LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

மகரிஷி கேட்கும் வரம்

 

இளம் வயதிலேயே என்னுள்ளத்தில் நான்கு வினாக்கள் எழுந்தன. அவற்றிற்கு விடை காண்பதில் எனது பிறவியின் நோக்கம் என்பது போன்ற உணர்வோடு சிந்தனைச் சுடரிலே என் வாழ்நாட்களைச் செலவிட்டேன். வெற்றி கிடைத்தது. முதல் வினாவாகிய "தெய்வம்" தெளிவாக உணரப் பெற்றேன். அது எல்லா பொருள்களிலும் எல்லா உயிர்களிடத்திலும் அறிவு மயமாக ஒளிவிட்டு கொண்டிருக்கும் உண்மை உணர்ந்து கொண்டேன். மூன்றாவது வினாவாகிய "அறிவு எது?" என்பதையும் ஆராய்ந்து அறிந்து கொண்டேன். உண்மையிலேயே விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் பொருட்கள் நிறவி வராமல் தேங்கியும் அவசிய மற்ற பொருட்கள் பெருக்கமும் அவசியமான பொருட்கள் மீது அலட்சியமும் ஏற்ப்பட்டுப் பொருள் வறுமை போன்ற ஒரு மயக்க நிலை உருவாகி நிலைத்து வருகிறது என உணர்ந்து கொண்டேன்.
இந்தத் தெய்வீக உணர்வின் அடிப்படையில் தான் கர்மயோகம் என்ற உலக சமயம் எனது உள்ளத்திலிருந்து உருவாகியது. அந்த விரிந்த அறிவின் நிலையிலே இப்போது உங்களோடு பேசுகிறேன். செயல்புரியும் தெய்வங்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். உங்கள் செயல்கள் மூலம் தான் மனிதனுக்கு, உலகுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். இறைவனே உங்கள் அனைவருக்கும் அறிவாக இருக்கிறான்; உங்கள் உடல் உறுப்புகளிலே ஆற்றலாக இருக்கிறான். மக்கள் எல்லோருமே சாதனை புரியும் சித்தர்கள். அரூபமாகிய இறைவனைக் கேட்டுப் பெறுவது ஒன்றுமே இல்லை என்று அறிந்த நான், உருவ நிலையில் உள்ள தெய்வங்களாகிய உங்களையே நோக்கி உலகுக்கு நலமளிக்கும் வரம் கொடுக்கம்படி கேட்கிறேன். உருவத்தோடு, செயலாற்றி விளைவு பெறும் அறிவாற்றலோடு உள்ள நம்மிடையே உலகத்தையும் ஒப்புவித்து விட்டு, அரூப நிலையில் உள்ள இறைவன் ஏதுமற்றவனாகி நிற்கிறான். இனி அவனைக் கேட்பதில் பயனில்லை; அப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் காலமும், முயற்சியுமே வீணாகும். எனவே, நான் மக்களை நோக்கியே கேட்கிறேன். நம் அனைவருக்கும் இன்றியமையாத தேவையை நாமே தக்கபடி செயலாற்றிப் பெற்றுக்கொள்வோம்.

இளம் வயதிலேயே என்னுள்ளத்தில் நான்கு வினாக்கள் எழுந்தன. அவற்றிற்கு விடை காண்பதில் எனது பிறவியின் நோக்கம் என்பது போன்ற உணர்வோடு சிந்தனைச் சுடரிலே என் வாழ்நாட்களைச் செலவிட்டேன். வெற்றி கிடைத்தது. முதல் வினாவாகிய "தெய்வம்" தெளிவாக உணரப் பெற்றேன். அது எல்லா பொருள்களிலும் எல்லா உயிர்களிடத்திலும் அறிவு மயமாக ஒளிவிட்டு கொண்டிருக்கும் உண்மை உணர்ந்து கொண்டேன். மூன்றாவது வினாவாகிய "அறிவு எது?" என்பதையும் ஆராய்ந்து அறிந்து கொண்டேன். உண்மையிலேயே விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் பொருட்கள் நிறவி வராமல் தேங்கியும் அவசிய மற்ற பொருட்கள் பெருக்கமும் அவசியமான பொருட்கள் மீது அலட்சியமும் ஏற்ப்பட்டுப் பொருள் வறுமை போன்ற ஒரு மயக்க நிலை உருவாகி நிலைத்து வருகிறது என உணர்ந்து கொண்டேன்.

 

இந்தத் தெய்வீக உணர்வின் அடிப்படையில் தான் கர்மயோகம் என்ற உலக சமயம் எனது உள்ளத்திலிருந்து உருவாகியது. அந்த விரிந்த அறிவின் நிலையிலே இப்போது உங்களோடு பேசுகிறேன். செயல்புரியும் தெய்வங்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். உங்கள் செயல்கள் மூலம் தான் மனிதனுக்கு, உலகுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். இறைவனே உங்கள் அனைவருக்கும் அறிவாக இருக்கிறான்; உங்கள் உடல் உறுப்புகளிலே ஆற்றலாக இருக்கிறான். மக்கள் எல்லோருமே சாதனை புரியும் சித்தர்கள். அரூபமாகிய இறைவனைக் கேட்டுப் பெறுவது ஒன்றுமே இல்லை என்று அறிந்த நான், உருவ நிலையில் உள்ள தெய்வங்களாகிய உங்களையே நோக்கி உலகுக்கு நலமளிக்கும் வரம் கொடுக்கம்படி கேட்கிறேன். உருவத்தோடு, செயலாற்றி விளைவு பெறும் அறிவாற்றலோடு உள்ள நம்மிடையே உலகத்தையும் ஒப்புவித்து விட்டு, அரூப நிலையில் உள்ள இறைவன் ஏதுமற்றவனாகி நிற்கிறான். இனி அவனைக் கேட்பதில் பயனில்லை; அப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் காலமும், முயற்சியுமே வீணாகும். எனவே, நான் மக்களை நோக்கியே கேட்கிறேன். நம் அனைவருக்கும் இன்றியமையாத தேவையை நாமே தக்கபடி செயலாற்றிப் பெற்றுக்கொள்வோம்.

 

by Swathi   on 17 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.