LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

மகர ஆகார வருக்கம்

 

மாலெனும் பெயர்திரு மாலொடு மதிமகன்
காரிநிற வலாரியுங் காற்றொடு சோழனும்
கண்குத்திப் பாம்பும் கருமையும் பெருமையும்
மயக்கமும் விருப்பும் கண்ணே ணியுமாகும். ....1221
மாவெனும் பெயரொரு மரமு மழைத்தலும்
திருவுங் குதிரையும் செல்வமும் கறுப்பும்
விலங்கின் பொதுவும் விளைநிலமு மழகும்
வண்டு மோரிலக்கமும் பெருமை நிறமும்
நென்மா முதலவு நிகழ்த்தப் பெறுமே. ....1222
மாலை யெனும்பெய ரொழுக்கமு மியல்பும்
நதியும் இரவும் மலரான் மணியாற்
சொல்லாற் பொன்னாற் றொடுத்திடு தொடையுமாம்....1223
மானெனும் பெயரே மகர விராசியும்
விலங்கின் பொதுவுட னுழையையும் விளம்புவர். ....1224
மாரி யெனும்பெயர் மழையு மேகமும்
வடுகியு மதுவு மரணமும் வழங்கும். ....1225
மாதிர மெனும்பெயர் திசையும் யானையும் 
மலையு மெனவே வழங்கப் பெறுமே. ....1226
மாதவ மெனும்பெயர் வளர்தவப் பெயரும்
இளவேனிற் பெயரு மதுவு மியம்புவர். ....1227
மார்க்க மெனும்பெயர் வழியுந் தெருவும்
சமைய விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. ....1228
மாட மெனும்பெயர் மனையும் உழுந்துமாம். ....1229
மாழை யெனும்பெயரு லோகக் கட்டியும்
பொன்னு மழகும் புளிமாவும் ஓலையும்
திரண்ட வடிவும் செப்புவர் புலவர். ....1230
மாசெனும் பெயரே மேகமும் அழுக்கும்
சிறுமையுங் குற்றமும் செப்பப் பெறுமே. ....1231
மாத ரெனும்பெய ரிடைச்சொலு மழகும்
காதலும் அரிவையர் பெயரும் கருதுவர். ....1232
மாந்த லெனும்பெயர் மரித்தலும் குடித்தலும்
உண்டலு மெனவே யுரைத்தனர் புலவர். ....1233
மாய னெனும்பெயர் மாதவன் பெயரும்
கருநிற முடையோன் பெயரும் கருதுவர். ....1234
மாய்த லெனும்பெயர் மறைதலும் மரணமும். ....1235
மாருதி யெனும்பெயர் அநுமன் பெயரும்
வீமன் பிதாவின் பெயரும் விளம்புவர். ....1236
மாய மெனும்பெயர் வஞ்சனைப் பெயரும்
பொய்யுங் கருநிறப் பெயரும் புகலுவர். ....1237
மாயை யெனும்பெயர் மாயமும் சத்தியும். ....1238
மாடெனும் பெயரே தனமும் பக்கமும்
மணியுஞ் செல்வமு நிரையும் வழங்கும். ....1239
மாலிகை யெனும்பெயர் மதுவு மாலியும். ....1240
மானுத லெனும்பெயர் மயக்கமு முவமையும்
இலச்சையு மெனவே இயம்புவர் புலவர். ....1241
மான மெனும்பெயர் லச்சையு மளவும்
விமானமுங் குற்றமும் பெருமையும் விளம்புவர். ....1242

 

மாலெனும் பெயர்திரு மாலொடு மதிமகன்

காரிநிற வலாரியுங் காற்றொடு சோழனும்

கண்குத்திப் பாம்பும் கருமையும் பெருமையும்

மயக்கமும் விருப்பும் கண்ணே ணியுமாகும். ....1221

 

மாவெனும் பெயரொரு மரமு மழைத்தலும்

திருவுங் குதிரையும் செல்வமும் கறுப்பும்

விலங்கின் பொதுவும் விளைநிலமு மழகும்

வண்டு மோரிலக்கமும் பெருமை நிறமும்

நென்மா முதலவு நிகழ்த்தப் பெறுமே. ....1222

 

மாலை யெனும்பெய ரொழுக்கமு மியல்பும்

நதியும் இரவும் மலரான் மணியாற்

சொல்லாற் பொன்னாற் றொடுத்திடு தொடையுமாம்....1223

 

மானெனும் பெயரே மகர விராசியும்

விலங்கின் பொதுவுட னுழையையும் விளம்புவர். ....1224

 

மாரி யெனும்பெயர் மழையு மேகமும்

வடுகியு மதுவு மரணமும் வழங்கும். ....1225

 

மாதிர மெனும்பெயர் திசையும் யானையும் 

மலையு மெனவே வழங்கப் பெறுமே. ....1226

 

மாதவ மெனும்பெயர் வளர்தவப் பெயரும்

இளவேனிற் பெயரு மதுவு மியம்புவர். ....1227

 

மார்க்க மெனும்பெயர் வழியுந் தெருவும்

சமைய விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. ....1228

 

மாட மெனும்பெயர் மனையும் உழுந்துமாம். ....1229

 

மாழை யெனும்பெயரு லோகக் கட்டியும்

பொன்னு மழகும் புளிமாவும் ஓலையும்

திரண்ட வடிவும் செப்புவர் புலவர். ....1230

 

மாசெனும் பெயரே மேகமும் அழுக்கும்

சிறுமையுங் குற்றமும் செப்பப் பெறுமே. ....1231

 

மாத ரெனும்பெய ரிடைச்சொலு மழகும்

காதலும் அரிவையர் பெயரும் கருதுவர். ....1232

 

மாந்த லெனும்பெயர் மரித்தலும் குடித்தலும்

உண்டலு மெனவே யுரைத்தனர் புலவர். ....1233

 

மாய னெனும்பெயர் மாதவன் பெயரும்

கருநிற முடையோன் பெயரும் கருதுவர். ....1234

 

மாய்த லெனும்பெயர் மறைதலும் மரணமும். ....1235

 

மாருதி யெனும்பெயர் அநுமன் பெயரும்

வீமன் பிதாவின் பெயரும் விளம்புவர். ....1236

 

மாய மெனும்பெயர் வஞ்சனைப் பெயரும்

பொய்யுங் கருநிறப் பெயரும் புகலுவர். ....1237

 

மாயை யெனும்பெயர் மாயமும் சத்தியும். ....1238

 

மாடெனும் பெயரே தனமும் பக்கமும்

மணியுஞ் செல்வமு நிரையும் வழங்கும். ....1239

 

மாலிகை யெனும்பெயர் மதுவு மாலியும். ....1240

 

மானுத லெனும்பெயர் மயக்கமு முவமையும்

இலச்சையு மெனவே இயம்புவர் புலவர். ....1241

 

மான மெனும்பெயர் லச்சையு மளவும்

விமானமுங் குற்றமும் பெருமையும் விளம்புவர். ....1242

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.