LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

தாமிரபரணி மகா புஷ்கர விழா நிறைவு பெற்றது- 12 நாளில் 50 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் நீராடல்!

தாமிரபரணி மகா புஷ்கர விழா நிறைவு பெற்றது. தாமிரபரணி ஆற்றங்கரைகளில் 12 நாளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.

தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. 12 நாட்களாக தொடர்ந்த விழாவில், ஒவ்வொரு நாளும் ஆற்றில் குவிந்த கூட்டம் கணக்கில் அடங்காதது. 

தாமிரபரணி புஷ்கர விழா கமிட்டியினர் 12 நாளில் சுமார் 50 லட்சம் பேர் நீராட வருவர் என எதிர்பார்த்தனர். ஆனால் விழாவுக்கு வந்த கூட்டம் அதையும் தாண்டியது. தீர்த்த கட்டங்கள் என சிலவற்றை குறிப்பிட்டிருந்தாலும், ஆற்றில் அனைத்து இடங்களிலுமே கூட்டத்தை காண முடிந்தது. 

அதிலும் கடந்த வாரம், விடுமுறைக் காலத்தில் தாமிரபரணியில் கூட்டம் அலைமோதியது. முறப்பநாடு தீர்த்தக்கட்டத்தில் குளிக்க திரண்ட கூட்டத்திற்காக நான்கு வழிச்சாலையில் ஒருவழிப்பாதையை அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

பாபநாசம், அம்பை, முக்கூடல், திருவிடைமருதூர், நெல்லை, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட தீர்த்தக் கட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் நீராடினர்.  பிரம்மமுகூர்த்த காலத்தில் நீராடுதல் நலம் என்பதால் தாமிரபரணியில் கடந்த 12 தினங்களாக அதிகாலை 4 மணிக்கே புனித நீராடிய கூட்டம் அதிகம். 

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் திரண்டனர். மேலும் துறவியர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என தாமிரபரணியை முற்றுகையிட்டதால் அவர்களுடன் பெருங்கூட்டமும் ஆற்றங்கரைக்கு வந்தது. 

வற்றாத ஜீவநதியாக உள்ள தாமிரபரணிக்கு ஆண்டுதோறும் நன்றி அறிவிப்பு விழா கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் பல்வேறு தரப்பினர் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு கொண்டாடுவது நதி நீரின் மாசு தடுக்கவும் நதியைப் போற்றி பாதுகாக்கவும் உதவும். மேலும் இந்த விழாவை அரசே குறைந்தது ஆண்டுக்கு ஒரு வாரமாவது கொண்டாடிச் சிறப்பிக்க வேண்டும் எனவும் பலர் எதிர்பார்க்கின்றனர்.

தாமிரபரணி புஷ்கர விழாவை கொண்டாடிய ஆன்மிக குழுவினரும், ஆண்டுதோறும் குறைந்தது 3 நாட்கள் தாமிரபரணி அன்னைக்கு திருவிழா கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெரியோர்களுடன் ஆலோசித்து அந்நாட்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

by Mani Bharathi   on 25 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.