|
||||||||
மகர உகர வருக்கம் |
||||||||
முறமெனும் பெயரே வியாகமுஞ் சுளகுமாம். ....1249
முறிகுள மெனும்பெயர் பூராட நாளும்
உடைகுளப் பெயரு முரைத்தனர் புலவர். ....1250
முரசெனும் பெயரே முரசின் விகற்பமும்
உத்திரட் டாதியு முரைக்கப் பெறுமே. ....1251
முனியெனும் பெயர்தவ முனிவன் பெயரும்
தந்தியின் கன்றுந் தனுவி ராசியும்
வில்லும் புலவோர் விளம்பப் பெறுமே. ....1252
முதலை யென்பெயர் செங்கிடையு மிடங்கரும்
மயிலிறகின் முதன் முள்ளும் வழங்கும். ....1253
முரம்பெனும் பெயரே மேடும் பாறையும்
பரலடுத் துயர்ந்த நிலமும் பகருவர். ....1254
முளையெனும் பெயரே மூங்கிலும் சுதனும்
அங்குரத் தின்பெயர் தானு மாமே. ....1255
முறுவ லெனும்பெயர் தந்தமு முகையுமாம். ....1256
முன்ன லெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....1257
முனையெனும் பெயரே முரண்பெறு பகையும்
கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர். ....1258
முரணெனும் பெயரே பெலமும் பகையுமாம். ....1259
முருகெனும் பெயரே முருகக் கடவுளும்
இளமையும் விழாவு மெழிலும் வாசமும்
மதுவு மெலுமிச்சும் வழங்கப் பெறுமே. ....1260
முறையெனும் பெயரே முறைப்பெயர் விகற்பமும்
இயல்பும் பொத்தகப் பெயரும் இயம்புவர். ....1261
முடலை யெனும்பெயர் திரண்ட வடிவும்
பெருமையு மென்னப் பேசுவர் புலவர். ....1262
முன்ன மெனும்பெயர் முற்கா லத்தொடு
சிங்கமும் குறிப்பும் சீக்கிரமு மாமே. ....1263
முடங்க லெனும்பெயர் மடங்கலுந் தாழையும்
மூங்கிலு நோயு மொழியப் பெறுமே. ....1264
முத்த மெனும்பெயர் அதரமும் பிரியமும்
முத்து மருத நிலமு மொழிகுவர். ....1265
முண்டசு மெனும்பெயர் முள்ளுடை மூலமும்
கமலமும் தாழையும் கள்ளுநீர் முள்ளியும்
நெற்றியு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1266
முல்லை யெனும்பெயர் முல்லை நன்னிலமும்
மல்லிகைப் பெயரும் வெற்றியுங் கற்புமாம். ....1267
முடியெனும் பெயர்மயிர் முடியும் தலையும்
மகுடமு மெனவே வழங்குவர் புலவர். ....1268
முச்சி யென்பெயர் மயிர்முடியு முச்சியும். ....1269
முற்றெனும் பெயரே முழுதும் வளைத்தலும். ....1270
முற்ற லெனும்பெயர் சூழ்போதலும் வெறுத்தலும்
முதுமையு முடிவின் பெயரு மொழிகுவர். ....1271
முளரி யெனும்பெயர் விறகுஞ் சிறுமையும்
கமலமும் காடும் கனலும் முண்மரமும்மாம். ....1272
மகர உகர வருக்கம் முற்றும்.
மகர ஊகார வருக்கம்
மூதிரை யெனும்பெயர் முக்கண்ணன் பெயரும்
ஆதிரை நாளு மாமென நவில்வர். ....1273
மூல மெனும்பெயர் கிழங்கு மோர்நாளும்
முதலு நிமித்தமும் வேரு மொழிந்தனர். ....1274
மூர லெனும்பெயர் முறுவலும் தந்தமும்
சோறு மெனவே சொல்லுவர் புலவர். ....1275
மூரி யெனும்பெயர் முரணும் பெருமையும்
எருமையு மிடபமுஞ் சோம்பு நெரிவுமாம். ....1276
மூச லெனும்பெயர் மொய்த்தலுஞ் சாவுமாம். ....1277
மூழி யெனும்பெயர் வாவியுஞ் சேறும்
அகப்பையின் பெயரு மாகு மென்ப. ....1278
மூழை யெனும்பெயர் அகப்பையுஞ் சேறுமாம். ....1279.
முறமெனும் பெயரே வியாகமுஞ் சுளகுமாம். ....1249
முறிகுள மெனும்பெயர் பூராட நாளும் உடைகுளப் பெயரு முரைத்தனர் புலவர். ....1250
முரசெனும் பெயரே முரசின் விகற்பமும் உத்திரட் டாதியு முரைக்கப் பெறுமே. ....1251
முனியெனும் பெயர்தவ முனிவன் பெயரும் தந்தியின் கன்றுந் தனுவி ராசியும் வில்லும் புலவோர் விளம்பப் பெறுமே. ....1252
முதலை யென்பெயர் செங்கிடையு மிடங்கரும் மயிலிறகின் முதன் முள்ளும் வழங்கும். ....1253
முரம்பெனும் பெயரே மேடும் பாறையும் பரலடுத் துயர்ந்த நிலமும் பகருவர். ....1254
முளையெனும் பெயரே மூங்கிலும் சுதனும் அங்குரத் தின்பெயர் தானு மாமே. ....1255
முறுவ லெனும்பெயர் தந்தமு முகையுமாம். ....1256
முன்ன லெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....1257
முனையெனும் பெயரே முரண்பெறு பகையும் கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர். ....1258
முரணெனும் பெயரே பெலமும் பகையுமாம். ....1259
முருகெனும் பெயரே முருகக் கடவுளும் இளமையும் விழாவு மெழிலும் வாசமும் மதுவு மெலுமிச்சும் வழங்கப் பெறுமே. ....1260
முறையெனும் பெயரே முறைப்பெயர் விகற்பமும் இயல்பும் பொத்தகப் பெயரும் இயம்புவர். ....1261
முடலை யெனும்பெயர் திரண்ட வடிவும் பெருமையு மென்னப் பேசுவர் புலவர். ....1262
முன்ன மெனும்பெயர் முற்கா லத்தொடு சிங்கமும் குறிப்பும் சீக்கிரமு மாமே. ....1263
முடங்க லெனும்பெயர் மடங்கலுந் தாழையும் மூங்கிலு நோயு மொழியப் பெறுமே. ....1264
முத்த மெனும்பெயர் அதரமும் பிரியமும் முத்து மருத நிலமு மொழிகுவர். ....1265
முண்டசு மெனும்பெயர் முள்ளுடை மூலமும் கமலமும் தாழையும் கள்ளுநீர் முள்ளியும் நெற்றியு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1266
முல்லை யெனும்பெயர் முல்லை நன்னிலமும் மல்லிகைப் பெயரும் வெற்றியுங் கற்புமாம். ....1267
முடியெனும் பெயர்மயிர் முடியும் தலையும் மகுடமு மெனவே வழங்குவர் புலவர். ....1268
முச்சி யென்பெயர் மயிர்முடியு முச்சியும். ....1269
முற்றெனும் பெயரே முழுதும் வளைத்தலும். ....1270
முற்ற லெனும்பெயர் சூழ்போதலும் வெறுத்தலும் முதுமையு முடிவின் பெயரு மொழிகுவர். ....1271
முளரி யெனும்பெயர் விறகுஞ் சிறுமையும் கமலமும் காடும் கனலும் முண்மரமும்மாம். ....1272
மகர உகர வருக்கம் முற்றும்.
மகர ஊகார வருக்கம்
மூதிரை யெனும்பெயர் முக்கண்ணன் பெயரும் ஆதிரை நாளு மாமென நவில்வர். ....1273
மூல மெனும்பெயர் கிழங்கு மோர்நாளும் முதலு நிமித்தமும் வேரு மொழிந்தனர். ....1274
மூர லெனும்பெயர் முறுவலும் தந்தமும் சோறு மெனவே சொல்லுவர் புலவர். ....1275
மூரி யெனும்பெயர் முரணும் பெருமையும் எருமையு மிடபமுஞ் சோம்பு நெரிவுமாம். ....1276
மூச லெனும்பெயர் மொய்த்தலுஞ் சாவுமாம். ....1277
மூழி யெனும்பெயர் வாவியுஞ் சேறும் அகப்பையின் பெயரு மாகு மென்ப. ....1278
மூழை யெனும்பெயர் அகப்பையுஞ் சேறுமாம். ....1279.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|