தமிழகத்தில் பூரண மது விலக்குக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவரும் மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்று தொடர்கிறது. சட்ட மாணவிக்கு ஆதரவதாக மற்றொரு சட்டக் கல்லூரி மாணவர் விஜிகுமார், லயோலா கல்லூரி மாணவர் ஜோ பிரிட்டோ, சாய் ஜோதி கல்லூரி மாணவர் மோகன், எஸ்.வி.என்., கல்லூரியைச் சேர்ந்த கருப்பசாமி, அண்ணாமலை பல்கலை முன்னாள் மாணவர் யுவராஜ், காந்தியவாதி சசிபெருமாள் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களைத் தவிர ஈழத் தமிழர் ஆதரவு கூட்டமைப்பைச் சேர்ந்த திவ்யா, மற்றும் வழிக்கறிஞர்கள், பொதுமக்கள் என நந்தினிக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. மது ஒழிப்புக்கு போராட்டங்கள் வலுத்து வருவதால், அரசு மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
|