தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை முன்னெடுத்துள்ள "மக்கள் கலைவிழா" சென்னையில் இன்று (22.09.2022) மாலை 6 மணிக்கு மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் தலைமையில் தொடங்கியது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை வலைத்தமிழ் (www.ValaiTamil.TV) நேரலை செய்தது.
அடுத்த ஒரு ஆண்டு முழுதும் கலைஞர்களை ஊக்குவிக்கவும், வாரம்தோறும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது "மக்கள் கலைவிழா" என்ற நிகழ்ச்சி.
கலைப் பண்பாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்களை,புதுமைகளை, செயல்பாடுகளை, மறுமலர்ச்சியை ஏற்படுத்திவரும் இயக்குநர் திரு.காந்தி அவர்களின் தொடர் திட்டமிடுதலால் கலை பண்பாட்டுத்துறை இன்று மக்களிடையே பேசப்படும் துறையாக விளங்குகிறது.
|