LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பத்துப்பாட்டு

மலைபடுகடாம்

 

பத்துப் பாட்டுக்களில் பத்தாவது மலைபடுகடாம், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது. 
நூல்
கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல்
திருமழை தலைஇய இருணிற விசும்பின்
விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொ டாகுளி நுண்ணுருக் 
குற்ற விளங்கடர்ப் பாண்டில் மின்னிரும் 
பீலி அணித்தழைக் கோட்டொடு 5
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு 
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி 10
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்  
அவர்கள் கடந்து வந்த மலை வழி
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில்
படுத்துவைத் தன்ன பாறை மருங்கின் 15
எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்
இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகித 20
பேரியாழின் இயல்பு
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்
கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை இரீஇச் 25
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்குதுளை செறிய ஆணி முடுக்கிப் 
புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப் 
புதுவது போர்த்த பொன்போற் பச்சை
வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால 30
மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து
அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி 
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக் 35
களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்
வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்  
பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல்
அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது
இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறைபல முற்றிய பைதீர் பாணரொட 40
உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்
மதந்தபு ஞமலி நாவி நன்ன
துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்
கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ 
விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து 45
இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்
கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல் 
புனல்கால் கழீஇய மணல்வார் புறவில் 
புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ 50
'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல்
தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின் 
மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு 
யாமவ ணின்றும் வருதும் நீயிரும்
கனிபொழி கானம் கிளையொ டுணீஇய 
துனைபறை நிவக்கும் புள்ளின மானப் 55
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின் 
வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோள் 
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன் 
முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்
இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப் 60
புதுநிறை வந்த புனலஞ் சாயல்
மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி 
வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த 65
புள்ளினிர் மன்ற எற்றாக் குறுதலின்  
கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்
ஆற்றின் அளவும் அசையுநற் புலமும்
வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும்
மலையும் சோலையும் மாபுகல் கானமும்
தொலையா னல்லிசை உலகமொடு நிற்பப 70
பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும்அவ நீகை மாரியும்
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின் 75
வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும்
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து 
வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கமும் 80
நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரிஉண்டிக் கட வுள தியற்கையும்
பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரு
ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும் 85
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்
புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்
கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்
இரைதேர்ந் திவரும் கொடுந்தாள் முதலையொட 90
திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி
உரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்
கேளினி வேளைநீ முன்னிய திசையே  
வழியினது நன்மையின் அளவு கூறுதல்
மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற் 95
புதுவது வந்தன் றிதுவதன் பண்பே 
வானமின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்
பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
அகலிரு விசும்பி னாஅல் போல 100
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
நீலத் தன்ன விதைப்புன மருங்கின்
மகுளி பாயாது மலிதுளி தழாலின்
அகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்
கெளவை போகிய கருங்காய் பிடியேழ் 105
நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்
பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்
விளைதயிர்ப் பிதிர்வின் வீவுக் கிருவிதொறும்
குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவர 110
மேதி யன்ன கல்பிறங்கு இயலின்
வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி
இரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே
பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு 
வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல் 115
வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக்
காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்
குறையறை வாரா நிவப்பி னறையுற்று
ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே
புயற்புனிறு போகிய பூமலி புறவின் 120
அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை
தொய்யாது வித்திய துளர்படு துடவை
ஐயவி யமன்ற வெண்காற் செறுவின்
மையென விரிந்தன நீணறு நெய்தல்
செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக் 125
காயங் கொண்டன இஞ்சிமா விருந்து 
வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும் 
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை
காழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென
ஊழ்மல ரொழிமுகை உயர்முகந் தோயத் 130
துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்கு
ஊழுற் றலமரும் உந்தூழ் அகலறைக்
கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற்
காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல் 135
மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை 
நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து
உண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்து
அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி
விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக் 140
குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்துக்
கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிக்
கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே  
கானவர் குடியின் இயல்பு
தீயி னன்ன ஒண்செங் காந்தள் 145
தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து
அறியா தெடுத்த புன்புறச் சேவல்
ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் 150
மணஇல் கமழு மாமலைச் சாரல்
தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்
சிறுகட் பன்றிப் பழுதுளிப் போக்கிப்
பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத் 
தூவொடு மலிந்த காய கானவர் 155
செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே
இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்  
வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து
அன்றவ ணசைஇ அற்சேர்ந் தல்கிக்
கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி 160
அலங்குகழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்றாள் 
மான விறல்வேள் வயிரிய மெனினே 
நும்மில் போல நில்லாது புக்குக் 165
கிழவிர் போலக் கேளாது கெழீஇச்
சேட்புலம் பகல இனிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு 
குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவிர்  
நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள்
ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொட 170
வேய்ப்பெயல் விளையுள் தேக்கட் தேறல் 
குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப் 
பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீர
அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை 175
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை 
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்த 180
வழையமை சாரல் கமழத் துழைஇ
நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக்
குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி
அகமலி உவகை ஆர்வமொ டளைஇ 
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் 185
மலைநாட்டில் நெடுநாள் தங்காது, நிலநாட்டில் செல்ல வேண்டுதல்
செருச்செய் முன்பிற் குருசில் முன்னிய 
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
அனைய தன்றவன் மலைமிசை நாடே
நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்
வரையர மகளிர் இருக்கை காணினும் 190
உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர் 
பலநா ணில்லாது நிலநாடு படர்மின்  
வழியின் அருமை எடுத்துரைத்தல் 
'பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும்' எனல்
விளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சிப் 
புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர்
அரும்பொறி உடைய வாறே நள்ளிருள் 195
அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின்  
பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை
நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்
முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில்
கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
குறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கிச் 200
செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச 
வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயாக் கழிமின்  
கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம்
புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்
உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉ
அகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப் 205
பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்
இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்
கருவிர லூகம் பார்ப்போ டிரிய
உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன
வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின் 210
காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல்
உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ்இழிந் தன்ன கான்யாற்று நடவை 
வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பிப் 215
பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித் 
துருவி னன்ன புன்றலை மகாரோடு
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்  
பாசி படிந்த குளக் கரைகளைக் கடந்து செல்லுதல்
அழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்
விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா 220
வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய 
முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடு
எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்  
காரி உண்டிக் கடவுளைத் தொழுதல்
உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய 225
மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்
சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
ஓரியாற் றியவின் மூத்த புரிசைப்
பராவரு மரபிற் கடவுட் காணிற 230
தொழாஅநிர் கழியின் அல்லது வறிது 
நும்மியந் தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி 
மாரி தலையுமவன் மல்லல் வெற்பே  
மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல்
அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் 235
கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்
நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த 
சூர்புகல் அடுக்கத்துப் பிரசங் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று 240
நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர்  
இரவில் குகைகளில் தங்குதல்
வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே
கழுதிற் சேணோன் ஏவொடு போகி
இழுதி னன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின் 245
நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள்துணிந் தன்ன ஏனங் காணின்
முளிகழை இழைந்த காடுபடு தீயின்
நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து
துகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர் 250
குவளையம் பைஞ்சுனை அசைவிடப் பருகி 
மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட் பொதியினிர் 
புட்கை போகிய புன்றலை மகாரோடு
அற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும்
இல்புக் கன்ன கல்லளை வதிமின் 255
விடியற்காலத்தில் செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல்
அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பி 
வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து
கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்  
வழியில் மேற்கொள்ளவேண்டும் முன் எச்சரிக்கைகள்
கயம்கண் டன்ன அகன்பை யங்கண்
மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும 260
துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்துசேட் கமழும் பூவும் உண்டோர் 
மறந்தமை கல்லாப் பழனும் ஊழிறந்து
பெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்
இருங்கால் வீயும் பெருமரக் குழாமும் 265
இடனும் வலனும் நினையினர் நோக்கிக்
குறியறிக் தவையவை குறுகாது கழிமின்
கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்
கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின்
நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின் 270
குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன
மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலைத்
தேஎ மருளும் அமைய மாயினும்
இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்
குறவரு மருளுங் குன்றத்துப் படினே 275
அகன்கட் பாறை துவன்றிக் கல்லென
இயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்  
வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல்
பாடின் அருவிப் பயங்கெழு மீமிசைக்
காடுகாத் துறையுங் கானவர் உளரே
நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள 280
புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
உண்டற் கினிய பழனுங் கண்டோர் 
மலைதற் கினிய பூவுங் காட்டி
ஊறு நிரம்பிய ஆறவர் முந்துற 
நும்மி னெஞ்சத் தவலம் வீட 285
இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர்
அறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு 
குறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து
அலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற் 290
பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ  
மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்
கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்
மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறும்
அருவிய நுகரும் வானர மகளிர்
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் 295
தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை
இலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல் 
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் 
புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்
சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின் 300
எய்தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்
தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை 305
மலைமா ரிடூஉம் ஏமப் பூசல்
கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி 
வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின்
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல் 310
கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு 
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை யுற்ற களையாப் பூசல்
கலைகை யற்ற காண்பின் நெடுவரை 315
நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்
பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை
அருங்குறும் பெறிந்த கானவர் உவகை
திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென
நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு 320
மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென 
வான்றோய் மீமிசை அயருங் குரவை
நல்லெழி னெடுந்தேர் இயவுவந் தன்ன
கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து 325
உரவுச்சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார் 
விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளிபடு பூசல்
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு 330
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை 
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப 
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை 335
காந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி 
வன்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக் 340
கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்
சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர் 
பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பும்
என்றிவ் வனைத்தும் இயைந்தொருங் கீண்டி 345
அவலவு மிசையவுந் துவன்றிப் பலவுடன்
அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த 
மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக்  
நன்னனது மலை வழியில் செல்லும் வகை
குரூஉக்கட் பிணையல் கோதை மகளிர்
முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண் 350
விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே
கண்ண் டண்ண்னெனக் கண்டுங் கேட்டுங்
உண்டற் கினிய பலபா ராட்டியும்
இன்னும் வருவ தாக நமக்கெனத்
தொன்முறை மரபினி ராகிப் பன்மாண் 355
செருமிக்குப் புகலுந் திருவார் மார்பன்
உருமுரறு கருவிய பெருமலை பிற்பட
இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்
கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின் 360
குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி
மைபடு மாமலை பனுவலிற் பொங்கிக்
கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி
தூஉ யன்ன துவலை தூற்றலின்
தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு
காஅய்க் கொண்டநும் இயந்தொய் படாமற் 365
கூவல் அன்ன விடரகம் புகுமின்
இருங்கல் இகுப்பத் திறுவரை சேராது 
குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து
நின்று நோக்கினும் கண்வாள் வெளவும்
மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு 370
தண்டுகா லாகத் தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறுதவப் பலவே
அயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை
வெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்துக்
கதிர்சினந் தணிந்த அமயத்துக் கழிமின் 375
அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்
உரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு 
புரைதவ உயரிய மழைமருள் பஃறோல்
அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய 
பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும்
முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோல். 380
இன்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி 
மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்
கைபிணி விடாஅது பைபயக் கழிமின்
களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகல்
தளிபொழி கானந் தலைதவப் பலவே 385
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்லேசு கவலை எண்ணுமிகப் பலவே
இன்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத் 390
தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின்  
புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல்
பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புன்முடிந் திடுமின்  
நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள்
செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்
கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்து 395
கடவு ளோங்கிய காடேசு கவலை
ஒட்டா தகன்ற ஒன்னாத் தெவ்வர் 
சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே
தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை
ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே 400
மேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர்
ஆங்கன மற்றே நம்ம னோர்க்கே
அசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின்  
கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம்
புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்
கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து 405
சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
தலையிரும்பு கதழும் நாறுகொடிப் புறவின்
வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த 
வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின் 410
பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும் 
புலம்புசேண் அகலப் புதுவிர் ஆகுவிர் 
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்
கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் 415
பல்யாட் டினநிரை எல்லினிர் புகினே 
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் 
துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்ன
மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்
தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின் 420
நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை
கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்
கொடுவிற் கூளியர் கூவை காணிற்
படியோர்த் தேய்த்த பணிவில் ஆண்மைக்
கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே
தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ 425
ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லை
ஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே  
மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல்
தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்
உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி 430
திரங்குமர னாரிற் பொலியச் சூடி
முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின்  
புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல்
செவ்வீ வேங்கைப் பூவி னன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த 435
சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ்
அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட
அகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய 
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்
பொன்னறைந் தன்ன நுண்ணேர் அரிசி 440
வெண்ணெறிந் தியற்றிய மாக்கண் அமலை
தண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் 
விசையங் கொழித்த பூழி யன்ன
உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை 445
நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப் 
பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சிப் 
புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்  
நன்னனது தண் பணை நாட்டின் தன்மை
புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ்ப் 450
பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்
பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும்
நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே  
உழவர் செய்யும் உபசாரம்
கண்புமலி பழனங் கமழத் துழைஇ 
வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை 455
நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற் 
பிடிக்கை யன்ன செங்கண் வராஅல் 
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப் 
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த 460
விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ 
வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத் 
துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர் 
முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு 465
வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித்
திண்டேர் நன்னற்கும் அயினி சான்மெனக்
கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி
எருதெறி களமர் ஓதையொடு நல்யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின் 470
சேயாற்றின் கரைவழியே செல்லுதல்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச்
செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல்
கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி 
வனைகலத் திகிரியிற் குமிழி சுழலும் 
துனைசெலற் றலைவாய் ஓவிறந் தொலிக்கும் 475
காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்
யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின்  
நன்னனது மூதூரின் இயல்பு
நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்
பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து 480
யாறெனக் கிடந்த செருவிற் சாறென
இகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
கடலெனக் காரென ஒலிக்குஞ் சும்மையொடு 
மலையென மழையென மாட மோங்கித் 
துனிதீர் காதலின் இனிதமர்ந் துறையும் 485
பனிவார் காவிற் பல்வண் டிமிரும்
நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்  
மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்
பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள்வாண் மறவர்
கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின் 490
அருங்கடி வாயில் அயிராது புகுமின்
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி 
வந்தோர் மன்ற அளியர் தாமெனக்
கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி 495
விருந்திறை அவரவர் எதிர்கொளக் குறுகிப் 
பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட  
அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம்
எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்
தொழுதி போக வலிந்தகப் பட்ட
மடநடை ஆமான் கயமுனிக் குழவி 500
ஊமை எண்கின் குடாவடிக் குருளை 
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள் 
வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்
அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வை
அளைச்செறி உழுவை கோளுற வெறுத்த 505
மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி
அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற் 
பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை 
வரைப்பொலிந் தியலும் மடக்கண் மஞ்ஞை
கானக் கோழிக் கவர்குரற் சேவல் 510
கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம்
இடிக்கலப் பன்ன நறுவடி மாவின் 
வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம் 
தூவற் கலித்த இவர்நனை வளர்கொடி
காஅய்க் கொண்ட நுகமரு ணூறை 515
பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி 
குரூஉப்புலி பொருத புண்கூர் யானை 
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள் 
வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்
நாகந் திலக நறுங்காழ் ஆரம் 520
கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி
திருந்தமை விளைந்த தேக்கள் தேறல்
கானிலை எருமைக் கழைபெய் தீந்தயிர்
நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
நேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல் 525
உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும்
குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி
கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப
நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி  
முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல்
வானத் தன்ன வளமலி யானைத் 530
தாதெருத் ததைந்த முற்ற முன்னி 
மழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்பக்
கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர 
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்
நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக் 535
கடவ தறிந்த இன்குரல் விறலியர்
தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது
அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை  
கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல்
விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக்
குன்றா நல்லிசைக் சென்றோர் உம்பல் 540
இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப
இடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்
சென்றது நொடியவும் விடாஅன் 545
நன்னன் கூறும் முகமன் உரை
நசைதர 
வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்  
நாளோலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல்
பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்து
திருநகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லென் ஒக்கல் நல்வலத் திரீஇ  
நன்னனது குளிர்ந்த நோக்கம்
உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து 550
அகன்ற தாயத் தஃகிய நுட்பத்து
இலமென மலர்ந்த கைய ராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக்
கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று 555
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்
பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரிது
உவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி 560
நன்னனது கொடைச் சிறப்பு
இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ 
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு
நெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாது
தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து 565
பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்
தலைவன் தாமரை மலைய விறலியர்
சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய 570
நீரியக் கன்ன நிரைசெலல் நெடுந்தேர் 
வாரிக் கொள்ளா வரைமருள் வேழம்
கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை
பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நிலந்தினக் கிடந்த நிதியமொ டனைத்தும் 575
இலம்படு புலவர் ஏற்றகைந் நிறையக்
கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்
வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக்
கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழைசுரந் தன்ன ஈகை நல்கித் 580
தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்
வென்றெழு கொடியிற் றோன்றும்
குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே.  
தனிப் பாடல்
தூஉஉத் தீம் புகை தொல் விசும்பு போர்த்ததுகொல்? 
பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்? 
மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார் 
மாஅமை எல்லாம் பசப்பு! 
   
மலைபடுகடாம் முற்றிற்று.

பத்துப் பாட்டுக்களில் பத்தாவது மலைபடுகடாம், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது. 
நூல்

கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல்

திருமழை தலைஇய இருணிற விசும்பின்விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்திண்வார் விசித்த முழவொ டாகுளி நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில் மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு 5கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇநடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டைகடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி 10நொடிதரு பாணிய பதலையும் பிறவும்கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்பநேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்  

அவர்கள் கடந்து வந்த மலை வழி

கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில்படுத்துவைத் தன்ன பாறை மருங்கின் 15எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறிதொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாதுஇடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகித 20

பேரியாழின் இயல்பு

தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக்குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்அரலை தீர உரீஇ வரகின்குரல்வார்ந் தன்ன நுண்டுளை இரீஇச் 25சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்திஇலங்குதுளை செறிய ஆணி முடுக்கிப் புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப் புதுவது போர்த்த பொன்போற் பச்சைவதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால 30மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்துஅடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்பஅகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாதுகவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக் 35களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்  

பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல்

அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாதுஇசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்துறைபல முற்றிய பைதீர் பாணரொட 40உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்மதந்தபு ஞமலி நாவி நன்னதுளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து 45இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல் புனல்கால் கழீஇய மணல்வார் புறவில் புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ 50

'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல்

தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின் மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு யாமவ ணின்றும் வருதும் நீயிரும்கனிபொழி கானம் கிளையொ டுணீஇய துனைபறை நிவக்கும் புள்ளின மானப் 55புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின் வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோள் மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன் முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப் 60புதுநிறை வந்த புனலஞ் சாயல்மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடுஉள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த 65புள்ளினிர் மன்ற எற்றாக் குறுதலின்  

கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்

ஆற்றின் அளவும் அசையுநற் புலமும்வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும்மலையும் சோலையும் மாபுகல் கானமும்தொலையா னல்லிசை உலகமொடு நிற்பப 70பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப்புலவோர்க்குச் சுரக்கும்அவ நீகை மாரியும்இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்குஅரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடுதூத்துளி பொழிந்த பொய்யா வானின் 75வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும்நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கிநல்லிதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கமும் 80நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்பேரிசை நவிர மேஎ யுறையும்காரிஉண்டிக் கட வுள தியற்கையும்பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதருஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும் 85இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்இரைதேர்ந் திவரும் கொடுந்தாள் முதலையொட 90திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சிஉரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்கேளினி வேளைநீ முன்னிய திசையே  

வழியினது நன்மையின் அளவு கூறுதல்

மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற் 95புதுவது வந்தன் றிதுவதன் பண்பே வானமின்னு வசிவு பொழிய ஆனாதுஇட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்துஅகலிரு விசும்பி னாஅல் போல 100வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டைநீலத் தன்ன விதைப்புன மருங்கின்மகுளி பாயாது மலிதுளி தழாலின்அகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்கெளவை போகிய கருங்காய் பிடியேழ் 105நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்விளைதயிர்ப் பிதிர்வின் வீவுக் கிருவிதொறும்குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவர 110மேதி யன்ன கல்பிறங்கு இயலின்வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சிஇரும்புகவர் வுற்றன பெரும்புன வரகேபால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல் 115வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக்காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்குறையறை வாரா நிவப்பி னறையுற்றுஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பேபுயற்புனிறு போகிய பூமலி புறவின் 120அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரைதொய்யாது வித்திய துளர்படு துடவைஐயவி யமன்ற வெண்காற் செறுவின்மையென விரிந்தன நீணறு நெய்தல்செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக் 125காயங் கொண்டன இஞ்சிமா விருந்து வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும் விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலைகாழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தெனஊழ்மல ரொழிமுகை உயர்முகந் தோயத் 130துறுகல் சுற்றிய சோலை வாழைஇறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்குஊழுற் றலமரும் உந்தூழ் அகலறைக்கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற்காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல் 135மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்துஉண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்துஅரலை உக்கன நெடுந்தாள் ஆசினிவிரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக் 140குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்துக்கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிக்கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கிமுரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே  

கானவர் குடியின் இயல்பு

தீயி னன்ன ஒண்செங் காந்தள் 145தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்துஅறியா தெடுத்த புன்புறச் சேவல்ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தெனநெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் 150மணஇல் கமழு மாமலைச் சாரல்தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்சிறுகட் பன்றிப் பழுதுளிப் போக்கிப்பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத் தூவொடு மலிந்த காய கானவர் 155செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினேஇரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்  

வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து

அன்றவ ணசைஇ அற்சேர்ந் தல்கிக்கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்துசேந்த செயலைச் செப்பம் போகி 160அலங்குகழை நரலும் ஆரிப் படுகர்ச்சிலம்படைந் திருந்த பாக்க மெய்திநோனாச் செருவின் வலம்படு நோன்றாள் மான விறல்வேள் வயிரிய மெனினே நும்மில் போல நில்லாது புக்குக் 165கிழவிர் போலக் கேளாது கெழீஇச்சேட்புலம் பகல இனிய கூறிப்பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவிர்  

நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள்

ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொட 170வேய்ப்பெயல் விளையுள் தேக்கட் தேறல் குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப் பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீரஅருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை 175முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇவெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்இன்புளிக் கலந்து மாமோ ராகக்கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்த 180வழையமை சாரல் கமழத் துழைஇநறுமலர் அணிந்த நாறிரு முச்சிக்குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சிஅகமலி உவகை ஆர்வமொ டளைஇ மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் 185

மலைநாட்டில் நெடுநாள் தங்காது, நிலநாட்டில் செல்ல வேண்டுதல்

செருச்செய் முன்பிற் குருசில் முன்னிய பரிசில் மறப்ப நீடலும் உரியிர்அனைய தன்றவன் மலைமிசை நாடேநிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்வரையர மகளிர் இருக்கை காணினும் 190உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர் பலநா ணில்லாது நிலநாடு படர்மின்  

வழியின் அருமை எடுத்துரைத்தல் 'பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும்' எனல்

விளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சிப் புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர்அரும்பொறி உடைய வாறே நள்ளிருள் 195அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின்  

பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை

நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில்கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவேகுறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கிச் 200செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயாக் கழிமின்  

கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம்

புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉஅகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப் 205பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்கருவிர லூகம் பார்ப்போ டிரியஉயிர்செகு மரபிற் கூற்றத் தன்னவரும்விசை தவிராது மரமறையாக் கழிமின் 210

காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல்

உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கிஇரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்அகழ்இழிந் தன்ன கான்யாற்று நடவை வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பிப் 215பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித் துருவி னன்ன புன்றலை மகாரோடுஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்  

பாசி படிந்த குளக் கரைகளைக் கடந்து செல்லுதல்

அழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா 220வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசிஅடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடுஎருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்  

காரி உண்டிக் கடவுளைத் தொழுதல்

உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய 225மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சிஓரியாற் றியவின் மூத்த புரிசைப்பராவரு மரபிற் கடவுட் காணிற 230தொழாஅநிர் கழியின் அல்லது வறிது நும்மியந் தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி மாரி தலையுமவன் மல்லல் வெற்பே  

மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல்

அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் 235கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்னநெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த சூர்புகல் அடுக்கத்துப் பிரசங் காணினும்ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று 240நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர்  

இரவில் குகைகளில் தங்குதல்

வரைசேர் வகுந்திற் கானத்துப் படினேகழுதிற் சேணோன் ஏவொடு போகிஇழுதி னன்ன வானிணஞ் செருக்கிநிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின் 245நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்இருள்துணிந் தன்ன ஏனங் காணின்முளிகழை இழைந்த காடுபடு தீயின்நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்துதுகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர் 250குவளையம் பைஞ்சுனை அசைவிடப் பருகி மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட் பொதியினிர் புட்கை போகிய புன்றலை மகாரோடுஅற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும்இல்புக் கன்ன கல்லளை வதிமின் 255

விடியற்காலத்தில் செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல்

அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பி வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்துகானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்  

வழியில் மேற்கொள்ளவேண்டும் முன் எச்சரிக்கைகள்

கயம்கண் டன்ன அகன்பை யங்கண்மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும 260துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கிஇகந்துசேட் கமழும் பூவும் உண்டோர் மறந்தமை கல்லாப் பழனும் ஊழிறந்துபெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்இருங்கால் வீயும் பெருமரக் குழாமும் 265இடனும் வலனும் நினையினர் நோக்கிக்குறியறிக் தவையவை குறுகாது கழிமின்கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின்நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின் 270

குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன

மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின்ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலைத்தேஎ மருளும் அமைய மாயினும்இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்குறவரு மருளுங் குன்றத்துப் படினே 275அகன்கட் பாறை துவன்றிக் கல்லெனஇயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்  

வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல்

பாடின் அருவிப் பயங்கெழு மீமிசைக்காடுகாத் துறையுங் கானவர் உளரேநிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள 280புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்திஉண்டற் கினிய பழனுங் கண்டோர் மலைதற் கினிய பூவுங் காட்டிஊறு நிரம்பிய ஆறவர் முந்துற நும்மி னெஞ்சத் தவலம் வீட 285இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர்அறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு குறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர்நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்துஅலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற் 290பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ  

மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்

கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறும்அருவிய நுகரும் வானர மகளிர்வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் 295தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசைஇலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல் விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின் 300எய்தெற இழுக்கிய கானவர் அழுகைகொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பெனஅறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை 305மலைமா ரிடூஉம் ஏமப் பூசல்கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின்ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடுநெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல் 310கைக்கோண் மறந்த கருவிரன் மந்திஅருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்சிறுமை யுற்ற களையாப் பூசல்கலைகை யற்ற காண்பின் நெடுவரை 315நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளைஅருங்குறும் பெறிந்த கானவர் உவகைதிருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மெனநறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு 320மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென வான்றோய் மீமிசை அயருங் குரவைநல்லெழி னெடுந்தேர் இயவுவந் தன்னகல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசைநெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து 325உரவுச்சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாக ரோதைஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்கிளிகடி மகளிர் விளிபடு பூசல்இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு 330மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழையநல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை 335காந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி வன்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதைமழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக் 340கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பும்என்றிவ் வனைத்தும் இயைந்தொருங் கீண்டி 345அவலவு மிசையவுந் துவன்றிப் பலவுடன்அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக்  

நன்னனது மலை வழியில் செல்லும் வகை

குரூஉக்கட் பிணையல் கோதை மகளிர்முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண் 350விழவின் அற்றவன் வியன்கண் வெற்பேகண்ண் டண்ண்னெனக் கண்டுங் கேட்டுங்உண்டற் கினிய பலபா ராட்டியும்இன்னும் வருவ தாக நமக்கெனத்தொன்முறை மரபினி ராகிப் பன்மாண் 355செருமிக்குப் புகலுந் திருவார் மார்பன்உருமுரறு கருவிய பெருமலை பிற்படஇறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின் 360

குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி

மைபடு மாமலை பனுவலிற் பொங்கிக்கைதோய் வன்ன கார்மழைத் தொழுதிதூஉ யன்ன துவலை தூற்றலின்தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடுகாஅய்க் கொண்டநும் இயந்தொய் படாமற் 365கூவல் அன்ன விடரகம் புகுமின்இருங்கல் இகுப்பத் திறுவரை சேராது குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்துநின்று நோக்கினும் கண்வாள் வெளவும்மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு 370தண்டுகா லாகத் தளர்தல் ஓம்பிஊன்றினிர் கழிமின் ஊறுதவப் பலவேஅயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறைவெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்துக்கதிர்சினந் தணிந்த அமயத்துக் கழிமின் 375

அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்

உரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு புரைதவ உயரிய மழைமருள் பஃறோல்அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும்முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோல். 380இன்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்கைபிணி விடாஅது பைபயக் கழிமின்களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகல்தளிபொழி கானந் தலைதவப் பலவே 385ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்தெனநல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்செல்லா நல்லிசைப் பெயரொடு நட்டகல்லேசு கவலை எண்ணுமிகப் பலவேஇன்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத் 390தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின்  

புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல்

பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்சந்து நீவிப் புன்முடிந் திடுமின்  

நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள்

செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்து 395கடவு ளோங்கிய காடேசு கவலைஒட்டா தகன்ற ஒன்னாத் தெவ்வர் சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவேதேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகைஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே 400மேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர்ஆங்கன மற்றே நம்ம னோர்க்கேஅசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின்  

கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம்

புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து 405சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடைதலையிரும்பு கதழும் நாறுகொடிப் புறவின்வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர்வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின் 410பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும் புலம்புசேண் அகலப் புதுவிர் ஆகுவிர் பகர்விரவு நெல்லின் பலவரி யன்னதகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் 415பல்யாட் டினநிரை எல்லினிர் புகினே பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்னமெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின் 420

நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை

கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்கொடுவிற் கூளியர் கூவை காணிற்படியோர்த் தேய்த்த பணிவில் ஆண்மைக்கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினேதடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ 425ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லைஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே  

மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல்

தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்தளிரொடு மிடைந்த காமரு கண்ணி 430திரங்குமர னாரிற் பொலியச் சூடிமுரம்புகண் ணுடைந்த நடவை தண்ணெனஉண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின்  

புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல்

செவ்வீ வேங்கைப் பூவி னன்னவேய்கொள் அரிசி மிதவை சொரிந்த 435சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ்அற்கிடை உழந்தநும் வருத்தம் வீடஅகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்பொன்னறைந் தன்ன நுண்ணேர் அரிசி 440வெண்ணெறிந் தியற்றிய மாக்கண் அமலைதண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாகஅசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் விசையங் கொழித்த பூழி யன்னஉண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை 445நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப் பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சிப் புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்  

நன்னனது தண் பணை நாட்டின் தன்மை

புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ்ப் 450பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும்நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே  

உழவர் செய்யும் உபசாரம்

கண்புமலி பழனங் கமழத் துழைஇ வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை 455நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற் பிடிக்கை யன்ன செங்கண் வராஅல் துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப் பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த 460விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத் துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர் முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு 465வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித்திண்டேர் நன்னற்கும் அயினி சான்மெனக்கண்டோர் மருளக் கடும்புடன் அருந்திஎருதெறி களமர் ஓதையொடு நல்யாழ்மருதம் பண்ணி அசையினிர் கழிமின் 470

சேயாற்றின் கரைவழியே செல்லுதல்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச்செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல்கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி வனைகலத் திகிரியிற் குமிழி சுழலும் துனைசெலற் றலைவாய் ஓவிறந் தொலிக்கும் 475காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின்  

நன்னனது மூதூரின் இயல்பு

நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇவியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து 480யாறெனக் கிடந்த செருவிற் சாறெனஇகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்கடலெனக் காரென ஒலிக்குஞ் சும்மையொடு மலையென மழையென மாட மோங்கித் துனிதீர் காதலின் இனிதமர்ந் துறையும் 485பனிவார் காவிற் பல்வண் டிமிரும்நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்  

மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்

பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்பருந்துபடக் கடக்கும் ஒள்வாண் மறவர்கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின் 490அருங்கடி வாயில் அயிராது புகுமின்மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி வந்தோர் மன்ற அளியர் தாமெனக்கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி 495விருந்திறை அவரவர் எதிர்கொளக் குறுகிப் பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட  

அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம்

எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்தொழுதி போக வலிந்தகப் பட்டமடநடை ஆமான் கயமுனிக் குழவி 500ஊமை எண்கின் குடாவடிக் குருளை மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள் வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வைஅளைச்செறி உழுவை கோளுற வெறுத்த 505மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவிஅரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற் பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை வரைப்பொலிந் தியலும் மடக்கண் மஞ்ஞைகானக் கோழிக் கவர்குரற் சேவல் 510கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம்இடிக்கலப் பன்ன நறுவடி மாவின் வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம் தூவற் கலித்த இவர்நனை வளர்கொடிகாஅய்க் கொண்ட நுகமரு ணூறை 515பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி குரூஉப்புலி பொருத புண்கூர் யானை முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள் வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்நாகந் திலக நறுங்காழ் ஆரம் 520கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறிதிருந்தமை விளைந்த தேக்கள் தேறல்கானிலை எருமைக் கழைபெய் தீந்தயிர்நீனிற வோரி பாய்ந்தென நெடுவரைநேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல் 525உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும்குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரிகடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்பநோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி  

முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல்

வானத் தன்ன வளமலி யானைத் 530தாதெருத் ததைந்த முற்ற முன்னி மழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்பக்கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக் 535கடவ தறிந்த இன்குரல் விறலியர்தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅதுஅருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை  

கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல்

விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக்குன்றா நல்லிசைக் சென்றோர் உம்பல் 540இன்றிவட் செல்லா துலகமொடு நிற்பஇடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்கொடைக்கட னிறுத்த செம்ம லோயெனவென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்சென்றது நொடியவும் விடாஅன் 545

நன்னன் கூறும் முகமன் உரை

நசைதர வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்  

நாளோலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல்

பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்துதிருநகர் முற்றம் அணுகல் வேண்டிகல்லென் ஒக்கல் நல்வலத் திரீஇ  

நன்னனது குளிர்ந்த நோக்கம்

உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து 550அகன்ற தாயத் தஃகிய நுட்பத்துஇலமென மலர்ந்த கைய ராகித்தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக்கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று 555வடுவாழ் எக்கர் மணலினும் பலரேஅதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடுநயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரிதுஉவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி 560

நன்னனது கொடைச் சிறப்பு

இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ முடுவல் தந்த பைந்நிணத் தடியொடுநெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாதுதலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து 565பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாதுசெல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தெனமெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்தலைவன் தாமரை மலைய விறலியர்சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய 570நீரியக் கன்ன நிரைசெலல் நெடுந்தேர் வாரிக் கொள்ளா வரைமருள் வேழம்கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரைபொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவிநிலந்தினக் கிடந்த நிதியமொ டனைத்தும் 575இலம்படு புலவர் ஏற்றகைந் நிறையக்கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக்கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரெனமழைசுரந் தன்ன ஈகை நல்கித் 580தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்வென்றெழு கொடியிற் றோன்றும்குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே.  

தனிப் பாடல்

தூஉஉத் தீம் புகை தொல் விசும்பு போர்த்ததுகொல்? பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்? மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார் மாஅமை எல்லாம் பசப்பு!    

மலைபடுகடாம் முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.