LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

முக்கிய வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம்  தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

‘தேசிய முக்கியத்துவம்  மற்றும் அரசியலமைப்பு சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு  செய்வது தொடர்பாக, ஜெய் சிங், சட்ட மாணவர் சிநேகில் திரிபாதி மற்றும் பொறுப்புடைமை மற்றும் முறையான மாற்றத்துக்கான மையம் என்ற தொண்டு நிறுவனம்  ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்தன. 

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட்  ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், நீதிபதி கன்வில்கரும் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர்.  மற்றொரு நீதிபதியான சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். 

தலைமை நீதிபதி மிஸ்ரா, கன்வில்கர் வழங்கிய தீர்ப்பில் கூறி இருந்ததாவது:
முதற் கட்டமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அரசியலைமைப்பு சார்ந்த வழக்குகளின் இறுதி விவாதங்களை சோதனை அடிப்படையில் நேரடி  ஒளிபரப்பு செய்யலாம். 

இந்த வழக்கு விசாரணைக்கும் நேரடி ஒளிரப்புக்கும் 10 நிமிடம் என்ற அளவில் ஒளிபரப்பில் வித்தியாசம் இருக்க வேண்டும். இதில்  முக்கிய தகவல்  இடம்பெறவில்லை என தெரிந்தால் நீதிமன்ற அனுமதியுடன் அந்த விசாரணையை தணிக்கை  செய்து ஒளிபரப்பலாம். 

இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களின் உரிமைகளையும், வழக்கு தொடர்ந்தோரின் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வகையில் தேவையான  விதிமுறைகள் வகுக்கப்படும். திருமணம் விவகாரம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு போன்ற வழக்குகளை நேரடியாக ஒளிபரப்பக் கூடாது.  

நீதித்துறையின் பொறுப்பை அதிகரிக்க, வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்வது உதவியாக இருக்கும். இந்த திட்டங்கள் குறித்த  நடவடிக்கைகளை மத்திய சட்ட அமைச்சகம் மேற்கொள்ளும்.  
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

by Mani Bharathi   on 27 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.