LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி காலமானார்

"மக்கள் சக்தி" இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (வயது 82) சென்னையில் 20-01-2013ல் காலமானார். அவர் பிரிந்தாலும் அவர் விட்டுச்செல்லும் சிந்தனைகளை லட்சோப லட்சம் இளைஞர்கள் அடைகாத்து வைத்திருக்கிறார்கள். அவரின் ஆதமா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

வாழ்க்கை குறிப்பு: 

 மனவியலைப் பற்றித் தொடர்ந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருபவர் டாக்டர்.எம்.எஸ். உதயமூர்த்தி.  மனோதத்துவங்களை வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை சுமார் 40  நூல்களில் வடித்துத் தந்திருக்கிறார் அவர்.  சிறந்த ஆசிரியர் என்ற விருதும், Fulbright Scholar என்ற கெளரவமும் இவருக்கு உண்டு. இவர் எழுதிய “எண்ணங்கள் “ நூல் தமிழக கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது.  மேலும் இது 62 பதிப்புகளுக்குமேல் சென்று வாசகர்களிடம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.

 

அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகிய மூவரிடமும் நன்கு பழகியவர்.  அறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது அவருடனேயே இருந்து தமிழகத்திற்கு தேவையான பல தொடர்புகளை ஏற்படுத்தியவர்.  எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆவதற்கு முன் அவரை அமெரிக்க பல்கலைகழகங்களின் மூலம் அமெரிக்கா அழைத்துவர ஏற்பாடு செய்தவர். நேர்மையான அரசுக்கு தாரக மந்திரமாக,  அரசியலுக்கு வர ஆர்வம உள்ள இளைஞர்கள் சுயவளர்ச்சி, சுய முனேற்றம் மற்றும் சமுதாய ஈடுபாடு என்ற மூன்று நிலைகளில் வரவேண்டும் என்று வலியுறுத்தியவர். இளைஞர்களிடையே எம்.எஸ். உதயமூர்த்தி நடத்திய நிகழ்ச்சிகள் தன்னம்பிக்கையை விதைப்பவையாக இருந்தன.

 

இலங்கை பிரச்சினைக்கு தீர்வுக்கான எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞருக்கு பாலமாக விளங்கியவர். நதிநீர் இணைப்பிற்காக தொடர்ந்து வலியுறுத்தியவர்.  தனது அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற ஒரு புதிய சமுதாயத்தை தமிழகம் பெறவேண்டும் என்று விரும்பி “மக்கள் சக்தி இயக்கம்” என்ற அமைப்பை உருவாக்கி தேர்தலில் நின்றவர்.

 

வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் அரசியல், சமூக மாற்றத்தில் ஈடுபட விருப்பம் இருக்கும் இளைஞர்கள் இவரது சுய சரிதையான “என்னை செதுக்கிய எண்ணங்களை” தவறாமல் படியுங்கள்.  உங்கள் பல கேள்விகளுக்கு அதில் பதில் இருக்கும். இவர் காலத்தில் கன்னியாகுமரியில் இருந்து கிருஷ்ணகிரி வரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டியவர். டைரக்டர் பாலச்சந்தர் “உன்னால் முடியும் தம்பி” என்ற தலைப்பில் கதாநாயகனுக்கு உதயமூர்த்தி என்ற பெயரைச் சூட்டி, ஒரு திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

 

எம்.எஸ்.உதயமூர்த்தி தஞ்சை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை அருகில்  விளநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவருக்கு சித்தார்த், அசோக் என்ற இரண்டு மகன்களும், கமலா என்ற மகளும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். 

by Swathi   on 21 Jan 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.