-> உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது.
-> காலையிலும், இரவில் படு க்கைக்குச் செல்லும் முன்பும் பற்களை பிரஷ் கொண்டு துலக்குவதுடன், நாக்கை வழிப்பது நல்லது. நாக்கில் வெள்ளை படிவதை இது தடுக்கும்.
-> காலை எழுந்ததும் ஒரு கோப்பை தண்ணீர் அருந்துங்கள். தினசரி 10-12 கோப்பை அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
-> தினசரி நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி அவசியம்.
-> ஜலநேத்தி, சூத்ரநேர்த்தி போன்ற கழிவுகளை சுத்தம் செய்யும் பயிற்சி அவசியம்.
-> நெல்லிக்காய் ஜூஸ், திரிபலா சாப்பிடவும்.
-> காலையில் பூண்டு ரசம் அருந்துங்கள்.
-> நார்ச்சத்துள்ள உணவை உட் கொள்ளவும். கோதுமை, அரிசி த விடு நீங்காதது நல்லது. சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் பச் சைக் காய்கறிகளை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள் ளவும்.
-> பசித்தபின் புசிப்பதே நல்லது. மிதமான உணவே சிறந்தது. சாப் பிடும் உணவை நன்கு சுவைத்து, சவைத்து சாப்பிடவும்.
-> சாப்பாட்டிற்கு இடை இடையே தண்ணீர் அருந்தாதீர்கள். சாப்பிடு வதற்கு அரைமணி நேரம் முன்போ, சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்தோ தண்ணீர் அருந்தவும். இதனால் ஜீரண சக்தி பாதிக்கப் படாது.
-> துவர்ப்பு, மசால் உணவுகள், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்க்கவும்.
-> சோம்பலின்றி எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படவும்.
-> வாரம் ஒருமுறை வெறும் தண்ணீர் மட்டுமே, முடியாதவர்கள் கஞ்சி போன்ற திரவ உணவையோ, பழச்சாறோ அருந்தவும்.
-> உங்கள் உடல் நிலையை கண் காணித்து வரவும்.
-> சோர்வு ஏற்படும் போது போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.
-> டீ, காபி, பான், புகையிலை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் பொருள்களைத் தவிர்க்கவும்.
-> புகை பிடிப்பதையும், மது அருந்து வதையும் தவிர்க்கவும். இதனால் மனம் பேதலிப்பதுடன், பல தீராத நோய்களும் ஏற்பட்டு அவ தியுற நேரிடும். பலனை எதிர்பாராமல் கடமையை ஒழுங்காக, சரியாகச் செய்யுங்கள். பலன் தருவது இறைவன்.
-> பாதி வயிறு உணவு, பாதி அளவு தண்ணீர், மும்மடங்கு உட ற்பயிற்சி, வாய்விட்டுச் சிரிப்பது, அதிக நேரம் தியானப் பயிற்சி உங்களை முழு ஆரோக்கியத்தில் வைத்திருக்கும்.
-> மற்றவர்கள் உங்களிடம் எப் படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.
-> அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்கள் உடல் நலமுடன் இருக்க முடியாது.
-> நீங்கள் உண்ணும் உணவே அருமருந்தாகும்.
-> சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டால் உண்ணாமல் இருப்பதே சிறப்பு.
-> சிறுநீரைக் கழிக்க வேண்டாமா, அடக்கி வைக்கலாமா என்ற தயக்கம் ஏற்படும்போது, சிறுநீரை வெளியேற்றுவதே உடல் நலனுக்கு உகந்தது.
-> சாப்பிடும் போது மௌனத்தை அனுஷ்டியுங்கள்.
-> எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாமே, ஆக்கபூர்வமான எண் ணங்களையே உரமிட்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.
-> எதைச் செய்தாலும்,அதை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்வீர்களானால், உங்கள் வாழ்வில் நிறைவு ஏற்படும்.
-> எந்தச் சூழ்நிலையிலும் ஏமாற்றத்திற்கு இடம் தராதீர்கள்.
-> அன்றாடம் காலையிலும், மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
-> பசும்பால் அருந்தவும். அதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
-> தினசரி உங்கள் கண்களை 2-3 தடவை குளிர் நீரால் கழுவவும். கண் எரிச்சல் போன்றவற்றை இது தடுக்கும்.
-> பருவகாலத்திற்கு ஏற்றவாறு பழங்கள், சாலட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
-> பழங்கள், காய்கறிகளை அதன் தோல் நீக்காமல் உட்கொள்ளவும். அதுபோல பருப்பு வகைகளையும் தோல் நீக்காமல் பயன்படுத்தவும்.
-> 40 வயதைக் கடந்தவர்கள் அதிகளவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. குறைத்துக் கொள்வது நலம். 50 வயதுக்கு மேல் அடியோடு பருப்பு வகைக ளைத் தவிர்க்கவும்.
-> முளைகட்டிய தானியங்கள் உங்கள் உணவில் ஒரு முக்கிய ஐட்டமாக சேர்த்துக் கொள்ளவும்.
-> தினசரி சுத்தமான தண்ணீரில் குளிக்கவும். வியர்வை நாற்றம், சரும நோய் வராமல் தடுக்கும்.
-> கோரைப்பாயின் மீது பெட்ஷீட் ஜமுக்காளம் விரித்து, மிருதுவான தலையணை வைத்து படுத்து உறங்கவும். ரப்பர், ஃபோம் மெத்தைகள், தலையணைகள் வேண்டாம்.
-> பருவத்தில் கிடைக்கும் பழங்கள், முளைகட்டிய தானியங்களை கா லை உணவாகக் கொள்ளவும்.
-> அவ்வப்போது உடல் மசாஜ் செய்து கொள்ளலாம். காலை சூரிய ஒளியில் சூரியக் குளியல் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது.
|