LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

மகான் வாழும் இடமே கோவில்

பிரபஞ்சம் அனைத்துமாக இருப்பது ஒரே கடவுள் தான். இறைநிலையாகிய கடவுளை வணங்குவதைவிட சிந்திப்பதே மேல் என்றார் இராமாநுஜர். மனிதனுக்கு, அவன் வரும் முன்னரே, உணவாகவும், மருந்தாகவும் பயன்பட தாவரத்தைப் படைத்த இறைநிலையின் கருணையின்பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு தாயின் வயிற்றில் கரு உருவானவுடனேயே, அந்தத் தாயின் அசைவு அந்தக் கருவைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக அங்கே ஒரு தண்ணீர்க் குடம் அமைத்தது இறைநிலையின் கருணையேயாகும். உப்புத் தண்ணீரை உயரே ஆகாயத்தில் ஏற்றி, உப்பு நீங்கிய நன்நீரை மழையாகப் பெய்வித்து ஜீவன்களின் தாகத்தைத் தீர்க்கிற இறைநிலையின் கருணையை போற்ற வேண்டும். உடலில் ஒரு சிறு காயம் ஏற்பட்டுவிடும்போது, அந்தக் காயத்தின் வழியாக அத்தனை இரத்தமும் வெளியேறி விடாமல் இருக்க, அங்கே இரத்தத்தை உறைய வைக்கும் அந்த இறைநிலையின் அன்பையும், கருணையையும் உணர வேண்டும்..


இறைநிலை கருணை மிகுந்தது. அன்பே சிவம் என்பதும், அல்லாஹ் கருணை மிக்கவர் என்பதும் இதனையே வலியுறுத்துகின்றன. அன்பும் கருணையும் நமது செயலில் மேலோங்கும்போது இறை எவ்வழியோ அவ்வழியே நாமும் செயல்படுகிறோம். அதுவே இறைவழிபடுதல் அல்லது இறைவழிபாடு என்பதாகும். மனிதன் இறைவழிபடும்போது, இயற்கையோடு இசைந்து வாழ்வதால் அவன் வாழ்வாங்கு வாழ்கிறான்.


மனிதன் தன்னை உயர்த்தி இறைவழிபடுதலே மிகச்சிறந்த இறைவழிபாடாகும். அவ்வாறு உயர, அன்பும், கருணையுமே அவனுக்கு ஆதாரங்கள் அன்பினாலும், கருணையினாலும் உயர்ந்த மனிதனே வணங்கத்தக்கவன் ஆவான். அவன் வாழும் இடமே கோவிலாகும். கோவில் என்பது யாரோ யாருக்காகவோ கட்டுகிற கட்டிடமல்ல, சிந்தனைச் செறிவோடு, அகத்தின் அமைதியில், மனத்தூய்மை பெற்ற மகான் வாழும் இடமே கோவில்.

by Swathi   on 20 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.