|
||||||||
மகர ஆகார வருக்கம் |
||||||||
மாலெனும் பெயர்திரு மாலொடு மதிமகன்
காரிநிற வலாரியுங் காற்றொடு சோழனும்
கண்குத்திப் பாம்பும் கருமையும் பெருமையும்
மயக்கமும் விருப்பும் கண்ணே ணியுமாகும். ....1221
மாவெனும் பெயரொரு மரமு மழைத்தலும்
திருவுங் குதிரையும் செல்வமும் கறுப்பும்
விலங்கின் பொதுவும் விளைநிலமு மழகும்
வண்டு மோரிலக்கமும் பெருமை நிறமும்
நென்மா முதலவு நிகழ்த்தப் பெறுமே. ....1222
மாலை யெனும்பெய ரொழுக்கமு மியல்பும்
நதியும் இரவும் மலரான் மணியாற்
சொல்லாற் பொன்னாற் றொடுத்திடு தொடையுமாம்....1223
மானெனும் பெயரே மகர விராசியும்
விலங்கின் பொதுவுட னுழையையும் விளம்புவர். ....1224
மாரி யெனும்பெயர் மழையு மேகமும்
வடுகியு மதுவு மரணமும் வழங்கும். ....1225
மாதிர மெனும்பெயர் திசையும் யானையும்
மலையு மெனவே வழங்கப் பெறுமே. ....1226
மாதவ மெனும்பெயர் வளர்தவப் பெயரும்
இளவேனிற் பெயரு மதுவு மியம்புவர். ....1227
மார்க்க மெனும்பெயர் வழியுந் தெருவும்
சமைய விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. ....1228
மாட மெனும்பெயர் மனையும் உழுந்துமாம். ....1229
மாழை யெனும்பெயரு லோகக் கட்டியும்
பொன்னு மழகும் புளிமாவும் ஓலையும்
திரண்ட வடிவும் செப்புவர் புலவர். ....1230
மாசெனும் பெயரே மேகமும் அழுக்கும்
சிறுமையுங் குற்றமும் செப்பப் பெறுமே. ....1231
மாத ரெனும்பெய ரிடைச்சொலு மழகும்
காதலும் அரிவையர் பெயரும் கருதுவர். ....1232
மாந்த லெனும்பெயர் மரித்தலும் குடித்தலும்
உண்டலு மெனவே யுரைத்தனர் புலவர். ....1233
மாய னெனும்பெயர் மாதவன் பெயரும்
கருநிற முடையோன் பெயரும் கருதுவர். ....1234
மாய்த லெனும்பெயர் மறைதலும் மரணமும். ....1235
மாருதி யெனும்பெயர் அநுமன் பெயரும்
வீமன் பிதாவின் பெயரும் விளம்புவர். ....1236
மாய மெனும்பெயர் வஞ்சனைப் பெயரும்
பொய்யுங் கருநிறப் பெயரும் புகலுவர். ....1237
மாயை யெனும்பெயர் மாயமும் சத்தியும். ....1238
மாடெனும் பெயரே தனமும் பக்கமும்
மணியுஞ் செல்வமு நிரையும் வழங்கும். ....1239
மாலிகை யெனும்பெயர் மதுவு மாலியும். ....1240
மானுத லெனும்பெயர் மயக்கமு முவமையும்
இலச்சையு மெனவே இயம்புவர் புலவர். ....1241
மான மெனும்பெயர் லச்சையு மளவும்
விமானமுங் குற்றமும் பெருமையும் விளம்புவர். ....1242
மாலெனும் பெயர்திரு மாலொடு மதிமகன் காரிநிற வலாரியுங் காற்றொடு சோழனும் கண்குத்திப் பாம்பும் கருமையும் பெருமையும் மயக்கமும் விருப்பும் கண்ணே ணியுமாகும். ....1221
மாவெனும் பெயரொரு மரமு மழைத்தலும் திருவுங் குதிரையும் செல்வமும் கறுப்பும் விலங்கின் பொதுவும் விளைநிலமு மழகும் வண்டு மோரிலக்கமும் பெருமை நிறமும் நென்மா முதலவு நிகழ்த்தப் பெறுமே. ....1222
மாலை யெனும்பெய ரொழுக்கமு மியல்பும் நதியும் இரவும் மலரான் மணியாற் சொல்லாற் பொன்னாற் றொடுத்திடு தொடையுமாம்....1223
மானெனும் பெயரே மகர விராசியும் விலங்கின் பொதுவுட னுழையையும் விளம்புவர். ....1224
மாரி யெனும்பெயர் மழையு மேகமும் வடுகியு மதுவு மரணமும் வழங்கும். ....1225
மாதிர மெனும்பெயர் திசையும் யானையும் மலையு மெனவே வழங்கப் பெறுமே. ....1226
மாதவ மெனும்பெயர் வளர்தவப் பெயரும் இளவேனிற் பெயரு மதுவு மியம்புவர். ....1227
மார்க்க மெனும்பெயர் வழியுந் தெருவும் சமைய விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. ....1228
மாட மெனும்பெயர் மனையும் உழுந்துமாம். ....1229
மாழை யெனும்பெயரு லோகக் கட்டியும் பொன்னு மழகும் புளிமாவும் ஓலையும் திரண்ட வடிவும் செப்புவர் புலவர். ....1230
மாசெனும் பெயரே மேகமும் அழுக்கும் சிறுமையுங் குற்றமும் செப்பப் பெறுமே. ....1231
மாத ரெனும்பெய ரிடைச்சொலு மழகும் காதலும் அரிவையர் பெயரும் கருதுவர். ....1232
மாந்த லெனும்பெயர் மரித்தலும் குடித்தலும் உண்டலு மெனவே யுரைத்தனர் புலவர். ....1233
மாய னெனும்பெயர் மாதவன் பெயரும் கருநிற முடையோன் பெயரும் கருதுவர். ....1234
மாய்த லெனும்பெயர் மறைதலும் மரணமும். ....1235
மாருதி யெனும்பெயர் அநுமன் பெயரும் வீமன் பிதாவின் பெயரும் விளம்புவர். ....1236
மாய மெனும்பெயர் வஞ்சனைப் பெயரும் பொய்யுங் கருநிறப் பெயரும் புகலுவர். ....1237
மாயை யெனும்பெயர் மாயமும் சத்தியும். ....1238
மாடெனும் பெயரே தனமும் பக்கமும் மணியுஞ் செல்வமு நிரையும் வழங்கும். ....1239
மாலிகை யெனும்பெயர் மதுவு மாலியும். ....1240
மானுத லெனும்பெயர் மயக்கமு முவமையும் இலச்சையு மெனவே இயம்புவர் புலவர். ....1241
மான மெனும்பெயர் லச்சையு மளவும் விமானமுங் குற்றமும் பெருமையும் விளம்புவர். ....1242
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|