மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது ‘மதுரையைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக உருவாக்குவது என்பது தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. எனவே மதுரையை இரண்டாம் தலைநகரமாக முதலமைச்சர்> துணை முதலமைச்சர் ஆகியோர் உருவாக்கினால் தென் மாவட்ட மக்களுக்கு வளர்ச்சி வாய்ப்பாக இருக்கும்’ என்று கூறினார்.
|