல் லகவர்க்குத்
தே ரோடு மா சிதறிச்
சூ டுற்ற சுடர்ப் பூவின் 225
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மாகக்
கள்ளின் இரும்பைக் கலஞ்செல வுண்டு 
பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார 230
பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்
படுகண் முரசங் காலை யியம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த 
பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்
கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர்த் 235
திரையிடு மணலினும் பலரே உரைசெல 
மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே  
மருத நில வளப்பம் 
வலைஞர் இயல்பு
அதனால், குணகடல் கொண்டு குடகடல்முற்றி
இரவு மெல்லையும் விளிவிட னறியாது
அவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் 240
கவலையங் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது 
குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி 245
நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
களிறு மாய்க்குங் கதிர்க் கழனி
ஒளி றிலஞ்சி அடை நிவந்த 
முட் டாள சுடர்த் தாமரை
கட் கமழு நறு நெய்தல் 250
வள் ளிதழ் அவிழ் நீலம்
மெல் லிலை யரி யாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்
கம்புட் சேவல் இன்றுயில் இரிய 
வள்ளை நீக்கி வயமீன் முகந்து 255
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பி னெந்திரங் கட்பி னோதை  
மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள்
அள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்ப 260
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி 
வன்கை வினைஞர் அரிபறை யின்குரல்
தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கவிகொள் சும்மை யொலிகொ ளாயந்
ததைந்த கோதை தாரொடு பொலியப் 265
புணர்ந்துட னாடும் இசையே யனைத்தும்
அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார்ச 270
முல்லை நிலக் காட்சிகள்
சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகின் இருங்குரல் புலர
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
எழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி 275
மடக்கட் பிணையொடு மறுகுவன உகளச் 
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்
பாஅ யன்ன பாறை யணிந்து
நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து 280
சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணிமரு ணெய்தல் உறழக் காமர் 
துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர 
வல்லொன் தைஇய வெறிக்களங் கடுப்ப 
முல்லை சான்ற புறவணிந் தொருசார் 285
குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம்
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய 
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி
இஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித் 290
தினைவிளை சாரற் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
ஆமா கடியுங் கானவர் பூசல்
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழல் அட்ட பூசல் 295
கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்
நறும்பூக் கொய்யும் பூசல் இருங்கேழ்
ஏறடு வயப்புலிப் பூசலொ டனைத்தும் 
இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக்
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து. 300
அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்  
பாலை நில இயல்பு
அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்
இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த இயவர் இயந்தொட் டன்ன
கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து 305
அருவி யான்ற அணியில் மாமலை
வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்
கமழ்சூழ் கோடை விடரக முகந்து
காலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மை
இலைவேய் குரம்பை உழையதட் பள்ள 310
உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப் 
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்  
நெய்தல் நில இயல்பு
முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம் 315
அரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை 
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல 320
விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார் 
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு 325
ஐம்பால் திணையுங் கவினி யமைவர  
மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும் 
பாண்டி நாட்டிற்கு நடுவண் அமைந்து விளங்குதல்
முழ வீமிழும் அக லாங்கண்
விழவு நின்ற வியன் மறுகில்
துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி
இன்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப 330
பாடல் சான்ற நன்னாட்டு நடுவண்  
பெரும்பாணர் வாழும் இருக்கை
கலை தாய உயர் சிமையத்து 
மயி லகவு மலி பொங்கர் 
மந்தி யாட மாவிசும் புகந்து
முழங்குகால் பொருத மரம்பயில் காவின் 335
இயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்
கான்பொழில் தழீஇய அடைகரை தோறுந்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையி னொழுகும் விரிநீர் நல்வரல்
அவிரறல் வையைத் துறைதுறை தோறும 340
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும்  
அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்
நிலனும் வளனுங் கண்டமை கல்லா 
விளங்குபெருந் திருவின் மான விறல்வேள்
அழும்பில் அன்ன நாடிழந் தனருங் 345
கொழும்பல் புதிய குடியிழந் தனரும்
தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று 350
மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு 355
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கி
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்  
பல் வகைக் கொடிகள்
பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப 360
மாகா லெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை 
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்துச் 365
சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீர்ஒலித் தன்ன நிலவுவேற் றானையொடு .
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப 370
புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல 
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கி னருவியி னுடங்கப்  
நால் வகைப் படைகளின் இயக்கம்
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் 375
வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக் 
கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து 380
கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்
கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்
அங்கண்மால் விசும்பு புதைய வளிபோழ்ந்து
ஒண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதரும் 385
செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுங்குங் கவின்பெறு தேருங்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத் தாதி போகிய 390
கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
வேழத் தன்ன வெருவரு செலவிற்
கள்ளார் களமர் இருஞ்செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்  
நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல்
தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர் 395
பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப் 
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர் 
பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்
தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் 400
நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர் 
இருதலை வந்த பகைமுனை கடுப்ப 
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து
ஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப் 
பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர் 405
மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர  
முது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல்
இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை 410
செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழு மாமையர் வையெயிற்று 
வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்
சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத் 415
தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை
மையுக் கன்ன மொய்யிருங் கூந்தல்
மயிலிய லோரும் மடமொழி யோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப் 420
புடையமை பொலிந்த வகையமை செப்பிற்
காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக  
திருவிழாக் காட்சிகள் 
ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக் 425
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே 
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங் காடி நனந்தலைக் கம்பல 430
செல்வர்கள் செல்லும் நிலை
வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன சிவந்துணங் குருவிற்
கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்
பொன்புனை வாளொடு பொலியக் கட்டித்
திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக் 435
கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி
மொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்
மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை
அணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்
காலியக் கன்ன கதழ்பரி கடைஇக 440
காலோர் காப்பக் காலெனக் கழியும்
வான வண்கை வளங்கெழு செல்வர்  
நிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர்
நாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல்
தாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை 445
அணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர் 
மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ
ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகந்
திண்காழ் ஏற்ற வியலிரு விலோதந்
தெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப 450
நிரைநிலை மாடத் தரமியந் தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய  
கோயில்களில் அந்தி விழா
நீரு நிலனுந் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய 
மழுவா ணெடியோன் றலைவ னாக 455
மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர் 
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு 
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமார்
அந்தி விழவிற் றூரியங் கறங்கத் 460
பௌத்தப் பள்ளி
திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர் 465
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்  
அந்தணர் பள்ளி
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி. 470
உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங் 
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்  
அமணப் பள்ளி
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் 475
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து 
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்க 480
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து 485
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி 
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங் 
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற  
அறம் கூறு அவையம்
அச்சமும் அவலமும் ஆர்வமு நீக்கிச்
செற்றமும் உவகையுஞ் செய்யாது காத்து 490
ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து  
காவிதி மாக்கள்
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து 
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல 495
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
 செம்மை சான்ற காவிதி மாக்களும்  
பண்டங்கள் விற்கும் வணிகர்
அறநெறி பிழையா தாற்றி னொழுகி 500
குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன 
பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற் 
பல்வேறு பண்டமொ டூண்மலிந்து கவினி 
மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு 505
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்  
நாற் பெருங் குழு
மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட் 
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் 510
பல்வேறு தொழிலாளர்களின் கூட்டம்
கோடுபோழ் கடைநருந் திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும் 
பூவும் புகையும் ஆயு மாக்களும் 515
எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி 
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பகல்
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச் 520
சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்  
பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம்
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்
தண்கட னாடன் ஒண்பூங் கோதை
பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ 525
விழைவுகொள் கம்பலை கடுப்பப்  
உணவு வகைகள்
பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி 530
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் 
இன்சோறு தருநர் பல்வயி னுகர 535
அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி
வாலிதை எடுத்த வளிதரு வங்கம் 
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லென் இமிழிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம 540
இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றே
அல்லங் காடி அழிதரு கம்பலை  
இரவுக் கால நிலை
ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து 545
சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு 
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல்
நாள்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு 
பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்
காதல் இன்றுணை புணர்மார் ஆயிதழ்த 550
தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப்
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர் 555
நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லா நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க  
பரத்தையரது வாழ்க்கை
நாணுக்கொள
ஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ்
தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்த 560
வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ
நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்திப் 565
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்து
நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்த 570
சேயரு நணியரு நலனயந்து வந்த 
இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி 
நுண்தா துண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
நெஞ்சே மாப்ப இன்றுயில் துறந்து 575
பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய 
மணம்புணர்ந் தோங்கிய அணங்குடை நல்லில்
ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்
ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி 580
நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர் 
யாம நல்யாழ் நாப்ப ணின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப் 585
பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென்றளிர்க்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி 
மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயரக்  
ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் 590
மாயோன் மேய ஓண நன்னாட்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை 
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில் 
மாறா துற்ற வடுப்படு நெற்றிச் 595
சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதரக்  
புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து 600
பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப் 
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு 
வளமனை மகளிர் குளநீர் அயரத்  
சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று தெய்வத்திற்கு மடை கொடுத்தல்
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக் 
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி 605
நுண்ணீ ராகுளி இரட்டப் பலவுடன்
ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடு
நன்மா மயிலின் மென்மெல இயலிக்
கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப 610
வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும்
ஒருசார் 
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
 அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
 கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
 சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ 
 மன்றுதொறு நின்ற குரவை 615
இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்
சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப் 620
இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை
பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
நொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர
நல்வரி இறாஅல் புரையு மெல்லடை
அயிருருப் புற்ற ஆடமை விசயங் 625
கவவொடு பிடித்த வகையமை மோதகந்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க 
விழவி னாடும் வயிரியர் மடியப்
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் 630
மூன்றாம் சாம நிகழ்ச்சிகள்
பானாட் கொண்ட கங்கு லிடையது
பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற் 
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப 
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத் 635
தொடலை வாளர் தொடுதோ லடியர் 
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர் 640
நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி 
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத் 
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த 645
நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக 
மழையமைந் துற்ற அரைநா ளமயமும்
அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலிற் 650
கடவுள் வழங்குங் கையாறு கங்குலும்
அச்ச மறியா தேம மாகிய மற்றை 
யாமம் பகலுறக் கழிப்பிப்  
விடியல்காலத்தில் மதுரை மாநகர்
போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாதுண் தும்பி போது முரன்றாங் 655
கோத லந்தணர் வேதம் பாடச்
சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி 
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்
பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப் 660
பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்
கள்ளோர் களிதொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப்
புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக்
கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய 665
ஒண்பொ னவிரிழை தெழிப்ப இயலித்
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
பழஞ்செருக் காளர் தழங்குகுரல் தோன்றச்
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல 670
வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப 
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னங் கரைய அணிமயில் அகவப் 675
பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக் 
கூட்டுறை வயமாப் புலியொடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின்
மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த 680
பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந்
தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப
மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப 685
இரவுத்தலைப் பெயரு மேம வைகறை  
மதுரையின் சிறப்பு
மைபடு பெருந்தோள் மழவ ரோட்டி 
இடைப்புலத் தொழிந்த ஏந்துகோட் டியானை 
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
வேல்கோ லாக ஆள்செல நூறிக் 690
காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும் 695
கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு 
புத்தே ளுலகம் கவினிக் காண்வர 
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்  
இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ 700
ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவிற் சுடர்பொழிந் 
தேறிய விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதி 
ரிளவெயிற் றோன்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து 705
மயிலோ ரன்ன சாயல் மாவின்
தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து
ஈர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
கடவுட் கயத்தமன்ற சுடரிதழ்த் தாமரைத் 710
தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்  
காலையில் எழுந்து, அரசர்க்கு உரிய கடன் கழித்தல்
திருந்துதுயில் எடுப்ப இனிதி னெழுந்து
திண்கா ழார நீவிக் கதிர்விடு 715
மொண்காழ் ஆரங் கவைஇய மார்பின்
வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப
எருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் 720
சோறமை வுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ 
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை 
முருகியன் றன்ன உருவினை யாகி  
வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து 725
ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர் 
வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த  
சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்
வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின் 
மாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் 730
நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த 
மாக்கண் முரசம் ஓவில கறங்க
எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்
பெருநல் யானை போர்க்களத் தொழிய 735
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் 
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து 740
வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த 
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற் 745
பெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும் 
யாவரும் வருக ஏனோருந் தம்மென  
மன்னனது பெருங் கொடை
வரையா வாயிற் செறாஅ திருந்து 
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென 750
இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்  
மன்னனை வாழ்த்துதல்
களந் தோறும் கள் ளரிப்ப 
மரந் தோறு மை வீழ்ப்ப
நிண வூன்சுட் டுருக் கமைய 755
நெய் கனிந்து வறை யார்ப்பக் 
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலிற் 
பரந்து தோன்றா விய னகராற்
பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய 760
தொல் லாணை நல் லாசிரியர் 
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன் போல 
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர் 
பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி 765
அரிய தந்து குடி யகற்றிப்
பெரிய கற் றிசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் 770
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த 775
மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன 
ரவரும் பிறகும் துவன்றிப்
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் 780
மகிழ்ந்தினி துறைமதி பெரும்
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே.  
தனிப் பாடல்கள்
பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல் 
திங்கள் நெடுங் குடையின் கீழானை, - அங்கு இரந்து 
நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தோர் 
தாம் வேண்டும் கூடல் தமிழ். 1
சொல் என்னும் பூம் போது தோற்றி, பொருள் என்னும் 
நல் இருந் தீம் தாது நாறுதலால், - மல்லிகையின் 
வண்டு ஆர் கமழ் தாமம் அன்றேமலையாத 
தண் தாரான் கூடல் தமிழ்? 2
மதுரைக்காஞ்சி முற்றிற்று.

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது. 
நூல்

இயற்கை வளம்

ஓங்கு திரை வியன் பரப்பின்ஒலி முந்நீர் வரம் பாகத்தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறிய வியன் ஞாலத்து வல மாதிரத்தான் வளி கொட்ப 5விய னாண்மீ னெறி யொழுகப் பகற் செய்யும் செஞ் ஞாயிறும்இரவுச் செய்யும் வெண் திங்களும்மை தீர்ந்து கிளர்ந்து விளங்கமழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத் 10தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளையநிலனு மரனும் பயன்எதிர்பு நந்த  

செயற்கைச் செழிப்பு நிலை

நோ யிகந்து நோக்கு விளங்கமே தக மிகப் பொலிந்தஓங்கு நிலை வயக் களிறு 15கண்டு தண்டாக் கட்கின் பத்துஉண்டு தண்டா மிகுவளத் தான்உயர் பூரிம விழுத் தெருவிற்பொய் யறியா வாய்மொழி யாற்புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு 20நல் லூழி அடிப் படரப்பல் வெள்ளம் மீக் கூறஉலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக  

அகத்தியரின் வழிவந்த சான்றோன்

பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் இணை 25யொலியிமிழ் துணங்கைச் சீர்ப் பிணை யூபம் எழுந் தாடஅஞ்சு வந்த போர்க்களத் தான்ஆண் டலை அணங் கடுப்பின்வய வேந்தர் ஒண் குருதி 30சினத் தீயிற் பெயர்பு பொங்கத்தெற லருங் கடுந் துப்பின்விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்தொடித் தோட்கை துடுப் பாகஆ டுற்ற ஊன் சோறு 35நெறி யறிந்த கடிவா லுவன்அடி யொதுங்கிப் பிற் பெயராப்படை யோர்க்கு முரு கயரஅமர் கடக்கும் வியன் றானைத்தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின 40தொல்முது கடவுட் பின்னர் மேய வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந  

வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல் நால் வகைப் படைகளின் வலிமை

விழுச் சூழிய விளங்கோ டையகடுஞ் சினத்த கமழ்கடா அத்துஅளறு பட்ட நறுஞ் சென்னிய 45வரை மருளும் உயர் தோன்றல வினை நவின்ற பேர் யானைசினஞ் சிறந்து களனு ழக்கவும்மா வெடுத்த மலிகுரூஉத் துகள்அகல் வானத்து வெயில் கரப்பவும 50வாம் பரிய கடுந்திண் டேர்காற் றென்னக் கடிது கொட்பவும்வாள் மிகு மற மைந்தர்தோள் முறையான் வீறு முற்றவும்  

நெடியோனின் போர்த் திறமை

இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் 55பொரு தவரைச் செரு வென்றும் இலங் கருவிய வரை நீந்திச் சுரம் போழ்ந்த இக லாற்றல்உயர்ந் தோங்கிய விழுச் சிறப்பின்நிலந் தந்த பே ருதவிப் 60பொலந்தார் மார்பி னெடியோன் உம்பல்  

மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை

மரந் தின்னூஉ வரை யுதிர்க்கும்நரை யுருமின் ஏற னையைஅருங் குழுமிளைக் குண்டுக் கிடங்கின்உயர்ந் தோங்கிய நிரைப் புதவின் 65நெடு மதில் நிரை ஞாயில்அம் புமிழ் அயி லருப்பந்தண் டாது தலைச் சென்றுகொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்தென் குமரி வட பெருங்கல் 70குண குட கடலா வெல்லைத்தொன்று மொழிந்து தொழில் கேட்பவெற்ற மொடு வெறுத் தொழுகியகொற்ற வர்தங் கோனா குவை  

கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி

வானி யைந்த இரு முந்நீர்ப் 75பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்கொடும் புணரி விலங்கு போழக்கடுங் காலொடு கரை சேரநெடுங் கொடிமிசை இதை யெடுத்துஇன் னிசைய முரச முழங்கப 80பொன் மலிந்த விழுப் பண்டம்நா டார நன் கிழிதரும்ஆடி யற் பெரு நாவாய்மழை முற்றிய மலை புரையத்துறை முற்றிய துளங் கிருக்கைத் 85தெண் கடற் குண் டகழிச்சீர் சான்ற உயர் நெல்லின்ஊர் கொண்ட உயர் கொற்றவ!  

குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர

நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்பாடு சிலம்பு மிசை யேற்றத 90தோடு வழங்கும் அக லாம்பியிற்கய னகைய வய னிறைக்குமென் றொடை வன் கிழாஅர்அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி இரும்புள் ஒப்பும் இசையே என்றும் 95மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானற் பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப  

பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல்

ஒருசார், விழவுநின்ற விய லாங்கண்முழவுத் தோள் முரட் பொருநர்க்குஉரு கெழு பெருஞ் சிறப்பின் 100இரு பெயர்ப் பேரா யமொடுஇலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும்பொலந் தாமரைப் பூச் சூட்டியும்நலஞ் சான்ற கலஞ் சிதறும்பல் குட்டுவர் வெல் கோவே! 105

முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு

கல் காயுங் கடுவேனி லொடுஇரு வானம் பெயலொ ளிப்பினும்வரும் வைகல் மீன் பிறழினும்வெள்ளமா றாது விளையுள் பெருகநெல்லி னோதை அரிநர் கம்பலை 110புள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும்சலம் புகன்று கறவுக் கலித்த புலவு நீர் வியன் பெளவத்துநிலவுக் கானல் முழவுத் தாழைக்குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் 115நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலைஇருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடுஒலி யோவாக் கலி யாணர் முது வெள்ளிலை  

முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப, தலையாலங்கானத்தில் பகைவர்களை வென்றமை

மீக் கூறும்வியன் மேவல் விழுச் செல்வத்து 120இரு வகையான் இசை சான்றசிறு குடிப் பெருந் தொழுவர் குடி கெழீஇய நானிலவ ரொடுதொன்று மொழிந்து தொழில் கேட்பக்கா லென்னக் கடிது ராஅய் 125நாடு கெட எரி பரப்பிஆலங் கானத் தஞ்சுவர விறுத்துஅரசு பட அமரு ழக்கிமுரசு கொண்டு களம் வேட்டஅடு திறலுயர் புகழ் வேந்த 130

கொற்கைக்குத் தலைவன்

நட்டவர் குடி யுயர்க் குவைசெற்றவர் அரசு பெயர்க் குவைபேரு லகத்து மேஎந் தோன்றிச்சீரு டைய விழுச் சிறப்பின் விளைந்து முதிர்ந்த விழு முத்தின் 135இலங்கு வளை இருஞ் சேரிக்கட் கொண்டிக் குடிப் பாக்கத்துநற் கொற்கை யோர்நசைப் பொருந  

செழியன் பரதவரை வென்றமை

செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்றுஅஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற் 140கோழூ உன்குறைக் கொழு வல்சிப்புலவு விற் பொலி கூவைஒன்று மொழி ஒலி யிருப்பில்தென் பரதவர் போ ரேறே  

பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி

அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு 145உரிய வெல்லாம் ஓம்பாது வீசிநனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து பனிவார் சிமையக் கானம் போகிஅகநாடு புக்கவர் விருப்பம் வெளவியாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து 150மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்  

பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை

உறு செறுநர் புலம் புக்கவர்கடி காவி னிலை தொலைச்சி இழி பறியாப் பெருந்தண் பணை குரூஉக் கொடிய எரி மேய 155நா டெனும் பேர் காடாகஆ சேந்த வழி மாசேப்பஊரி ருந்த வழி பாழாகஇலங்கு வளை மட மங்கையர்துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப 160அவை யிருந்த பெரும் பொதியிற்கவை யடிக் கடு நோக்கத்துப்பேய் மகளிர் பெயர் பாடஅணங்கு வழங்கு மகலாங் கண்நிலத் தாற்றுங் குழூஉப் புதவின் 165அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்கொழும் பதிய குடி தேம்பச்செழுங் கேளிர் நிழல் சேரநெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்குடுமிக் கூகை குராலொடு முரலக 170கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தரநல்லேர் நடந்த நசைசால் விளைவயல் பன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள வாழா மையின் வழிதவக் கெட்டுப் 175பாழா யினநின் பகைவர் தேஎம்  

பகைவரை அடக்கி, அவரை அறநெறியில் நிறுத்துதல்

எழாஅத் தோள் இமிழ்மு ழக்கின்மாஅத் தாள் உயர் மருப்பிற்கடுஞ் சினத்த களிறு பரப்பிவிரி கடல் வியன் றானையொட 180முரு குறழப் பகைத்தலைச் சென்றுஅகல் விசும்பின் ஆர்ப் பிமிழப்பெய லுறழக் கணை சிதறிப்பல புரவி நீ றுகைப்ப வளை நரல வயி ரார்ப்பப் 185பீ டழியக் கடந் தட்டவர்நா டழியக் எயில் வெளவிச்சுற்ற மொடு தூ வறுத்தலிற்செற்ற தெவ்வர் நின்வழி நடப்பவியன்கண் முதுபொழில் மண்டில முற்றி 190அரசியல் பிழையா தறநெறி காட்டிப்பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின் வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம் குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் 195தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம்  

செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தத் தொடங்குதல்

உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே முழங்குகட லேணி மலர்தலை யுலகமொடுஉயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் 200பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையேதென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழுக என்னாய் விழுநிதிஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே 205அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோகொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்கேட்டிசின் வாழி கெடுகநின் அவலம்கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை  

உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்

தவாப் பெருக்கத் தறா யாணர 210அழித் தானாக் கொழுந் திற்றிஇழித் தானாப் பல சொன்றிஉண் டானாக் கூர் நறவில்தின் றானா இன வைகனிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப் 215பயனற வறியா வளங்கெழு திருநகர்நரம்பின் முரலு நயம்வரு முரற்சிவிறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்பாணர் உவப்ப களிறுபல தரீஇக்கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ 220மறங் கலங்கத் தலைச் சென்று வாளுழந் ததன் தாள் வாழ்த்திநா ளீண்டிய நல் லகவர்க்குத்தே ரோடு மா சிதறிச்சூ டுற்ற சுடர்ப் பூவின் 225பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்விழுமிய பெரியோர் சுற்ற மாகக்கள்ளின் இரும்பைக் கலஞ்செல வுண்டு பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார 230பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்படுகண் முரசங் காலை யியம்பவெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர்த் 235திரையிடு மணலினும் பலரே உரைசெல மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே  

மருத நில வளப்பம் வலைஞர் இயல்பு

அதனால், குணகடல் கொண்டு குடகடல்முற்றிஇரவு மெல்லையும் விளிவிட னறியாதுஅவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் 240கவலையங் குழும்பின் அருவி ஒலிப்பக்கழைவளர் சாரற் களிற்றின நடுங்கவரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்துசிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி 245நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்களிறு மாய்க்குங் கதிர்க் கழனிஒளி றிலஞ்சி அடை நிவந்த முட் டாள சுடர்த் தாமரைகட் கமழு நறு நெய்தல் 250வள் ளிதழ் அவிழ் நீலம்மெல் லிலை யரி யாம்பலொடுவண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்கம்புட் சேவல் இன்றுயில் இரிய வள்ளை நீக்கி வயமீன் முகந்து 255கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்வேழப் பழனத்து நூழி லாட்டுக்கரும்பி னெந்திரங் கட்பி னோதை  

மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள்

அள்ளற் றங்கிய பகடுறு விழுமங்கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்ப 260ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்கை வினைஞர் அரிபறை யின்குரல்தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்கவிகொள் சும்மை யொலிகொ ளாயந்ததைந்த கோதை தாரொடு பொலியப் 265புணர்ந்துட னாடும் இசையே யனைத்தும்அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்குருகு நரல மனை மரத்தான்மீன் சீவும் பாண் சேரியொடுமருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார்ச 270

முல்லை நிலக் காட்சிகள்

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்கருங்கால் வரகின் இருங்குரல் புலரஆழ்ந்த குழும்பில் திருமணி கிளரஎழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி 275மடக்கட் பிணையொடு மறுகுவன உகளச் சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்பாஅ யன்ன பாறை யணிந்துநீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்வெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து 280சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்மணிமரு ணெய்தல் உறழக் காமர் துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர வல்லொன் தைஇய வெறிக்களங் கடுப்ப முல்லை சான்ற புறவணிந் தொருசார் 285

குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம்

நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவிஐவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடிஇஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித் 290தினைவிளை சாரற் கிளிகடி பூசல்மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்ஆமா கடியுங் கானவர் பூசல்சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்வீழ்முகக் கேழல் அட்ட பூசல் 295கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்நறும்பூக் கொய்யும் பூசல் இருங்கேழ்ஏறடு வயப்புலிப் பூசலொ டனைத்தும் இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக்கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து. 300அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்  

பாலை நில இயல்பு

அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்பநிழத்த யானை மேய்புலம் படரக்கலித்த இயவர் இயந்தொட் டன்னகண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து 305அருவி யான்ற அணியில் மாமலைவைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்கமழ்சூழ் கோடை விடரக முகந்துகாலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மைஇலைவேய் குரம்பை உழையதட் பள்ள 310உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்சிலையுடைக் கையர் கவலை காப்பநிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப் பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்  

நெய்தல் நில இயல்பு

முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம் 315அரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை பரதர் தந்த பல்வேறு கூலம்இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல 320விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்வைகல் தோறும் வழிவழிச் சிறப்பநெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு 325ஐம்பால் திணையுங் கவினி யமைவர  

மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும் பாண்டி நாட்டிற்கு நடுவண் அமைந்து விளங்குதல்

முழ வீமிழும் அக லாங்கண்விழவு நின்ற வியன் மறுகில்துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரிஇன்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப 330பாடல் சான்ற நன்னாட்டு நடுவண்  

பெரும்பாணர் வாழும் இருக்கை

கலை தாய உயர் சிமையத்து மயி லகவு மலி பொங்கர் மந்தி யாட மாவிசும் புகந்துமுழங்குகால் பொருத மரம்பயில் காவின் 335இயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்கான்பொழில் தழீஇய அடைகரை தோறுந்தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்கோதையி னொழுகும் விரிநீர் நல்வரல்அவிரறல் வையைத் துறைதுறை தோறும 340பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றிஅழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும்  

அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்

நிலனும் வளனுங் கண்டமை கல்லா விளங்குபெருந் திருவின் மான விறல்வேள்அழும்பில் அன்ன நாடிழந் தனருங் 345கொழும்பல் புதிய குடியிழந் தனரும்தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்தஅண்ணல் யானை அடுபோர் வேந்தர்இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப்பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று 350மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலைநெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்மழையாடு மலையி னிவந்த மாடமொடு 355வையை யன்ன வழக்குடை வாயில்வகைபெற எழுந்து வான மூழ்கிசில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்  

பல் வகைக் கொடிகள்

பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப 360மாகா லெடுத்த முந்நீர் போலமுழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மைஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்துச் 365சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடிவேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொளநாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடிநீர்ஒலித் தன்ன நிலவுவேற் றானையொடு .புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப 370புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடிகள்ளின் களிநவில் கொடியொடு நன்பல பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்பெருவரை மருங்கி னருவியி னுடங்கப்  

நால் வகைப் படைகளின் இயக்கம்

பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் 375வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக் கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன்கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇநெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போலஇருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து 380கோலோர்க் கொன்று மேலோர் வீசிமென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்அங்கண்மால் விசும்பு புதைய வளிபோழ்ந்துஒண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதரும் 385செங்கால் அன்னத்துச் சேவல் அன்னகுரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்துகாலெனக் கடுங்குங் கவின்பெறு தேருங்கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்அடிபடு மண்டிலத் தாதி போகிய 390கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்வேழத் தன்ன வெருவரு செலவிற்கள்ளார் களமர் இருஞ்செரு மயக்கமும்அரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்  

நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல்

தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர் 395பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப் பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர் பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் 400நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர் இருதலை வந்த பகைமுனை கடுப்ப இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்துஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப் பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர் 405மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர  

முது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல்

இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை 410செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்னசெய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்ஐஇய கலுழு மாமையர் வையெயிற்று வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத் 415தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலைமையுக் கன்ன மொய்யிருங் கூந்தல்மயிலிய லோரும் மடமொழி யோரும்கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்துகல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப் 420புடையமை பொலிந்த வகையமை செப்பிற்காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம்கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக  

திருவிழாக் காட்சிகள் ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்

மழைகொளக் குறையாது புனல்புக மிகாதுகரைபொரு திரங்கு முந்நீர் போலக் 425கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாதுகழுநீர் கொண்ட எழுநாள் அந்திஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்நாளங் காடி நனந்தலைக் கம்பல 430

செல்வர்கள் செல்லும் நிலை

வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்செக்கர் அன்ன சிவந்துணங் குருவிற்கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்பொன்புனை வாளொடு பொலியக் கட்டித்திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக் 435கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடிமொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதைஅணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்காலியக் கன்ன கதழ்பரி கடைஇக 440காலோர் காப்பக் காலெனக் கழியும்வான வண்கை வளங்கெழு செல்வர்  

நிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர்

நாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடுதெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல்தாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை 445அணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர் மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகந்திண்காழ் ஏற்ற வியலிரு விலோதந்தெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப 450நிரைநிலை மாடத் தரமியந் தோறும்மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய  

கோயில்களில் அந்தி விழா

நீரு நிலனுந் தீயும் வளியும்மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவா ணெடியோன் றலைவ னாக 455மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர் வாடாப் பூவின் இமையா நாட்டத்துநாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு மாற்றரு மரபி னுயர்பலி கொடுமார்அந்தி விழவிற் றூரியங் கறங்கத் 460

பௌத்தப் பள்ளி

திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களைஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்தாமு மவரும் ஓராங்கு விளங்கக்காமர் கவினிய பேரிளம் பெண்டிர் 465பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்  

அந்தணர் பள்ளி

சிறந்த வேதம் விளங்கப் பாடிவிழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்துநிலமமர் வையத் தொருதா மாகி. 470உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்பெரியோர் மேஎ யினிதி னுறையுங் குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்  

அமணப் பள்ளி

வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் 475பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்சென்ற காலமும் வரூஉ மமயமும்இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து வானமு நிலனுந் தாமுழு துணருஞ்சான்ற கொள்கைச் சாயா யாக்க 480ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து 485நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங் குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற  

அறம் கூறு அவையம்

அச்சமும் அவலமும் ஆர்வமு நீக்கிச்செற்றமும் உவகையுஞ் செய்யாது காத்து 490ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து  

காவிதி மாக்கள்

ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல 495நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கிஅன்பும் அறனும் ஒழியாது காத்துப்பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்களும்  

பண்டங்கள் விற்கும் வணிகர்

அறநெறி பிழையா தாற்றி னொழுகி 500குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற் பல்வேறு பண்டமொ டூண்மலிந்து கவினி மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு 505சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்  

நாற் பெருங் குழு

மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட் பழையன் மோகூர் அவையகம் விளங்கநான்மொழிக் கோசர் தோன்றி யன்னதாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் 510

பல்வேறு தொழிலாளர்களின் கூட்டம்

கோடுபோழ் கடைநருந் திருமணி குயினரும்சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும் பூவும் புகையும் ஆயு மாக்களும் 515எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பகல்குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச் 520சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇநால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்  

பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம்

கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்தண்கட னாடன் ஒண்பூங் கோதைபெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ 525விழைவுகொள் கம்பலை கடுப்பப்  

உணவு வகைகள்

பலவுடன்சேறு நாற்றமும் பலவின் சுளையும்வேறுபடக் கவினிய தேமாங் கனியும்பல்வே றுருவிற் காயும் பழனும்கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி 530மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் இன்சோறு தருநர் பல்வயி னுகர 535

அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி

வாலிதை எடுத்த வளிதரு வங்கம் பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்தொல்லென் இமிழிசை மானக் கல்லெனநனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம 540இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்துஉருகெழு பானாள் வருவன பெயர்தலிற்பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றேஅல்லங் காடி அழிதரு கம்பலை  

இரவுக் கால நிலை

ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து 545சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல்நாள்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்காதல் இன்றுணை புணர்மார் ஆயிதழ்த 550தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉநன்னெடுங் கூந்த னறுவிரை குடையநரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுகமென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப்பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர் 555நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்எல்லை எல்லா நோயொடு புகுந்துகல்லென் மாலை நீங்க  

பரத்தையரது வாழ்க்கை

நாணுக்கொளஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ்தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்த 560வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழநீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டுஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழமேதகு தகைய மிகுநல மெய்திப் 565பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்துநுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கிமாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்த 570சேயரு நணியரு நலனயந்து வந்த இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி நுண்தா துண்டு வறும்பூத் துறக்கும்மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்நெஞ்சே மாப்ப இன்றுயில் துறந்து 575பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக்கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய மணம்புணர்ந் தோங்கிய அணங்குடை நல்லில்ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி 580நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்வானவ மகளிர் மானக் கண்டோர்நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர் யாம நல்யாழ் நாப்ப ணின்றமுழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப் 585பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென்றளிர்க்கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவரநெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயரக்  

ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்

கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் 590மாயோன் மேய ஓண நன்னாட்கோணந் தின்ற வடுவாழ் முகத்தசாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை மறங்கொள் சேரி மாறுபொரு செருவில் மாறா துற்ற வடுப்படு நெற்றிச் 595சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்டநெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதரக்  

புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்

கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து 600பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப் புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு வளமனை மகளிர் குளநீர் அயரத்  

சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று தெய்வத்திற்கு மடை கொடுத்தல்

திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக் குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி 605நுண்ணீ ராகுளி இரட்டப் பலவுடன்ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடுநன்மா மயிலின் மென்மெல இயலிக்கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுதுபெருந்தோட் சாலினி மடுப்ப 610

வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும்

ஒருசார் அருங்கடி வேலன் முருகொடு வளைஇ அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ  மன்றுதொறு நின்ற குரவை 615

இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்

சேரிதொறும்உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇவேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்குமுந்தை யாமம் சென்ற பின்றைப் 620

இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை

பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்துநொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர்ஒள்ளிழை மகளிர் பள்ளி யயரநல்வரி இறாஅல் புரையு மெல்லடைஅயிருருப் புற்ற ஆடமை விசயங் 625கவவொடு பிடித்த வகையமை மோதகந்தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க விழவி னாடும் வயிரியர் மடியப்பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் 630

மூன்றாம் சாம நிகழ்ச்சிகள்

பானாட் கொண்ட கங்கு லிடையதுபேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற் கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்புகல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத் 635தொடலை வாளர் தொடுதோ லடியர் குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர் 640நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத் துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த 645நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சிஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக மழையமைந் துற்ற அரைநா ளமயமும்அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலிற் 650கடவுள் வழங்குங் கையாறு கங்குலும்அச்ச மறியா தேம மாகிய மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப்  

விடியல்காலத்தில் மதுரை மாநகர்

போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்தாதுண் தும்பி போது முரன்றாங் 655கோத லந்தணர் வேதம் பாடச்சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி யாழோர் மருதம் பண்ணக் காழோர்கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப் 660பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்கள்ளோர் களிதொடை நுவல இல்லோர்நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப்புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக்கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய 665ஒண்பொ னவிரிழை தெழிப்ப இயலித்திண்சுவர் நல்லிற் கதவங் கரையஉண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்பழஞ்செருக் காளர் தழங்குகுரல் தோன்றச்சூதர் வாழ்ந்த மாகதர் நுவல 670வேதா ளிகரொடு நாழிகை இசைப்பஇமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்பப்பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப யானையங் குருகின் சேவலொடு காமர்அன்னங் கரைய அணிமயில் அகவப் 675பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக் கூட்டுறை வயமாப் புலியொடு குழுமவான நீங்கிய நீனிற விசும்பின்மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்துமாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த 680பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடுபொன்சுடு நெருப்பி னிலமுக் கென்னஅம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந்தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்பமென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப 685இரவுத்தலைப் பெயரு மேம வைகறை  

மதுரையின் சிறப்பு

மைபடு பெருந்தோள் மழவ ரோட்டி இடைப்புலத் தொழிந்த ஏந்துகோட் டியானை பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவிவேல்கோ லாக ஆள்செல நூறிக் 690காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டிநாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சிநாடர வந்த விழுக்கல மனைத்தும் 695கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்குஅளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு புத்தே ளுலகம் கவினிக் காண்வர மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்  

இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை

சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ 700ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவிற் சுடர்பொழிந் தேறிய விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதி ரிளவெயிற் றோன்றி யன்னதமனியம் வளைஇய தாவில் விளங்கிழைநிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து 705மயிலோ ரன்ன சாயல் மாவின்தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்துஈர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்கடவுட் கயத்தமன்ற சுடரிதழ்த் தாமரைத் 710தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்துகோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்  

காலையில் எழுந்து, அரசர்க்கு உரிய கடன் கழித்தல்

திருந்துதுயில் எடுப்ப இனிதி னெழுந்துதிண்கா ழார நீவிக் கதிர்விடு 715மொண்காழ் ஆரங் கவைஇய மார்பின்வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்பஎருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற்பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் 720சோறமை வுற்ற நீருடைக் கலிங்கம்உடையணி பொலியக் குறைவின்று கவைஇ வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகியன் றன்ன உருவினை யாகி  

வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்

வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து 725ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர் வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த  

சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்

வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின் மாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின்கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் 730நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் ஓவில கறங்கஎரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்பெருநல் யானை போர்க்களத் தொழிய 735விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பைநீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து 740வானத் தன்ன வளநகர் பொற்பநோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற் 745பெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும் யாவரும் வருக ஏனோருந் தம்மென  

மன்னனது பெருங் கொடை

வரையா வாயிற் செறாஅ திருந்து பாணர் வருக பாட்டியர் வருகயாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென 750இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்  

மன்னனை வாழ்த்துதல்

களந் தோறும் கள் ளரிப்ப மரந் தோறு மை வீழ்ப்பநிண வூன்சுட் டுருக் கமைய 755நெய் கனிந்து வறை யார்ப்பக் குரூஉக் குய்ப்புகை மழை மங்குலிற் பரந்து தோன்றா விய னகராற்பல் சாலை முது குடுமியின்நல் வேள்வித் துறை போகிய 760தொல் லாணை நல் லாசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்நிலந்தரு திருவி னெடியோன் போல வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர் பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி 765அரிய தந்து குடி யகற்றிப்பெரிய கற் றிசை விளக்கிமுந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்பன்மீன் நடுவண் திங்கள் போலவும்பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் 770பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த 775மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன ரவரும் பிறகும் துவன்றிப்பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்தஇலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்தியமணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் 780மகிழ்ந்தினி துறைமதி பெரும்வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே.  

தனிப் பாடல்கள்

பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல் திங்கள் நெடுங் குடையின் கீழானை, - அங்கு இரந்து நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தோர் தாம் வேண்டும் கூடல் தமிழ். 1
சொல் என்னும் பூம் போது தோற்றி, பொருள் என்னும் நல் இருந் தீம் தாது நாறுதலால், - மல்லிகையின் வண்டு ஆர் கமழ் தாமம் அன்றேமலையாத தண் தாரான் கூடல் தமிழ்? 2

மதுரைக்காஞ்சி முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.