|
||||||||
மகர அகர வருக்கம் |
||||||||
மன்ன னெனும்பெய ருத்திரட் டாதியும்
மன்னவன் பெயரும் வகுத்தனர் புலவர். ....1164
மதியெனும் பெயரே முன்னிலை யசைச்சொலும்
உடுபதிப் பெயரு முணர்வு மாதமுமாம். ....1165
மரக்கா லெனும்பெயர் மாதவ னாடலும்
சோதி நாளு மளவையுஞ் சொல்லுவர். ....1166
மயிலை யெனும்பெயர் மலரிரு வாட்சியும்
மீன ராசியும் மீன்பொதுப் பெயருமாம். ....1167
மடங்க லெனும்பெய ரிடியு மறலியும்
முடங்கலு நொயுட னூழியுஞ் சிங்கமும். ....1168
மறலி யெனும்பெயர் மறப்பு மழுக்காறும்
கூற்றனு மெனவே கூறுவர் புலவர். ....1169
மருளெனும் பெயரே மயக்கத்தின் பெயரும்
குறிஞ்சி யாழ்த்திறமும் பேயுங் கூறுவர். ....1170
மஞ்செனும் பெயரே வலிமையு மிளமையும்
மேகமும் பணியும் வேழத்தின் முதுகும்
எழிலு மெனவே யியம்பினர் புலவர். ....1171
மதனெனும் பெயரே மாட்சிமைப் பெயரும்
அனங்கனும் பெலமு மழகு மாமே. ....1172
மண்டலி யெனும்பெயர் நாயும் பூஞையும்
மண்டலி யரவும் வழங்கப் பெறுமே. ....1173
மண்டல மெனும்பெயர் நாடுங் குதிரையும்
வட்டமுங் குதிரைச் சாரியும் வழங்கும். ....1174
மன்ற மென்பெயர் அம்பலமும் வாசமும். ....1175
மந்திர மெனும்பெயர் குதிரைப் பந்தியும்
கோயிலும் விசாரமு மதவு மில்லமும்
இறையவர் நாம வெழுத்து மாமே. ....1176
மறவ ரெனும்பெயர் வனசரர் பெயரும்
படைவீரர் பெயரும் பகரப் பெறுமே. ....1177
மள்ளர் எனும் பெயர் வன்சமர் வீரரும்
திண்ணியோர் பெயரு மருதநில மாக்களும். ....1178
மதலை யெனும்பெயர் மரக்கலப் பெயரும்
புதல்வர் பெயரும் கொடுங்கைப் பாவும்
கொன்றையும் தூணும் சார்பின வையுமாம். ....1179
மடை யெனும்பெயர் மணிப்பணிப் பூட்டும்
புனலின் மடையும் அடிசிலும் புகலுவர். ....1180
மட்டெனும் பெயரே யளவு மதுவுமாம். ....1181
மனவெனும் பெயரே மணிப்பொதுப் பெயரும்
அக்கு மணியின் பெயரு மாமே. ....1182
மணியெனும் பெயரே வனப்பு நன்மையும்
கருநிற முதவ மணியுங் கண்டையும்
இசையு மெனவே யியம்பப் பெறுமே. ....1183
மதுக மெனும்பெயர் வண்டுந் தராவும்
இருப்பையு மட்டி மதுரமும் இயம்புவர். ....1184
மடியெனும் பெயரே வயிறுத் தாழையும்
சோம்பும் புடைவையுந் துன்ப நோயுமாம். ....1185
மன்ற லெனும்பெயர் மணமும் கல்யாணமும்
பாலையாழ்த் திறமும் பகரப் பெறுமே. ....1186
மத்திகை யெனும்பெயர் மாலையின் பெயரும்
சம்மட்டி யினோடு சுடர்நிலைத் தண்டுமாம். ....1187
மல் லெனும்பெயரே மாயோ னாடலும்
வளமும் பெலமும் வகுத்துரைத் தனரே. ....1188
மல்லிகை யெனும்பெயர் மாலதிப் புதலும்
சுடர்நிலைத் தண்டுஞ் சொல்லுவர் புலவர். ....1189
மறமெனும் பெயரே பாவமும் கொடுமையும்
சினமு மெனவே செப்பப் பெறுமே. ....1190
மஞ்சரி யெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும்
மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர். ....1191
மகர மெனும்பெயர் மலர்ப்பூந் தாதும்
கறவு மகர விராசியுஞ் சொல்லுவர். ....1192
மந்தார மெனும்பெய ரைந்தரு விலொன்றும்
செம்பரத் தையுமெனச் செப்புவர் புலவர். ....1193
மத்தெனும் பெயரே தயிர்கடை தறிமுதன்
மத்தின் விகற்பமு மத்து முணர்த்துவர். ....1194
மல்ல லெனும்பெயர் வலிமையும் வளமுமாம். ....1195
மடமெனும் பெயரே முனிவர் வாசமும்
அறியாமை யுஞ்சத்திர மனையு மென்மையும். ....1196
மகனெனும் பெயரே மைந்தன் பெருமையும்
மகிமையிற் சிறந்தோன் பெயரும் வழங்கும். ....1197
மணமெனும் பெயரே கல்யாணமும் வாசமும்
கூட்டமு மெனவே கூறப் பெறுமே. ....1198
மறையெனும் பெயர்மந் திரமும் வேதமும்
பரிசையு மறைவும் ராசியப் பெயருமாம். ....1199
மகமெனும் பெயர்மக நாளுடன் யாகமாம். ....1200
மடலெனும் பெயர்பனை மடல்போல் வனவும்
பூவி னிதழு மோர்நூலும் புகலுவர். ....1201
மத்தக மெனும்பெயர் நெற்றியுந் தலையுமாம். ....1202
மண்ணெனும் பெயரே முழவின் மார்ச்சனையும்
அலங்கரித்தலு நல்ல வனியு மாமே. ....1203
மதுவெனும் பெயரே வசந்த காலமும்
இனிமையு நறவொடு தேனு மியம்புவர். ....1204
மரபெனும் பெயரே பழமையும் இயல்புமாம். ....1205
மறலெனும் பெயரே மயக்கமும் கூற்றுமாம். ....1206
மருமான் எனும்பெயர் வழித்தோன் றலுடனே
மருமகன் பெயரும் வழங்கப் பெறுமே. ....1207
மயலெனும் பெயரே மயக்கமும் செற்றையும்
பேயின் பெயரும் பேசுவர் புலவர். ....1208
மலைத லெனும்பெயர் மறுத்தலும் பொருதலும்
சூடலு மெனவே சொல்லப் பெறுமே. ....1209
மருத மெனும்பெயர் மருத நிலமும்
அந்நிலப் பாடலும் வயலுமோர் மரமுமாம். ....1210
மங்கு லெனும்பெயர் மேகமும் விசும்பும்
இருளு மெனவே இயம்புவர் புலவர். ....1211
மன்னெனும் பெயரே அசைச்சொலும் வேந்தனும்
நிலைபேறு மிகுதிப் பெயரு நிகழ்த்துவர். ....1212
மலர்தல் எனும்பெயர் எதிர்தலுந் தோன்றலும்
மலர்தலின் பெயரும் வகுத்தனர் புலவர். ....1213
மகரந்த மென்னும் பெயர்மலர்த் தேனும்
நறவும் பூந்தாது நவிலப் பெறுமே. ....1214
மதவெனும் பெயரே வன்மையு மிகுதியும். ....1215
மதமெனும் பெயர்கரி மதமும் செருக்குமாம். ....1216
மனையெனும் பெயரே மனைவியும் வீடுமாம். ....1217
மருந்தெனும் பெயரே மருந்தின் விகற்பமும்
அமர ருணவின் பெயரு மாமே. ....1218
மந்தி யெனும்பெயர் வண்டும் ஆதித்தனும்
குரங்கின் விகற்பமும் கூறப் பெறுமே. ....1219
மன்ற வெனும்பெயர் தேற்றமும் இடைச்சொலும்
மருவு மெனவே வழங்கப் பெறுமே. ....1220
மன்ன னெனும்பெய ருத்திரட் டாதியும் மன்னவன் பெயரும் வகுத்தனர் புலவர். ....1164
மதியெனும் பெயரே முன்னிலை யசைச்சொலும் உடுபதிப் பெயரு முணர்வு மாதமுமாம். ....1165
மரக்கா லெனும்பெயர் மாதவ னாடலும் சோதி நாளு மளவையுஞ் சொல்லுவர். ....1166
மயிலை யெனும்பெயர் மலரிரு வாட்சியும் மீன ராசியும் மீன்பொதுப் பெயருமாம். ....1167
மடங்க லெனும்பெய ரிடியு மறலியும் முடங்கலு நொயுட னூழியுஞ் சிங்கமும். ....1168
மறலி யெனும்பெயர் மறப்பு மழுக்காறும் கூற்றனு மெனவே கூறுவர் புலவர். ....1169
மருளெனும் பெயரே மயக்கத்தின் பெயரும் குறிஞ்சி யாழ்த்திறமும் பேயுங் கூறுவர். ....1170
மஞ்செனும் பெயரே வலிமையு மிளமையும் மேகமும் பணியும் வேழத்தின் முதுகும் எழிலு மெனவே யியம்பினர் புலவர். ....1171
மதனெனும் பெயரே மாட்சிமைப் பெயரும் அனங்கனும் பெலமு மழகு மாமே. ....1172
மண்டலி யெனும்பெயர் நாயும் பூஞையும் மண்டலி யரவும் வழங்கப் பெறுமே. ....1173
மண்டல மெனும்பெயர் நாடுங் குதிரையும் வட்டமுங் குதிரைச் சாரியும் வழங்கும். ....1174
மன்ற மென்பெயர் அம்பலமும் வாசமும். ....1175
மந்திர மெனும்பெயர் குதிரைப் பந்தியும் கோயிலும் விசாரமு மதவு மில்லமும் இறையவர் நாம வெழுத்து மாமே. ....1176
மறவ ரெனும்பெயர் வனசரர் பெயரும் படைவீரர் பெயரும் பகரப் பெறுமே. ....1177
மள்ளர் எனும் பெயர் வன்சமர் வீரரும் திண்ணியோர் பெயரு மருதநில மாக்களும். ....1178
மதலை யெனும்பெயர் மரக்கலப் பெயரும் புதல்வர் பெயரும் கொடுங்கைப் பாவும் கொன்றையும் தூணும் சார்பின வையுமாம். ....1179
மடை யெனும்பெயர் மணிப்பணிப் பூட்டும் புனலின் மடையும் அடிசிலும் புகலுவர். ....1180
மட்டெனும் பெயரே யளவு மதுவுமாம். ....1181
மனவெனும் பெயரே மணிப்பொதுப் பெயரும் அக்கு மணியின் பெயரு மாமே. ....1182
மணியெனும் பெயரே வனப்பு நன்மையும் கருநிற முதவ மணியுங் கண்டையும் இசையு மெனவே யியம்பப் பெறுமே. ....1183
மதுக மெனும்பெயர் வண்டுந் தராவும் இருப்பையு மட்டி மதுரமும் இயம்புவர். ....1184
மடியெனும் பெயரே வயிறுத் தாழையும் சோம்பும் புடைவையுந் துன்ப நோயுமாம். ....1185
மன்ற லெனும்பெயர் மணமும் கல்யாணமும் பாலையாழ்த் திறமும் பகரப் பெறுமே. ....1186
மத்திகை யெனும்பெயர் மாலையின் பெயரும் சம்மட்டி யினோடு சுடர்நிலைத் தண்டுமாம். ....1187
மல் லெனும்பெயரே மாயோ னாடலும் வளமும் பெலமும் வகுத்துரைத் தனரே. ....1188
மல்லிகை யெனும்பெயர் மாலதிப் புதலும் சுடர்நிலைத் தண்டுஞ் சொல்லுவர் புலவர். ....1189
மறமெனும் பெயரே பாவமும் கொடுமையும் சினமு மெனவே செப்பப் பெறுமே. ....1190
மஞ்சரி யெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும் மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர். ....1191
மகர மெனும்பெயர் மலர்ப்பூந் தாதும் கறவு மகர விராசியுஞ் சொல்லுவர். ....1192
மந்தார மெனும்பெய ரைந்தரு விலொன்றும் செம்பரத் தையுமெனச் செப்புவர் புலவர். ....1193
மத்தெனும் பெயரே தயிர்கடை தறிமுதன் மத்தின் விகற்பமு மத்து முணர்த்துவர். ....1194
மல்ல லெனும்பெயர் வலிமையும் வளமுமாம். ....1195
மடமெனும் பெயரே முனிவர் வாசமும் அறியாமை யுஞ்சத்திர மனையு மென்மையும். ....1196
மகனெனும் பெயரே மைந்தன் பெருமையும் மகிமையிற் சிறந்தோன் பெயரும் வழங்கும். ....1197
மணமெனும் பெயரே கல்யாணமும் வாசமும் கூட்டமு மெனவே கூறப் பெறுமே. ....1198
மறையெனும் பெயர்மந் திரமும் வேதமும் பரிசையு மறைவும் ராசியப் பெயருமாம். ....1199
மகமெனும் பெயர்மக நாளுடன் யாகமாம். ....1200
மடலெனும் பெயர்பனை மடல்போல் வனவும் பூவி னிதழு மோர்நூலும் புகலுவர். ....1201
மத்தக மெனும்பெயர் நெற்றியுந் தலையுமாம். ....1202
மண்ணெனும் பெயரே முழவின் மார்ச்சனையும் அலங்கரித்தலு நல்ல வனியு மாமே. ....1203
மதுவெனும் பெயரே வசந்த காலமும் இனிமையு நறவொடு தேனு மியம்புவர். ....1204
மரபெனும் பெயரே பழமையும் இயல்புமாம். ....1205
மறலெனும் பெயரே மயக்கமும் கூற்றுமாம். ....1206
மருமான் எனும்பெயர் வழித்தோன் றலுடனே மருமகன் பெயரும் வழங்கப் பெறுமே. ....1207
மயலெனும் பெயரே மயக்கமும் செற்றையும் பேயின் பெயரும் பேசுவர் புலவர். ....1208
மலைத லெனும்பெயர் மறுத்தலும் பொருதலும் சூடலு மெனவே சொல்லப் பெறுமே. ....1209
மருத மெனும்பெயர் மருத நிலமும் அந்நிலப் பாடலும் வயலுமோர் மரமுமாம். ....1210
மங்கு லெனும்பெயர் மேகமும் விசும்பும் இருளு மெனவே இயம்புவர் புலவர். ....1211
மன்னெனும் பெயரே அசைச்சொலும் வேந்தனும் நிலைபேறு மிகுதிப் பெயரு நிகழ்த்துவர். ....1212
மலர்தல் எனும்பெயர் எதிர்தலுந் தோன்றலும் மலர்தலின் பெயரும் வகுத்தனர் புலவர். ....1213
மகரந்த மென்னும் பெயர்மலர்த் தேனும் நறவும் பூந்தாது நவிலப் பெறுமே. ....1214
மதவெனும் பெயரே வன்மையு மிகுதியும். ....1215
மதமெனும் பெயர்கரி மதமும் செருக்குமாம். ....1216
மனையெனும் பெயரே மனைவியும் வீடுமாம். ....1217
மருந்தெனும் பெயரே மருந்தின் விகற்பமும் அமர ருணவின் பெயரு மாமே. ....1218
மந்தி யெனும்பெயர் வண்டும் ஆதித்தனும் குரங்கின் விகற்பமும் கூறப் பெறுமே. ....1219
மன்ற வெனும்பெயர் தேற்றமும் இடைச்சொலும் மருவு மெனவே வழங்கப் பெறுமே. ....1220
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|