LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

மகர அகர வருக்கம்

 

மன்ன னெனும்பெய ருத்திரட் டாதியும்
மன்னவன் பெயரும் வகுத்தனர் புலவர். ....1164
மதியெனும் பெயரே முன்னிலை யசைச்சொலும்
உடுபதிப் பெயரு முணர்வு மாதமுமாம். ....1165
மரக்கா லெனும்பெயர் மாதவ னாடலும்
சோதி நாளு மளவையுஞ் சொல்லுவர். ....1166
மயிலை யெனும்பெயர் மலரிரு வாட்சியும்
மீன ராசியும் மீன்பொதுப் பெயருமாம். ....1167
மடங்க லெனும்பெய ரிடியு மறலியும்
முடங்கலு நொயுட னூழியுஞ் சிங்கமும். ....1168
மறலி யெனும்பெயர் மறப்பு மழுக்காறும்
கூற்றனு மெனவே கூறுவர் புலவர். ....1169
மருளெனும் பெயரே மயக்கத்தின் பெயரும்
குறிஞ்சி யாழ்த்திறமும் பேயுங் கூறுவர். ....1170
மஞ்செனும் பெயரே வலிமையு மிளமையும் 
மேகமும் பணியும் வேழத்தின் முதுகும்
எழிலு மெனவே யியம்பினர் புலவர். ....1171
மதனெனும் பெயரே மாட்சிமைப் பெயரும்
அனங்கனும் பெலமு மழகு மாமே. ....1172
மண்டலி யெனும்பெயர் நாயும் பூஞையும்
மண்டலி யரவும் வழங்கப் பெறுமே. ....1173
மண்டல மெனும்பெயர் நாடுங் குதிரையும்
வட்டமுங் குதிரைச் சாரியும் வழங்கும். ....1174
மன்ற மென்பெயர் அம்பலமும் வாசமும். ....1175
மந்திர மெனும்பெயர் குதிரைப் பந்தியும்
கோயிலும் விசாரமு மதவு மில்லமும்
இறையவர் நாம வெழுத்து மாமே. ....1176
மறவ ரெனும்பெயர் வனசரர் பெயரும்
படைவீரர் பெயரும் பகரப் பெறுமே. ....1177
மள்ளர் எனும் பெயர் வன்சமர் வீரரும்
திண்ணியோர் பெயரு மருதநில மாக்களும். ....1178
மதலை யெனும்பெயர் மரக்கலப் பெயரும்
புதல்வர் பெயரும் கொடுங்கைப் பாவும்
கொன்றையும் தூணும் சார்பின வையுமாம். ....1179
மடை யெனும்பெயர் மணிப்பணிப் பூட்டும்
புனலின் மடையும் அடிசிலும் புகலுவர். ....1180
மட்டெனும் பெயரே யளவு மதுவுமாம். ....1181
மனவெனும் பெயரே மணிப்பொதுப் பெயரும்
அக்கு மணியின் பெயரு மாமே. ....1182
மணியெனும் பெயரே வனப்பு நன்மையும்
கருநிற முதவ மணியுங் கண்டையும்
இசையு மெனவே யியம்பப் பெறுமே. ....1183
மதுக மெனும்பெயர் வண்டுந் தராவும்
இருப்பையு மட்டி மதுரமும் இயம்புவர். ....1184
மடியெனும் பெயரே வயிறுத் தாழையும்
சோம்பும் புடைவையுந் துன்ப நோயுமாம். ....1185
மன்ற லெனும்பெயர் மணமும் கல்யாணமும்
பாலையாழ்த் திறமும் பகரப் பெறுமே. ....1186
மத்திகை யெனும்பெயர் மாலையின் பெயரும்
சம்மட்டி யினோடு சுடர்நிலைத் தண்டுமாம். ....1187
மல் லெனும்பெயரே மாயோ னாடலும்
வளமும் பெலமும் வகுத்துரைத் தனரே. ....1188
மல்லிகை யெனும்பெயர் மாலதிப் புதலும்
சுடர்நிலைத் தண்டுஞ் சொல்லுவர் புலவர். ....1189
மறமெனும் பெயரே பாவமும் கொடுமையும்
சினமு மெனவே செப்பப் பெறுமே. ....1190
மஞ்சரி யெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும்
மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர். ....1191
மகர மெனும்பெயர் மலர்ப்பூந் தாதும்
கறவு மகர விராசியுஞ் சொல்லுவர். ....1192
மந்தார மெனும்பெய ரைந்தரு விலொன்றும்
செம்பரத் தையுமெனச் செப்புவர் புலவர். ....1193
மத்தெனும் பெயரே தயிர்கடை தறிமுதன்
மத்தின் விகற்பமு மத்து முணர்த்துவர். ....1194
மல்ல லெனும்பெயர் வலிமையும் வளமுமாம். ....1195
மடமெனும் பெயரே முனிவர் வாசமும்
அறியாமை யுஞ்சத்திர மனையு மென்மையும். ....1196
மகனெனும் பெயரே மைந்தன் பெருமையும்
மகிமையிற் சிறந்தோன் பெயரும் வழங்கும். ....1197
மணமெனும் பெயரே கல்யாணமும் வாசமும்
கூட்டமு மெனவே கூறப் பெறுமே. ....1198
மறையெனும் பெயர்மந் திரமும் வேதமும்
பரிசையு மறைவும் ராசியப் பெயருமாம். ....1199
மகமெனும் பெயர்மக நாளுடன் யாகமாம். ....1200
மடலெனும் பெயர்பனை மடல்போல் வனவும்
பூவி னிதழு மோர்நூலும் புகலுவர். ....1201
மத்தக மெனும்பெயர் நெற்றியுந் தலையுமாம். ....1202
மண்ணெனும் பெயரே முழவின் மார்ச்சனையும்
அலங்கரித்தலு நல்ல வனியு மாமே. ....1203
மதுவெனும் பெயரே வசந்த காலமும்
இனிமையு நறவொடு தேனு மியம்புவர். ....1204
மரபெனும் பெயரே பழமையும் இயல்புமாம். ....1205
மறலெனும் பெயரே மயக்கமும் கூற்றுமாம். ....1206
மருமான் எனும்பெயர் வழித்தோன் றலுடனே
மருமகன் பெயரும் வழங்கப் பெறுமே. ....1207
மயலெனும் பெயரே மயக்கமும் செற்றையும்
பேயின் பெயரும் பேசுவர் புலவர். ....1208
மலைத லெனும்பெயர் மறுத்தலும் பொருதலும்
சூடலு மெனவே சொல்லப் பெறுமே. ....1209
மருத மெனும்பெயர் மருத நிலமும்
அந்நிலப் பாடலும் வயலுமோர் மரமுமாம். ....1210
மங்கு லெனும்பெயர் மேகமும் விசும்பும்
இருளு மெனவே இயம்புவர் புலவர். ....1211
மன்னெனும் பெயரே அசைச்சொலும் வேந்தனும்
நிலைபேறு மிகுதிப் பெயரு நிகழ்த்துவர். ....1212
மலர்தல் எனும்பெயர் எதிர்தலுந் தோன்றலும்
மலர்தலின் பெயரும் வகுத்தனர் புலவர். ....1213
மகரந்த மென்னும் பெயர்மலர்த் தேனும்
நறவும் பூந்தாது நவிலப் பெறுமே. ....1214
மதவெனும் பெயரே வன்மையு மிகுதியும். ....1215
மதமெனும் பெயர்கரி மதமும் செருக்குமாம். ....1216
மனையெனும் பெயரே மனைவியும் வீடுமாம். ....1217
மருந்தெனும் பெயரே மருந்தின் விகற்பமும்
அமர ருணவின் பெயரு மாமே. ....1218
மந்தி யெனும்பெயர் வண்டும் ஆதித்தனும்
குரங்கின் விகற்பமும் கூறப் பெறுமே. ....1219
மன்ற வெனும்பெயர் தேற்றமும் இடைச்சொலும்
மருவு மெனவே வழங்கப் பெறுமே. ....1220

 

மன்ன னெனும்பெய ருத்திரட் டாதியும்

மன்னவன் பெயரும் வகுத்தனர் புலவர். ....1164

 

மதியெனும் பெயரே முன்னிலை யசைச்சொலும்

உடுபதிப் பெயரு முணர்வு மாதமுமாம். ....1165

 

மரக்கா லெனும்பெயர் மாதவ னாடலும்

சோதி நாளு மளவையுஞ் சொல்லுவர். ....1166

 

மயிலை யெனும்பெயர் மலரிரு வாட்சியும்

மீன ராசியும் மீன்பொதுப் பெயருமாம். ....1167

 

மடங்க லெனும்பெய ரிடியு மறலியும்

முடங்கலு நொயுட னூழியுஞ் சிங்கமும். ....1168

 

மறலி யெனும்பெயர் மறப்பு மழுக்காறும்

கூற்றனு மெனவே கூறுவர் புலவர். ....1169

 

மருளெனும் பெயரே மயக்கத்தின் பெயரும்

குறிஞ்சி யாழ்த்திறமும் பேயுங் கூறுவர். ....1170

 

மஞ்செனும் பெயரே வலிமையு மிளமையும் 

மேகமும் பணியும் வேழத்தின் முதுகும்

எழிலு மெனவே யியம்பினர் புலவர். ....1171

 

மதனெனும் பெயரே மாட்சிமைப் பெயரும்

அனங்கனும் பெலமு மழகு மாமே. ....1172

 

மண்டலி யெனும்பெயர் நாயும் பூஞையும்

மண்டலி யரவும் வழங்கப் பெறுமே. ....1173

 

மண்டல மெனும்பெயர் நாடுங் குதிரையும்

வட்டமுங் குதிரைச் சாரியும் வழங்கும். ....1174

 

மன்ற மென்பெயர் அம்பலமும் வாசமும். ....1175

 

மந்திர மெனும்பெயர் குதிரைப் பந்தியும்

கோயிலும் விசாரமு மதவு மில்லமும்

இறையவர் நாம வெழுத்து மாமே. ....1176

 

மறவ ரெனும்பெயர் வனசரர் பெயரும்

படைவீரர் பெயரும் பகரப் பெறுமே. ....1177

 

மள்ளர் எனும் பெயர் வன்சமர் வீரரும்

திண்ணியோர் பெயரு மருதநில மாக்களும். ....1178

 

மதலை யெனும்பெயர் மரக்கலப் பெயரும்

புதல்வர் பெயரும் கொடுங்கைப் பாவும்

கொன்றையும் தூணும் சார்பின வையுமாம். ....1179

 

மடை யெனும்பெயர் மணிப்பணிப் பூட்டும்

புனலின் மடையும் அடிசிலும் புகலுவர். ....1180

 

மட்டெனும் பெயரே யளவு மதுவுமாம். ....1181

 

மனவெனும் பெயரே மணிப்பொதுப் பெயரும்

அக்கு மணியின் பெயரு மாமே. ....1182

 

மணியெனும் பெயரே வனப்பு நன்மையும்

கருநிற முதவ மணியுங் கண்டையும்

இசையு மெனவே யியம்பப் பெறுமே. ....1183

 

மதுக மெனும்பெயர் வண்டுந் தராவும்

இருப்பையு மட்டி மதுரமும் இயம்புவர். ....1184

 

மடியெனும் பெயரே வயிறுத் தாழையும்

சோம்பும் புடைவையுந் துன்ப நோயுமாம். ....1185

 

மன்ற லெனும்பெயர் மணமும் கல்யாணமும்

பாலையாழ்த் திறமும் பகரப் பெறுமே. ....1186

 

மத்திகை யெனும்பெயர் மாலையின் பெயரும்

சம்மட்டி யினோடு சுடர்நிலைத் தண்டுமாம். ....1187

 

மல் லெனும்பெயரே மாயோ னாடலும்

வளமும் பெலமும் வகுத்துரைத் தனரே. ....1188

 

மல்லிகை யெனும்பெயர் மாலதிப் புதலும்

சுடர்நிலைத் தண்டுஞ் சொல்லுவர் புலவர். ....1189

 

மறமெனும் பெயரே பாவமும் கொடுமையும்

சினமு மெனவே செப்பப் பெறுமே. ....1190

 

மஞ்சரி யெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும்

மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர். ....1191

 

மகர மெனும்பெயர் மலர்ப்பூந் தாதும்

கறவு மகர விராசியுஞ் சொல்லுவர். ....1192

 

மந்தார மெனும்பெய ரைந்தரு விலொன்றும்

செம்பரத் தையுமெனச் செப்புவர் புலவர். ....1193

 

மத்தெனும் பெயரே தயிர்கடை தறிமுதன்

மத்தின் விகற்பமு மத்து முணர்த்துவர். ....1194

 

மல்ல லெனும்பெயர் வலிமையும் வளமுமாம். ....1195

 

மடமெனும் பெயரே முனிவர் வாசமும்

அறியாமை யுஞ்சத்திர மனையு மென்மையும். ....1196

 

மகனெனும் பெயரே மைந்தன் பெருமையும்

மகிமையிற் சிறந்தோன் பெயரும் வழங்கும். ....1197

 

மணமெனும் பெயரே கல்யாணமும் வாசமும்

கூட்டமு மெனவே கூறப் பெறுமே. ....1198

 

மறையெனும் பெயர்மந் திரமும் வேதமும்

பரிசையு மறைவும் ராசியப் பெயருமாம். ....1199

 

மகமெனும் பெயர்மக நாளுடன் யாகமாம். ....1200

 

மடலெனும் பெயர்பனை மடல்போல் வனவும்

பூவி னிதழு மோர்நூலும் புகலுவர். ....1201

 

மத்தக மெனும்பெயர் நெற்றியுந் தலையுமாம். ....1202

 

மண்ணெனும் பெயரே முழவின் மார்ச்சனையும்

அலங்கரித்தலு நல்ல வனியு மாமே. ....1203

 

மதுவெனும் பெயரே வசந்த காலமும்

இனிமையு நறவொடு தேனு மியம்புவர். ....1204

 

மரபெனும் பெயரே பழமையும் இயல்புமாம். ....1205

 

மறலெனும் பெயரே மயக்கமும் கூற்றுமாம். ....1206

 

மருமான் எனும்பெயர் வழித்தோன் றலுடனே

மருமகன் பெயரும் வழங்கப் பெறுமே. ....1207

 

மயலெனும் பெயரே மயக்கமும் செற்றையும்

பேயின் பெயரும் பேசுவர் புலவர். ....1208

 

மலைத லெனும்பெயர் மறுத்தலும் பொருதலும்

சூடலு மெனவே சொல்லப் பெறுமே. ....1209

 

மருத மெனும்பெயர் மருத நிலமும்

அந்நிலப் பாடலும் வயலுமோர் மரமுமாம். ....1210

 

மங்கு லெனும்பெயர் மேகமும் விசும்பும்

இருளு மெனவே இயம்புவர் புலவர். ....1211

 

மன்னெனும் பெயரே அசைச்சொலும் வேந்தனும்

நிலைபேறு மிகுதிப் பெயரு நிகழ்த்துவர். ....1212

 

மலர்தல் எனும்பெயர் எதிர்தலுந் தோன்றலும்

மலர்தலின் பெயரும் வகுத்தனர் புலவர். ....1213

 

மகரந்த மென்னும் பெயர்மலர்த் தேனும்

நறவும் பூந்தாது நவிலப் பெறுமே. ....1214

 

மதவெனும் பெயரே வன்மையு மிகுதியும். ....1215

 

மதமெனும் பெயர்கரி மதமும் செருக்குமாம். ....1216

 

மனையெனும் பெயரே மனைவியும் வீடுமாம். ....1217

 

மருந்தெனும் பெயரே மருந்தின் விகற்பமும்

அமர ருணவின் பெயரு மாமே. ....1218

 

மந்தி யெனும்பெயர் வண்டும் ஆதித்தனும்

குரங்கின் விகற்பமும் கூறப் பெறுமே. ....1219

 

மன்ற வெனும்பெயர் தேற்றமும் இடைச்சொலும்

மருவு மெனவே வழங்கப் பெறுமே. ....1220

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.