LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மதுரை- சென்னை துரந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை!

மதுரை- சென்னை துரந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 2 நாட்கள் துரந்தோ ரயில் மற்றும் வாரத்தில் ஒரு நாள் குளிர்சாதன ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு ரயில்களும் நாமக்கல் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதால் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாமக்கல்லில் இருந்து பணி, தொழில், மருத்துவம் மற்றும் கல்வி பயில்வதற்கு சென்னை, வேலூருக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள்  செல்கின்றனர். இவர்கள் பழநியில் இருந்து நாமக்கல் வழியாக சென்னை செல்லும் ரயிலை நம்பி வந்தனர். 

இந்த ரயில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலக்காடு வரை நீடிக்கப்பட்டதால், போதுமான இருக்கைகள் கிடைப்பதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். 

இந்த ரயிலில் நாமக்கல் ரயில் நிலையத்திற்கென குறைந்த அளவிலான இருக்கைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது மூன்று அடுக்கு (3 டயர்) குளிர்சாதன பெட்டியில் 8 இருக்கைகள், 2ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 4 இருக்கைகள் மற்றும் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 2 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

2014-15ம் நிதியாண்டில் நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு பழனி - சென்னை ரயிலில் 3779 பயணிகள் குளிர்சாதன வகுப்பில் பயணித்துள்ளார். 2015-16ம் நிதியாண்டில் 3734 பயணிகள் குளிர்சாதன வகுப்பில் பயணித்துள்ளார். 2016-17ம் நிதியாண்டில் 3571 பயணிகள் குளிர்சாதன வகுப்பில் பயணித்துள்ளார். 

எனவே மதுரை - சென்னை குளிர்சாதன துரந்தோ மற்றும் மதுரை - சென்னை குளிர்சாதன அதிவிரைவு ரயில்கள் நாமக்கல்லில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயிலை, நாமக்கல் வழியாக கரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கோழி வளர்ப்புக்கும், முட்டைக்கும் பெயர்பெற்ற நாமக்கல், இந்தியாவில் முட்டை உற்பத்தியில் 2ம் இடமும், தமிழகத்தில் முதலாம் இடத்திலும் உள்ளது. சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. மேலும் நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கூலிப்பட்டி முருகன் கோவில் போன்ற பிரபலமான கோயில்களும் உள்ளன.  கோடை வாசஸ்தலமான கொல்லிமலைக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளும் நாமக்கலுக்கு வந்துதான் செல்ல வேண்டும். 

மேலும் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப துரந்தோ மற்றும் குளிர்சாதன அதிவிரைவு ரயில்கள் நாமக்கலில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.