LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

மகர உகர வருக்கம்

 

முறமெனும் பெயரே வியாகமுஞ் சுளகுமாம். ....1249
முறிகுள மெனும்பெயர் பூராட நாளும்
உடைகுளப் பெயரு முரைத்தனர் புலவர். ....1250
முரசெனும் பெயரே முரசின் விகற்பமும்
உத்திரட் டாதியு முரைக்கப் பெறுமே. ....1251
முனியெனும் பெயர்தவ முனிவன் பெயரும்
தந்தியின் கன்றுந் தனுவி ராசியும்
வில்லும் புலவோர் விளம்பப் பெறுமே. ....1252
முதலை யென்பெயர் செங்கிடையு மிடங்கரும்
மயிலிறகின் முதன் முள்ளும் வழங்கும். ....1253
முரம்பெனும் பெயரே மேடும் பாறையும்
பரலடுத் துயர்ந்த நிலமும் பகருவர். ....1254
முளையெனும் பெயரே மூங்கிலும் சுதனும்
அங்குரத் தின்பெயர் தானு மாமே. ....1255
முறுவ லெனும்பெயர் தந்தமு முகையுமாம். ....1256
முன்ன லெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....1257
முனையெனும் பெயரே முரண்பெறு பகையும்
கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர். ....1258
முரணெனும் பெயரே பெலமும் பகையுமாம். ....1259
முருகெனும் பெயரே முருகக் கடவுளும்
இளமையும் விழாவு மெழிலும் வாசமும்
மதுவு மெலுமிச்சும் வழங்கப் பெறுமே. ....1260
முறையெனும் பெயரே முறைப்பெயர் விகற்பமும்
இயல்பும் பொத்தகப் பெயரும் இயம்புவர். ....1261
முடலை யெனும்பெயர் திரண்ட வடிவும்
பெருமையு மென்னப் பேசுவர் புலவர். ....1262
முன்ன மெனும்பெயர் முற்கா லத்தொடு
சிங்கமும் குறிப்பும் சீக்கிரமு மாமே. ....1263
முடங்க லெனும்பெயர் மடங்கலுந் தாழையும்
மூங்கிலு நோயு மொழியப் பெறுமே. ....1264
முத்த மெனும்பெயர் அதரமும் பிரியமும்
முத்து மருத நிலமு மொழிகுவர். ....1265
முண்டசு மெனும்பெயர் முள்ளுடை மூலமும்
கமலமும் தாழையும் கள்ளுநீர் முள்ளியும்
நெற்றியு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1266
முல்லை யெனும்பெயர் முல்லை நன்னிலமும்
மல்லிகைப் பெயரும் வெற்றியுங் கற்புமாம். ....1267
முடியெனும் பெயர்மயிர் முடியும் தலையும்
மகுடமு மெனவே வழங்குவர் புலவர். ....1268
முச்சி யென்பெயர் மயிர்முடியு முச்சியும். ....1269
முற்றெனும் பெயரே முழுதும் வளைத்தலும். ....1270
முற்ற லெனும்பெயர் சூழ்போதலும் வெறுத்தலும்
முதுமையு முடிவின் பெயரு மொழிகுவர். ....1271
முளரி யெனும்பெயர் விறகுஞ் சிறுமையும்
கமலமும் காடும் கனலும் முண்மரமும்மாம். ....1272
மகர உகர வருக்கம் முற்றும்.
மகர ஊகார வருக்கம்
மூதிரை யெனும்பெயர் முக்கண்ணன் பெயரும்
ஆதிரை நாளு மாமென நவில்வர். ....1273
மூல மெனும்பெயர் கிழங்கு மோர்நாளும்
முதலு நிமித்தமும் வேரு மொழிந்தனர். ....1274
மூர லெனும்பெயர் முறுவலும் தந்தமும்
சோறு மெனவே சொல்லுவர் புலவர். ....1275
மூரி யெனும்பெயர் முரணும் பெருமையும்
எருமையு மிடபமுஞ் சோம்பு நெரிவுமாம். ....1276
மூச லெனும்பெயர் மொய்த்தலுஞ் சாவுமாம். ....1277
மூழி யெனும்பெயர் வாவியுஞ் சேறும்
அகப்பையின் பெயரு மாகு மென்ப. ....1278
மூழை யெனும்பெயர் அகப்பையுஞ் சேறுமாம். ....1279.

 

முறமெனும் பெயரே வியாகமுஞ் சுளகுமாம். ....1249

 

முறிகுள மெனும்பெயர் பூராட நாளும்

உடைகுளப் பெயரு முரைத்தனர் புலவர். ....1250

 

முரசெனும் பெயரே முரசின் விகற்பமும்

உத்திரட் டாதியு முரைக்கப் பெறுமே. ....1251

 

முனியெனும் பெயர்தவ முனிவன் பெயரும்

தந்தியின் கன்றுந் தனுவி ராசியும்

வில்லும் புலவோர் விளம்பப் பெறுமே. ....1252

 

முதலை யென்பெயர் செங்கிடையு மிடங்கரும்

மயிலிறகின் முதன் முள்ளும் வழங்கும். ....1253

 

முரம்பெனும் பெயரே மேடும் பாறையும்

பரலடுத் துயர்ந்த நிலமும் பகருவர். ....1254

 

முளையெனும் பெயரே மூங்கிலும் சுதனும்

அங்குரத் தின்பெயர் தானு மாமே. ....1255

 

முறுவ லெனும்பெயர் தந்தமு முகையுமாம். ....1256

 

முன்ன லெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....1257

 

முனையெனும் பெயரே முரண்பெறு பகையும்

கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர். ....1258

 

முரணெனும் பெயரே பெலமும் பகையுமாம். ....1259

 

முருகெனும் பெயரே முருகக் கடவுளும்

இளமையும் விழாவு மெழிலும் வாசமும்

மதுவு மெலுமிச்சும் வழங்கப் பெறுமே. ....1260

 

முறையெனும் பெயரே முறைப்பெயர் விகற்பமும்

இயல்பும் பொத்தகப் பெயரும் இயம்புவர். ....1261

 

முடலை யெனும்பெயர் திரண்ட வடிவும்

பெருமையு மென்னப் பேசுவர் புலவர். ....1262

 

முன்ன மெனும்பெயர் முற்கா லத்தொடு

சிங்கமும் குறிப்பும் சீக்கிரமு மாமே. ....1263

 

முடங்க லெனும்பெயர் மடங்கலுந் தாழையும்

மூங்கிலு நோயு மொழியப் பெறுமே. ....1264

 

முத்த மெனும்பெயர் அதரமும் பிரியமும்

முத்து மருத நிலமு மொழிகுவர். ....1265

 

முண்டசு மெனும்பெயர் முள்ளுடை மூலமும்

கமலமும் தாழையும் கள்ளுநீர் முள்ளியும்

நெற்றியு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1266

 

முல்லை யெனும்பெயர் முல்லை நன்னிலமும்

மல்லிகைப் பெயரும் வெற்றியுங் கற்புமாம். ....1267

 

முடியெனும் பெயர்மயிர் முடியும் தலையும்

மகுடமு மெனவே வழங்குவர் புலவர். ....1268

 

முச்சி யென்பெயர் மயிர்முடியு முச்சியும். ....1269

 

முற்றெனும் பெயரே முழுதும் வளைத்தலும். ....1270

 

முற்ற லெனும்பெயர் சூழ்போதலும் வெறுத்தலும்

முதுமையு முடிவின் பெயரு மொழிகுவர். ....1271

 

முளரி யெனும்பெயர் விறகுஞ் சிறுமையும்

கமலமும் காடும் கனலும் முண்மரமும்மாம். ....1272

 

மகர உகர வருக்கம் முற்றும்.

 

மகர ஊகார வருக்கம்

 

மூதிரை யெனும்பெயர் முக்கண்ணன் பெயரும்

ஆதிரை நாளு மாமென நவில்வர். ....1273

 

மூல மெனும்பெயர் கிழங்கு மோர்நாளும்

முதலு நிமித்தமும் வேரு மொழிந்தனர். ....1274

 

மூர லெனும்பெயர் முறுவலும் தந்தமும்

சோறு மெனவே சொல்லுவர் புலவர். ....1275

 

மூரி யெனும்பெயர் முரணும் பெருமையும்

எருமையு மிடபமுஞ் சோம்பு நெரிவுமாம். ....1276

 

மூச லெனும்பெயர் மொய்த்தலுஞ் சாவுமாம். ....1277

 

மூழி யெனும்பெயர் வாவியுஞ் சேறும்

அகப்பையின் பெயரு மாகு மென்ப. ....1278

 

மூழை யெனும்பெயர் அகப்பையுஞ் சேறுமாம். ....1279.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.