LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

மகளின் மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்

இரண்டாம் போர் உலகத்தில் மூண்டபோதோ
இரக்க மற்ற செர்மனியின் நாசியர்கள்
கரம் பிணைத்தே உருசியாவின் வீரர் தம்மை!
கடுஞ்சிறையில் கைதிகளாய் அடைத்து வைத்தே
உரமழிக்க வீரர்கட் குணவும் நீரும்
உறைய வைக்கும் குளிருக்கு போர்வை ஏதும்
தரமறுத்தே பட்டினியில் துடிதுடிக்கத்
தாங்கொண்ணாகொடுமை செய்து சாகடித்தார் !

நாள்தோறும் நூற்றுக்கும் மேலாய் வீரர்
நலிந்து சிறை உள்ளேயே மாண்டுபோக
நாள் கடந்தும் வயதான முதிய வீரன்
நலிவின்றி எலும்புதோலாய் ஆனபோதும்
தாள்பதித்து நடக்கின்ற வலிமையோடு
தாங்கி துயர் உயிரோடே இருக்கக்கண்டு
நீள்சிறையைப் பாதுகாக்கும் நாசியர்கள்
நீண்ட தொரு ஐயத்தில் குழம்பி நின்றார்!

சிறையடைத்த வீரரினைக் காண்பதற்கும்
சிறைக்குள்ளே யாரையுமே விட்டிடாமல்
வரையறுத்த கடுமையான கட்டுப்பாட்டில்
வாய்த்தரத்த உறவை மட்டும் துரும்பைக்கூட
சிறைக்குள்ளே எடுத்து செல்ல இயலாவாறு
சிறப்பாகச் சோதித்தே அனுமதித்தும்
குறையாத நலமுடனே முதியவீரன்
குந்திருக்கநாசியர்கள் வியந்து நின்றார் !


அற்புதந் தான் சிறைக்குள்ளே நிகழ்ந்த தென்ன
அடைத்து வைத்த முதிய வீரன் தம்மைக்காணப்
பொற்புதல்வி நாள் தோறும் வந்தபோது
பொறுப்புடனே தான் பெற்ற குழந்தைக்கூட்டும்
நற்பாலைத் தந்தை வாய் ஊட்டிவிட்டே
நலம் காத்து நாடுதனைக் காப்பதற்கே
உற்ற துணையாய் நின்ற தியாகத்தால் தான்
உயர்நாட்டைத் தாய் நாடாய்ப் போற்றுகின்றோம் !

(சிறைக்குள்ளே அடைக்கப்பட்டுள்ள தந்தைக்குப் பாலூட்டும் மகளின் தியாகத்தின் சாட்சியாக சோவியத் நாட்டு லெனின் கிராட் அருங்காட்சியகத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓவியமாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது)

(மார்ச்சு  8  இன்று உலக மகளிர் நாளில்   பெயர் தெரியா  அப்பெண்ணிற்காய்  இக்கவிதையைப்  படைக்கின்றேன் )

by Swathi   on 27 Mar 2015  1 Comments
Tags: Magal   Karumalai Thamilaalan   மகளின் மாண்பு   பாவலர் கருமலைத்தமிழாழன்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
30-Apr-2015 00:41:21 hyrunrahman said : Report Abuse
கற்பழிப்பு குரங்கிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான் என்பதை கற்பழிக்கிற ஒவ்வொரு ஆண் மிருகமும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.